என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விரதம் இருந்து எலுமிச்சை விளக்கேற்றும் முறை
Byமாலை மலர்7 Jun 2019 7:28 AM GMT (Updated: 7 Jun 2019 7:28 AM GMT)
ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. இந்த நேரத்தில் விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வந்தால் எண்ணங்கள் நிறைவேறும்.
ராகு கால துர்க்கை பூஜையில் முதலிடம் பெறுவது, எலுமிச்சைப் பழ விளக்கு ஆகும். விளக்கேற்றும்போது சில மந்திரத்தை உச்சரிப்பது நன்மைகளை வழங்கும். அதாவது, பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின்னர் விளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றுகையில், ‘சாமுண்டாய விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கேற்றிய பிறகு கோவிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ‘ஐம்’ என்ற சொல் சரஸ்வதியையும், ‘க்ரீம்’ என்ற சொல் லட்சுமியையும், ‘க்லீம்’ என்ற சொல் காளியையும் குறிக்கும். ‘சாமுண்டாய விச்சே’ என்ற ‘சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே’ என பொருள்.
தீராத நோய்கள் தீர விரதம் இருந்து ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு விரதம் இருந்து வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு இரண்டு எலுமிச்சைப் பழ விளக்கு போட்டு, அம்மனை நோக்கி தீபம் இருக்குமாறு ஏற்ற வேண்டும்.
ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். ஒரு நாழிகை நேரம் என்பது 24 நிமிடங்கள் ஆகும். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. இதில் மிகவும் விசேஷமாகக் கருதப்படுவது, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் விரத வழிபாடு ஆகும். இதற்குரிய தெய்வம் ‘மங்கல சண்டிகா.'
விளக்கேற்றிய பிறகு கோவிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ‘ஐம்’ என்ற சொல் சரஸ்வதியையும், ‘க்ரீம்’ என்ற சொல் லட்சுமியையும், ‘க்லீம்’ என்ற சொல் காளியையும் குறிக்கும். ‘சாமுண்டாய விச்சே’ என்ற ‘சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே’ என பொருள்.
தீராத நோய்கள் தீர விரதம் இருந்து ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு விரதம் இருந்து வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு இரண்டு எலுமிச்சைப் பழ விளக்கு போட்டு, அம்மனை நோக்கி தீபம் இருக்குமாறு ஏற்ற வேண்டும்.
ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். ஒரு நாழிகை நேரம் என்பது 24 நிமிடங்கள் ஆகும். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. இதில் மிகவும் விசேஷமாகக் கருதப்படுவது, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் விரத வழிபாடு ஆகும். இதற்குரிய தெய்வம் ‘மங்கல சண்டிகா.'
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X