என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
X
41 நாள் ஐயப்பன் விரதத்தில் அடங்கியுள்ள ஐதீகம்
Byமாலை மலர்8 Dec 2021 1:28 AM GMT (Updated: 8 Dec 2021 1:28 AM GMT)
சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும்.
பரசுராமன் பிரதிஷ்டை செய்த விக்கிரகத்தில் ஸ்ரீ ஐயப்பன் சென்று ஐக்கியமானவர் என்பது ஐதீகம். இருமுடி கட்டுடன் சரணம் முழங்கி மலையேறும் போது அதன் பொருள் அறிந்து செல்ல வேண்டும். தன் தாய் பந்தள ராணியின் நோய் நீங்கப்புலிப்பாலுக்காக தயார் செய்து தான் இருமுடி கட்டு. அமைச்சர், ஐயப்பன் மீது காட்டிய வஞ்சனையின் தண்டனையாக 41 நாள் விரதம் மேற்கொண்டது தான் பிற்காலத்தில் 41 நாள் விரதமாக பழக்கத்திற்கு வந்தது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி ஐயப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் ஐயப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது.
பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலை முறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
60 ஆண்டுகளுக்கு முன்பு வரை சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றவர் சில நூறு பேர் மட்டுமே. வாகன வசதி வந்த பிறகு தான் சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து இன்று பல கோடி ஆகிவிட்டது.
ஒரு ஐயப்ப பக்தர் மாலை அணிந்ததில் இருந்து அவர் சபரிமலை சென்று திரும்பும்வரை தினமும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது எரிய வேண்டும். சபரிமலை செல்லும் பக்தருக்கு இந்த விளக்கு வழி காட்டுவதாக ஐதீகம் உள்ளது. சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும். அதன் பிறகே வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி ஐயப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் ஐயப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது.
பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலை முறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
60 ஆண்டுகளுக்கு முன்பு வரை சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றவர் சில நூறு பேர் மட்டுமே. வாகன வசதி வந்த பிறகு தான் சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து இன்று பல கோடி ஆகிவிட்டது.
ஒரு ஐயப்ப பக்தர் மாலை அணிந்ததில் இருந்து அவர் சபரிமலை சென்று திரும்பும்வரை தினமும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது எரிய வேண்டும். சபரிமலை செல்லும் பக்தருக்கு இந்த விளக்கு வழி காட்டுவதாக ஐதீகம் உள்ளது. சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும். அதன் பிறகே வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X