search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஐயப்பன் விரதத்திற்கு ஏற்றவர் யார்?
    X

    ஐயப்பன் விரதத்திற்கு ஏற்றவர் யார்?

    • உயர்ந்த சிறந்த விரதம் ஐயப்ப விரதமாகும்.
    • ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும்.

    ஐயப்பன் மீது பக்தி கொண்ட ஆண்கள் அனைவருமே விரதம் இருக்க தகுதி உடையவர்களே. பெண்களில் சிறுமிகளும், பெரியவர்களில் வீட்டு விலக்கு நின்று போனவர்களும் மட்டுமே இவ்விரதத்தை கடைபிடித்து சபரிமலை சென்று ஐயனைக் காணவேண்டும்.

    ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும். விரதத்தின் அம்சம்: "நான்" என்ற அகங்காரம், கெட்டப்புத்தி, எல்லாம் எனக்கே என்ற சுயநலம் என்பன சிறிதளவும் காண முடியாத உயர்ந்த சிறந்த விரதம் ஐயப்ப விரதமாகும்.

    இவ்விரதம் இருப்பவர்கள் எல்லோருமே எதிரே ஒரு ஐயப்ப பக்தரைக் கண்டால் சாமி! சாமி! என்றே ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வர். இதனால் ஜாதி, மத, பேதம் ஏதுமின்றி சரிநிகர் சமமாய் ஒருமித்து போற்றக் கூடிய ஐயப்ப விரதம், விரதத்திற்கு எல்லாம் சிறந்த விரதம் என்று கூறலாம்.

    Next Story
    ×