search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சிவலிங்க வழிபாடு
    X
    சிவலிங்க வழிபாடு

    சித்திரை மாத வளர்பிறை பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...

    சித்திரை மாதத்தில் வருகின்ற சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.
    பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் சிவனை வழிபடுவதற்குரிய சிறப்பு தினமாக சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினம் வருகிறது இந்தப் பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    பல சிறப்புகள் நிறைந்த சித்திரை மாதத்தில் அனேகமாக அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. அதிலும் மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் மங்களங்களை அதிகம் தரும் மாதமான சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

    சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினமான இன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.

    இன்றைய தினம் முழுவதும் சிவபெருமானின் துதியை சொல்லிய படி இருக்க வேண்டும். சிவபெருமான் துதி தெரியாதவர்கள் சிவாயநம என்ற மந்திரத்தை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

    இம்முறையில் சித்திரை வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வணங்குவதால் உங்களின் தரித்திரங்கள், துரதிர்ஷ்டங்கள் நீங்கி வாழ்வில் வளமை பெருகும். திருமண தடை, குழந்தை பேறில்லாமை போன்ற குறைகள் நீங்கும். நவகிரகங்களில் புதன் பகவான் பெருமாளின் அம்சமாக இருப்பதால், அவரின் அருட்பார்வை உங்களுக்கு வாழ்வில் சுகங்கள், செல்வ சேர்க்கை உண்டாக்கும்.

    Next Story
    ×