என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அறுபடை வீடு
    X
    அறுபடை வீடு

    விரதம் இருந்து அறுபடை வீடுகளை தரிசனம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

    விரதம் இருந்து முருகனின் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபாடு செய்தால் எந்த வகையான வேண்டுதல்கள் நிறைவேறும் என்று குறித்து பார்க்கலாம்.
    சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால். ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

    திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை விரதம் இருந்துவழிபட்டால் திருமணம் நடைபெறும்.

     திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை, விரதம் இருந்துகடலில் நீராடி, பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.

     திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், தெளிந்த ஞானம் கிடைக்கும்.

    சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை  விரதம் இருந்து வழிபட்டால். ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

     திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை முருகனை விரதம் இருந்து வழிபட்டால், மனதிலிருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.

     பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை விரதம் இருந்து வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனையில் நீராடுதல் மிகவும் சிறப்பு.  தன்னை வழிபட்டவருக்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். 
    Next Story
    ×