search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நடராஜர்
    X
    நடராஜர்

    வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமைய விரதம்

    நம்மைத் தேடி இறைவன் வந்து காட்சி கொடுக்கும் திருநாள் தான் திருவாதிரை தரிசனமாகும். அன்றைய தினம் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும் என்று சொல்வார்கள்.
    நடராஜர் தரிசனம் ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும். ஆனி மாதத்தில் வரும் தரிசனம் ‘ஆனித் திருமஞ்சனம்’. மார்கழி மாதத்தில் வரும் தரிசனம் ‘திருவாதிரை தரிசனம்’ என்று கூறப்படுகிறது.

    இந்த நாளில் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில் ஈஸ்வரனும், ஈஸ்வரியும் திருவீதி உலா வருவதும் நடைபெறும். எல்லா சிவாலயங்களிலும் இந்த விழாவைக் கொண்டாடுவது வழக்கம்.

    காட்சி தரும் கடவுளை அன்றைய தினம் கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும் என்று சொல்வார்கள். ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் 15-ந் தேதி (30.12.2020) புதன்கிழமை அன்று வருகின்றது.

    நரியைப் பரியாக்கிய திருவிளையாடலைப் போல நம் வாழ்விலும் சிவபெருமான் நடக்காத காரியத்தை நடத்திக் காட்டுவார். மாணிக்கவாசகருக்கு முக்கியத்துவம் வாய்ந்த திருநாள் அது. நம்மைத் தேடி இறைவன் வந்து காட்சி கொடுக்கும் திருநாள் தான் திருவாதிரை தரிசனமாகும்.
    Next Story
    ×