என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    தினமும் அல்லது செவ்வாய் கிழமை அல்லது சஷ்டி தினங்களில் கந்தர் சஷ்டி கவசத்தை 33 சொல்லி வந்தால் வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
    நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
    கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
    நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை

    குறள் வெண்பா

    அமரரிடர் தீர வமரம் புரிந்த
    குமரனடி நெஞ்சே குறி

    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
    பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம்பாடக் கிண்கிணியாட
    மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்
    கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து
    வரவர வேலா யுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக
    இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக
    வாசவன் மருக வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக
    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
    சரஹண பவனார் சடுதியில் வருக
    ரஹண பவச ரரரர ரரர
    ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
    விணபவ சரஹண வீரா நமோநம
    நிபவ சரஹண நிறநிற நிறென
    வசர ஹணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை யாளும் இளையோன் கையில்
    பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்
    பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
    விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
    உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
    கிலியும் சௌவும் கிளரொளியையும்
    நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
    சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
    ஆறுமுகமும் அணிமுடி யாறும்
    நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
    நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்
    ஈராறு செவியில் இலகு குண்டலமும்
    ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழகுடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
    இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செகண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென
    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
    டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து
    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா விநோதனென்
    றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்
    என்றனை வைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க
    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
    விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
    நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனை பெருவேல் காக்க
    முப்பத் திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
    கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
    மார்பை யிரத்தின வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க
    வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
    பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதி னாறும் பருவேல் காக்க
    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
    பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
    வட்டக் குதத்தை வடிவேல் காக்க
    பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
    கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
    முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
    பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
    நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பா நாடியை முனைவேல் காக்க
    எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க
    அடியேன் வசனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
    அரையிரு டன்னில் அனையவேல் காக்க
    ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியி நோக்க
    தாக்க தாக்க தடையறத் தாக்க
    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை யகல
    வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்
    அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்
    கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்
    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
    இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்
    கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
    ஆனை யடியினில் அரும்பாவைகளும்
    பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைக ளுடனே பலகல சத்துடன்
    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோரும்
    ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்
    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
    வாய்விட்டலறி மதிகெட்டோடப்
    படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
    கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
    கட்டி யுருட்டு கைகால் முறியக்
    கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு
    முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதிற் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு
    குத்து குத்து கூர்வடி வேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது வாக
    விடுவிடு வேலை வெகுண்டது வோடப்
    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்
    ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
    ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
    வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
    சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்கு
    குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
    பக்கப் பிளவை படர் தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத் தரணை பருவரை யாப்பும்
    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லா தோட நீயெனக் கருள்வாய்
    ஈரே ழலகமும் எனக்குற வாக
    ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
    மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
    உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
    சரஹண பவனே சையொளி பவனே
    திரிபுர பவனே திகழொளி பவனே
    பரிபுர பவனே பவமொழி பவனே
    அரிதிரு மருக அமரா பதியைக்
    காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வேலவனே
    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    தணிகா சலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாழ் பால குமரா
    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
    சமரா புரிவாழ் சண்முகத் தரசே
    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்னாவிருக்க யானுனைப் பாட
    எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினே னாடினேன் பரவசமாக
    ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை
    நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன் பதம் பெறவே உன்னரு ளாக
    அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்
    மெத்தமெத் தாக வேலா யுதனார்
    சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத்துவசம்
    வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
    பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்
    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
    பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்
    கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
    காலையில் மாலையில் கருத்துட னாளும்
    ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி
    நேச முடனொரு நினைவது வாகி
    கந்தர் சஷ்டி கவச மிதனைச்
    சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே nஐபித்து உகந்து நீறணிய
    அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்
    திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
    மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
    நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
    கந்தர்கை வேலாம் கவசத் தடியை
    வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்
    சர்வ சத்துரு சங்கா ரத்தடி
    அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
    வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
    சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
    இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
    குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி
    எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி
    தேவர்கள் சேனா பதியே போற்றி
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி
    திறமிகு திவ்விய தேகா போற்றி
    இடும்பா யுதனே இடும்பா போற்றி
    கடம்பா போற்றி கந்தா போற்றி
    வெற்றி புனையும் வேலே போற்றி
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
    மயில்நட மிடுவாய் மலரடி சரணம்
    சரணம் சரணம் சரஹண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்.
    ராமாயணம், பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காகவும் ஒரு பாடல் பாடி உள்ளார்.
    ராமாயணம், பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காகவும் ஒரு பாடல் பாடி உள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயரைத் தொடர்புபடுத்தி உள்ளார். இதோ அந்த பாடல்: 

    'அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி 
    அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி 
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில் 
    அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்' 

    இதன் பொருள் : 

    ஐம்பூதங்களுள் ஒன்றாகிய காற்றுக்கு மைந்தனாகிய அனுமன், ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நீர்ப்பரப்பாகிய கடலைத்தாண்டி, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தையே வழியாகக் கொண்டு இலங்கையை அடைந்து, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நிலமகள் பெற்றெடுத்த சீதையைக் கண்டு, அயலார் ஊரில் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயை வைத்தான். 

    இதன் மூலம் ஆஞ்சநேயர் ஐம்பூதங்களையும் தமக்குள் கட்டுப்படுத்தியவர் என்பது தெளிவாகிறது. எனவே ஆஞ்சநேயரை வணங்கினால் ஐம்பூதங்களையும் வணங்கியதற்குச் சமமாகும். ஆஞ்சநேயரை வணங்கினால் ஐம்பூதங்களின் சக்தியும் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அனைத்து வளங்களையும் அருளும் முருகனின் ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    ஓம் நமோ பகவதே 
    சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே 
    ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார 
    காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய 
    வீராய சூராய மக்தாய மஹா பலாய 
    பக்தாய பக்த பரிபாலனாயா 
    தனாய தனேஸ்வராய 
    மம ஸர்வா பீஷ்டம் 
    ப்ரயச்ச ஸ்வாஹா! 
    ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ! 

    - இதை தினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரகிக்கப்படும் மந்திரமாகும். 

    கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் நம்பிக்கை.
    கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம். 

    பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம் 
    ப்ருந்தாரகைர்வந்திதாம் 
    மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம் 
    மந்தஸ்மிதாம் ஸுந்தரீம் 
    பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம் 
    போகாபவர்கப்ரதாம் 
    வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம் 
    வாஞ்சானுகூலாம் ஸிவாம் 

    பொருள் :

    செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, 

    அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

    எந்த செயலை தொடங்கும் முன்பும் இந்த மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி கிட்டும்.
    பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை: 
    மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா 
    ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா 
    கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ: 

    பொதுப் பொருள் : 

    சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.

    வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஷீரடி சாய்பாபாவின் ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே 
    ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்க வாரகாய 
    ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீ ஸாயிநாதாய நம: 

    பொதுப் பொருள்: மும்மூர்த்திகளும் ஒருவராய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே, நமஸ்காரம். இந்த உலகத்தை காப்பவரே, உமக்கு நமஸ்காரம். 

    பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் இருப்பவரே நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே, சாய் நாதரே தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். 

    (இத்துதியை வியாழக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்பட்டு, மன அமைதியும் கிட்டும்.)
    சிவனுக்கு உகந்த நாட்களில் அல்லது தினமும் இந்த சிவபுராணத்தை சொல்லி வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
    தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி
    நேயத்தே நின்ற நிமல னடி போற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
    சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச்
    சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான்

    கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலாற் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா அ நின்ற இத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

    ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்றன்னை

    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறத்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன் பாகிக் கசிந்து ள்ளுருகும்
    நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா வமுதே அளவிளாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    நீரா யுருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே யுள்ளானே

    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்குமெங்காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக் காய் நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகல சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    ஆதாரே ப்ரதம: ஸஹஸ்ர கிரண: தாராதிப: ஸவாலயே
    மா ஹேயோ மணிபூரகே ஹ்ருதிபுத கண்டேச வாசஸ்பதி:
    ப்ருமத்யே ப்ருகு நந்தன: தினமணே: புத்ர த்ரிகூட ஸ்தலே
    நாடீ மர்மஸு ராஹு கேது குளிகர: குர்யாத் ஸனோ மங்களம்.

    பொதுப் பொருள்: மூலத்தில் கதிரவனும் ஸ்வாதிஷ்டானத்தில் சந்திரனும் மணிபூரகத்தில் சீலமிகு அங்காரகனும் அநாகத்தில் புதனும் விசுத்தியிலே குருவும் சுக்கிரபகவான் ஆக்ஞையிலும் சனிபகவான் சுழிமுனையிலும் நாடிதனில் ராகுவும் மர்மக் குறிதனில் கேதுபகவானும் நின்று எங்களுக்கு எப்போதும் நன்மைகளைப் பெருக்கட்டும்; எங்கள் துயரங்களை விலக்கட்டும்.

    (இத்துதியை தினந்தோறும் பாராயணம் செய்து வர நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகன்று நன்மையே நிலைக்கும்.)
    கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடையை போக்கும் துர்க்கா தேவி கவத்தை கீழே பார்க்கலாம்.
    கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இச்சுலோகம் மிகவும் சிறந்தது.

    ச்ருணு தேவி ப்ரவக்ஷயாமி கவசம் ஸர்வஸித்திதம்
    படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
    அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
    ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
    உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
    சக்ஷஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
    ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
    ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
    அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
    ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
    கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
    மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
    ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
    ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

    தினமும் சொல்ல வேண்டிய சர்வ வித்யா கணபதி மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
    ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
    வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

    - இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
    இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய மந்திரமாகும்.
    "ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் 
    ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய"

    இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய மந்திரமாகும். திருவேங்கடவனின் திருவருளை பெறும் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று.

    முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்யவும்.

    இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் சொல்லத் தொடங்குதல் கூடுதல் நலம் பயக்கும். இம்மந்திரத்தை துதிப்பதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று திருமலையானின் தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
    கல்வியும், விவேகமும் பெருக சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வர வேண்டும்.
    சரஸ்வதி மந்திரம்  :

    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    ஸர்வ ஸித்தீச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

    ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
    ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

    ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
    காமராஜாய தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்

    ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்

    ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீ ப்ரசோதயாத்
    ×