search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடும்ப ஒற்றுமை தரும் விரதம்
    X

    குடும்ப ஒற்றுமை தரும் விரதம்

    மகா மக நாளில் விரதம் இருந்து சிவ-சக்தி ரூபங்களை வணங்கினால் அவர்களின் அருள் ஒருங்கே கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.
    சூரியனின் அதிதேவதை பரமேஸ்வரன். சந்திரனின் அதிதேவதை பார்வதிதேவி. ஆண் கிரக ராசியில் வரும் பெண் கிரகமான சந்திரன். பெண் கிரக ராசியில் வரும் ஆண் கிரகமான சூரியன். இது தான் மாசி மக பவுர்ணமி நாளின் சிறப்பு அம்சம்.

    எனவே இந்த நாட்களில் சிவனுக்குள் சக்தி ஐக்கியம், சக்திக்குள் சிவன் ஐக்கியம். எனவே மகா மக நாளில் விரதம் இருந்து சிவ-சக்தி ரூபங்களை வணங்கினால் அவர்களின் அருள் ஒருங்கே கிடைக்கும்.

    இந்த பவுர்ணமியில் விரதம் இருந்து பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பார்வதி பரமேஸ்வரரை வழிபட, திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியின் ஒற்றுமை, குடும்பத்தில் இன்பம் பெருகும்.
    Next Story
    ×