என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
    அஸ்வினி :

    ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
    சுதாகராயை தீமஹி
    தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

    பரணி :

    ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
    தண்டதராயை தீமஹி
    தன்னோ பரணி ப்ரசோதயாத்

    கிருத்திகை :

    ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
    மஹாதபாயை தீமஹி
    தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

    ரோஹிணி :

    ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
    விச்வரூபாயை தீமஹி
    தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

    மிருகசீரிடம் :

    ஓம் சசிசேகராய வித்மஹே
    மஹாராஜாய தீமஹி
    தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

    திருவாதிரை :

    ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
    பசும்தநாய தீமஹி
    தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

    புனர்பூசம் :

    ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
    அதிதிபுத்ராய த தீமஹி
    தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

    பூசம் :

    ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
    மஹா திஷ்யாய தீமஹி
    தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

    ஆயில்யம் :

    ஓம் ஸர்பராஜாய வித்மஹே
    மஹா ரோசனாய தீமஹி
    தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

    மகம் :

    ஓம் மஹா அனகாய வித்மஹே
    பித்ரியா தேவாய தீமஹி
    தன்னோ மகஃப்ரசோதயாத்

    பூரம் :

    ஓம் அரியம்நாய வித்மஹே
    பசுதேஹாய தீமஹி
    தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

    உத்திரம் :

    ஓம் மஹாபகாயை வித்மஹே
    மஹாச்ரேஷ்டாயை தீமஹி
    தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

    அஸ்தம் :

    ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
    ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
    தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

    சித்திரை :

    ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
    ப்ரஜாரூபாயை தீமஹி
    தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

    சுவாதி :

    ஓம் காமசாராயை வித்மஹே
    மகாநிஷ்டாயை தீமஹி
    தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

    விசாகம் :

    ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
    மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
    தன்னோ விசாகா ப்ரசோதயாத்

    அனுஷம் :

    ஓம் மித்ரதேயாயை வித்மஹே
    மஹா மித்ராய தீமஹி
    தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

    கேட்டை :

    ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
    மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
    தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

    மூலம் :

    ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
    மஹப்ராஜையை தீமஹி
    தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

    பூராடம் :

    ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
    மஹாபிஜிதாயை தீமஹி
    தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

    உத்திராடம் :

    ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
    மஹா ஷாடாய தீமஹி
    தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

    திருவோணம் :

    ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
    புண்யஸ்லோகாய தீமஹி
    தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

    அவிட்டம் :

    ஓம் அக்ர நாதாய வித்மஹே
    வசூபரீதாய தீமஹி
    தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

    சதயம் :

    ஓம் பேஷஜயா வித்மஹே
    வருண தேஹா தீமஹி
    தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

    பூரட்டாதி :

    ஓம் தேஜஸ்கராய வித்மஹே
    அஜஏகபாதாய தீமஹி
    தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    உத்திரட்டாதி :


    ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
    ப்ரதிஷ்டாபநாய தீமஹி
    தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    ரேவதி :


    ஓம் விச்வரூபாய வித்மஹே
    பூஷ்ண தேஹாய தீமஹி
    தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
    இந்த வாராஹி தியான மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
    கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

    மந்திரம்

    ஓம் வாம் வாராஹி நம:
    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    காயத்ரி மந்திரம்

    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
    காளி அன்னையின் காயத்திரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். இவ்வாறு சொல்வதால், காளியானவள் நமக்கு தைரியத்தை கொடுப்பாள்.
    காளி காயத்திரி மந்திரம்:

    ‘ஓம் காளியை ச வித்மஹே
    ச்மசான வாசின்யை தீமஹி
    தன்னோ கோர ப்ரசோதயாத்’

    பொருள்:- காளி தேவியை அறிவோமாக. மயானத்தில் வசிக்கும் அவள் மீது தியானம் செய்கிறோம். கோர ரூபமுடைய அவள் நம்மை காத்து அருள் செய்வாளாக.

    காளிதேவியை வீட்டிலோ, ஆலயத்திலோ வழிபடும்போது, முதலில் காளிதேவியை, அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். பின்னர் அன்னையின் காயத்திரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். இவ்வாறு சொல்வதால், காளியானவள் நமக்கு தைரியத்தை கொடுப்பாள். அறிவாற்றலை வளர்ப்பாள். பகைவர்கள் விலகுவார்கள். வேண்டும் வரங்கள் அருள்வாள்.
    நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 7-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
    ஏழாம் நாள் போற்றி

    ஓம் மெய்த் தவமே போற்றி
    ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி
    ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி
    ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி
    ஓம் அகிலலோக நாயகி போற்றி
    ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி
    ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி
    ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி
    ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி
    ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி
    ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி
    ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி
    ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி
    ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி
    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
    ஓம் சாம்பவி மாதே போற்றி
    நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 6-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
    ஆறாம் நாள் போற்றி :

    ஓம் பொன்னரசியே போற்றி
    ஓம் நவமணி நாயகியே போற்றி
    ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி
    ஓம் சிங்கார நாயகியே போற்றி
    ஓம் செம்பொன் மேனியளே போற்றி
    ஓம் மங்காத ஒளியவளே போற்றி
    ஓம் சித்திகள் தருவாய் போற்றி
    ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி
    ஓம் சுத்த பரிபூரணியே போற்றி
    ஓம் மகாமந்திர உருவே போற்றி
    ஓம் மாமறையுள் பொருளே போற்றி
    ஓம் ஆநந்த முதலே போற்றி
    ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி
    ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி
    ஓம் மாகேஸ்வரியே போற்றி
    ஓம் மகா சண்டிகையே போற்றி
    நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 5-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
    ஐந்தாம் நாள் போற்றி
    ஓம் வீரசக்தியே போற்றி
    ஓம் திரிசூலியே போற்றி
    ஓம் கபாலியே போற்றி
    ஓம் தாளிசினியே போற்றி
    ஓம் கௌரி தேவியே போற்றி
    ஓம் உத்தமத் தாயே போற்றி
    ஓம் தர்மம் காப்பவளே போற்றி
    ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி
    ஓம் மெய்ஞான விதியே போற்றி
    ஓம் தாண்டவத் தாரகையே போற்றி
    ஓம் போற்றுவோர் துணையே போற்றி
    ஓம் பச்சைக் காளியே போற்றி
    ஓம் பவள நிறத்தினாய் போற்றி
    ஓம் ஆகாய ஒளியே போற்றி
    ஓம் பூதங்கள் உடையோய் போற்றி
    ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி
    நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 4-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
    நான்காவது நாள் போற்றி
    ஓம் கருணை வடிவேபோற்றி
    ஓம் கற்பகத் தருவேபோற்றி
    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி
    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி
    ஓம் கரும்பின் சுவையேபோற்றி
    ஓம் கார்முகில் மழையேபோற்றி
    ஓம் வீரத்திருமகளே போற்றி
    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி
    ஓம் பகைக்குப் பகையேபோற்றி
    ஓம் ஆவேசத் திருவேபோற்றி
    ஓம் தீமைக்குத் தீயேபோற்றி
    ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி
    ஓம் நாரணன் தங்கையேபோற்றி
    ஓம் அற்புதக் கோலமேபோற்றி
    ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி
    ஓம் புகழின் காரணியேபோற்றி
    ஓம் காக்கும் கவசமேபோற்றி
    ஓம் ரோகிணி தேவியேபோற்றி
    நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 3-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
    மூன்றாம் நாள் போற்றி
    ஓம் அறிவினுக்கறிவேபோற்றி
    ஓம் ஞானதீபமேபோற்றி
    ஓம் அருமறைப் பொருளேபோற்றி
    ஓம் ஆதிமூலமாய் நின்றவளேபோற்றி
    ஓம் புகழ்தரும் புண்ணியளேபோற்றி
    ஓம் நறும்பாகின் சுவையே போற்றி
    ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
    ஓம் பரமனின் சக்தியேபோற்றி
    ஓம் பாபங்கள் களைவாய்போற்றி
    ஓம் அன்பெனும் முகத்தவளேபோற்றி
    ஓம் அகிலத்தின் காப்பேபோற்றி
    ஓம் செம்மேனியளேபோற்றி
    ஓம் செபத்தின் விளக்கமேபோற்றி
    ஓம் தானியந் தருவாய் போற்றி
    ஓம் கல்யாணியம்மையேபோற்றி
    நவராத்திரி 9 நாட்களும் துர்கையை போற்றி பாடுவது நல்லது. 2-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
    இரண்டாவது நாள் போற்றி
    ஓம் வளம் நல்குவாய் போற்றி
    ஓம் நலந்தரும் நாயகி போற்றி
    ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி
    ஓம் அறத்தின் வடிவோய் போற்றி
    ஓம் மின் ஒளி அம்மா போற்றி
    ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி
    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி
    ஓம் எரம்பன் தாயானவளே போற்றி
    ஓம் எங்களின் தெய்வமே போற்றி
    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி
    ஓம் ஈரேழுலகிலிருப்பாய் போற்றி
    ஓம் சூளா மணியே போற்றி
    ஓம் சுந்தர வடிவே போற்றி
    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி
    ஓம் நட்புக்கரசியே போற்றி
    ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!-
    நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. முதல் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
    முதல் நாளுக்குரிய போற்றி
    ஓம் பொன்னே போற்றி!
    ஓம் மெய்ப்பொருளே போற்றி!
    ஓம் போகமே போற்றி!
    ஓம் ஞானச் சுடரே போற்றி!
    ஓம் பேரின்பக் கடலே போன்றி!
    ஓம் குமாரியே போற்றி!
    ஓம் குற்றங்களைவாய் போற்றி!
    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!
    ஓம் பேரருட்கடலே போற்றி!
    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!
    ஓம் அருட்கடலே போற்றி!
    ஓம் ஆனந்த அறிவொளி  போற்றி!
    ஓம் இருளகற்றுவாய் போற்றி
    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!
    ஓம் ஈயும் தயாபரி போற்றி!
    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    - இப்படி அர்ச்சனை முடிக்கவும்.
    மருதமலைக்குரிய ஒரு திருப்புகழ் பாடலை கீழே காணலாம்.
    தமிழ்நாட்டில் முருகப் பெருமான் கோவில் கொண்ட தலங்களையெல்லாம் நம் திருப்புகழ் கவிமணிகளால் இழைத்து அலங்கரித்தவர் அருணகிரிநாதர். சந்தன கவியின் ஊற்றாக திகழ்ந்தவர்.

    அருணகிரிநாதரை துதி செய்து அருள் பெற்றோர் பலர். ஒரு ஆனி மாதம் பவுர்ணமி கூடிய மூல நாளில் கந்தவேலின் வழியில் கலந்து பேரின்ப பெருவாழ்வில் அமர்ந்தருளினார் அருணகிரிநாதர். 

    அருணகிரிப் பெருமான் கொங்கு நாட்டுக்கு மூன்று முறை தல யாத்திரை மேற்கொண்டு ஏறக்குறைய 35 தலங்களுக்கு சென்று 160 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார். மருதமலைக்குரிய ஒரு திருப்புகழ் பாடலை கீழே காணலாம்.

    திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
    எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
    சினம் உடைஅரசுர் மனமது வெருவ
    மயிலது முடுகி விடுவோனே!
    அருவரை யாதனை உருவிட எரியும்
    அறுமுகம் உடைய வடிவேலா!
    பசலைய டணையும் இளமுலை மகளை
    மதன்விடு பகழி தொடலாமோ!
    கரிதிரு முகமும் இடைஉடை வயிறும்
    உடையவர் பிறகு வருவோனே!
    கனதனம் உடைய குறவர் தம்மகளை
    கருணைய டணையும் மணிமார்பா!
    அவரணை துயிலும் அரிதிரு மருகா
    அணிசெயுமருத மலையோனே!
    அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
    அற அருள்உதவ பெருமாளே!

    (திருப்புகழ் - அருணகிரிநாதர்)
    மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.

    தீபஜ்யோதி பரம் பிரம்ம
    தீபஜ்யோதிர் ஜனார்த்தன
    தீபோஹரது மே பாபம்
    சந்த்யாதீப நமோஸ்துதே
    சுபம் கரோது கல்யாணம்
    ஆரோக்யம் சுகசம்பதம்
    மம புத்தி ப்ரகாசாய
    தீப ஜ்யோதிர் நமோஸ்துதே
    ×