என் மலர்
இஸ்லாம்
நபிகளார் தைரியமாக முஸ்லிம்களான நம்பிக்கையாளர்களுடன் இஸ்லாமிய அழைப்பை வெளிப்படையாகச் செய்யத் தொடங்கினர்.
“நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட போது நபிகளார் தைரியமாக முஸ்லிம்களான நம்பிக்கையாளர்களுடன் இஸ்லாமிய அழைப்பை வெளிப்படையாகச் செய்யத் தொடங்கினர்.
ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று தனது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையினரையும் மற்றவர்களையும் சந்தித்துப் பேசியபோது, நபிகளாரின் தந்தையின் சகோதரரின் மகன் அபூ லஹப் “உனது தந்தையின் சொந்தங்களுக்கு நீ பெரும் தீங்கிழைக்கிறாய்.
இந்த அழைப்பு மிகவும் இழிவானது. உன்னை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நாமே தடுத்துவிடுவோம்” என்று கோபத்துடன் பேசினான். ஆனால் நபிகளாரின் மீது பாசம்காட்டி வளர்த்த அபூதாலிப் “நான் உயிருடன் இருக்கும்வரை முஹம்மதை பாதுகாப்பேன், அவருக்கு உதவி செய்வேன். ஆனால் நான் காலகாலமாகப் பின்பற்றி வரும் மார்க்கத்தை விட்டுவிட மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
அதற்கு நபிகளார் “இரத்த பந்தத்திற்கான கடமைகளை நான் நிறைவேற்றுவேன். ஆனால் உங்களுடைய நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ் மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும். அல்லாஹ்விற்கு மற்றொன்றை இணையாக்கினால் கடும் வேதனையை நீங்கள் எதிர்நோக்குவீர்களென உங்களையெல்லாம் எச்சரிக்கிறேன்” என்று எல்லாத் தருணங்களிலும் எல்லாக் கிளையினரிடமும் சொல்லி வந்தார்கள்.
நபிகளார் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லமாட்டார் என்று தெரிந்தவர்கள் இது குறித்து யோசிக்க ஆரம்பித்தனர். ஆனால் அபூ லஹப் “நீ நாசமாகப் போ. இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று ஆதங்கப்பட்டான். அப்போது ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும். அவனும் நாசமாகட்டும்’ என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பட்டது.
இஸ்லாமிய அழைப்பை நிறைவேற்றும்போது கண்டிப்பாக மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும். பொய்யுரைக்கிறார், சூனியம் செய்கிறார், பைத்தியகாரர் என்ற அவச்சொல்லையெல்லாம் நபிகளார் சந்திக்க நேரிடும் என்பதாலும் அவற்றை முஹம்மது நபி (ஸல்) தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மற்ற நபிகளின் வரலாறுகளை முன்னுதாரணமாக இறைவசனங்களாக இறைவன் அருளியிருந்தான். அதைப் பற்றியெல்லாம் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தெரிந்தே வைத்திருந்தனர். அதனால் யாருடைய சொல்லும் அவர்களைப் பாதிக்கவில்லை. இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்தார்கள்.
ஏகத்துவ அழைப்பிற்கு மக்களின் ஆதரவு பெருகியது. இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சிக்கல்கள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சி அதிகரித்தது. அதனைக் கண்டு குறைஷிகள் கோபமடைந்தனர்.
திருக்குர்ஆன் 26:214, 111:1-5, ஸஹீஹ் புகாரி 5:65:4770
- ஜெஸிலா பானு.
ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று தனது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையினரையும் மற்றவர்களையும் சந்தித்துப் பேசியபோது, நபிகளாரின் தந்தையின் சகோதரரின் மகன் அபூ லஹப் “உனது தந்தையின் சொந்தங்களுக்கு நீ பெரும் தீங்கிழைக்கிறாய்.
இந்த அழைப்பு மிகவும் இழிவானது. உன்னை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நாமே தடுத்துவிடுவோம்” என்று கோபத்துடன் பேசினான். ஆனால் நபிகளாரின் மீது பாசம்காட்டி வளர்த்த அபூதாலிப் “நான் உயிருடன் இருக்கும்வரை முஹம்மதை பாதுகாப்பேன், அவருக்கு உதவி செய்வேன். ஆனால் நான் காலகாலமாகப் பின்பற்றி வரும் மார்க்கத்தை விட்டுவிட மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
அதற்கு நபிகளார் “இரத்த பந்தத்திற்கான கடமைகளை நான் நிறைவேற்றுவேன். ஆனால் உங்களுடைய நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ் மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும். அல்லாஹ்விற்கு மற்றொன்றை இணையாக்கினால் கடும் வேதனையை நீங்கள் எதிர்நோக்குவீர்களென உங்களையெல்லாம் எச்சரிக்கிறேன்” என்று எல்லாத் தருணங்களிலும் எல்லாக் கிளையினரிடமும் சொல்லி வந்தார்கள்.
நபிகளார் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லமாட்டார் என்று தெரிந்தவர்கள் இது குறித்து யோசிக்க ஆரம்பித்தனர். ஆனால் அபூ லஹப் “நீ நாசமாகப் போ. இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று ஆதங்கப்பட்டான். அப்போது ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும். அவனும் நாசமாகட்டும்’ என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பட்டது.
இஸ்லாமிய அழைப்பை நிறைவேற்றும்போது கண்டிப்பாக மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும். பொய்யுரைக்கிறார், சூனியம் செய்கிறார், பைத்தியகாரர் என்ற அவச்சொல்லையெல்லாம் நபிகளார் சந்திக்க நேரிடும் என்பதாலும் அவற்றை முஹம்மது நபி (ஸல்) தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மற்ற நபிகளின் வரலாறுகளை முன்னுதாரணமாக இறைவசனங்களாக இறைவன் அருளியிருந்தான். அதைப் பற்றியெல்லாம் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தெரிந்தே வைத்திருந்தனர். அதனால் யாருடைய சொல்லும் அவர்களைப் பாதிக்கவில்லை. இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்தார்கள்.
ஏகத்துவ அழைப்பிற்கு மக்களின் ஆதரவு பெருகியது. இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சிக்கல்கள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சி அதிகரித்தது. அதனைக் கண்டு குறைஷிகள் கோபமடைந்தனர்.
திருக்குர்ஆன் 26:214, 111:1-5, ஸஹீஹ் புகாரி 5:65:4770
- ஜெஸிலா பானு.
நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல் அபூபக்ர் (ரலி) அவர்களும் பலரின் நேசத்திற்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்புப் பணி மிகவும் இரகசியமாகவே தொடங்கப்பட்டது. அதற்குக் காரணம் அரேபிய தீபகற்பத்தின் தலைமையான மக்காவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களின் நம்பிக்கைகளையும், வழிமுறைகளையும், கொள்கைகளையும் முற்றிலும் தகர்க்க முனைந்தால் அதன் எதிர்வினை அபாயகரமாக இருக்குமென்று தொடக்கத்தில் நபிகளார் தமது வீட்டிலிருந்தே அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள்.
அழைப்புப் பணியின் முதல் நாளில் இஸ்லாமை ஏற்றவர்களில் நபிகளாரின் நெருங்கிய நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களின் சொல்லுக்கு மரியாதை இருந்தது. நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல் அபூபக்ர் (ரலி) அவர்களும் பலரின் நேசத்திற்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார்கள். அதனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களான உஸ்மான் இப்னு அஃப்பான், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும், குறைஷி குலத்திலிருந்து பலரும், மற்ற குலத்திலிருந்து சிலரும் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.
நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்க, அந்த நெருக்கமானவர்களின் நெருக்கமானவர்களும் குடும்பத்தார்களுமென்று கிட்டதட்ட 120 நபர்களுக்கு மேல் இஸ்லாமை ஏற்றனர். அவர்களை திருக்குர்ஆனில் ‘அஸ்ஸாபிகூனல் அவ்வலூன்’ அதாவது முந்தியவர்கள் முதலாமவர்கள் என்று போற்றப்பட்டுள்ளது.
அந்த முதன்மையானவர்கள் அல்லாஹ்வை வணங்கும்போது திருப்தியடைந்ததால், அல்லாஹ்வும் அவர்களின் செயலால் திருப்தி அடைகிறான் என்றும் அவர்களுக்குச் சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான் என்றும் திருக்குர்ஆனில் வந்துள்ளது.
இஸ்லாமை ஏற்றவர்கள் இரகசியமாகத் தொழுது வந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தொழுகை கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் இத்தனை வேளை தொழுகை என்றில்லாமல் தங்களால் இயலும்போதெல்லாம் தொழுதார்கள். இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்களுக்காக அல்லாஹ் அனுப்பிய இறை வசனங்கள் மூலம் வந்த உபதேசங்களை முஸ்லிமானவர்கள் ஏற்றுக் கொண்டு பின்பற்றினர். அவ்வசனங்களால் அவர்களின் ஆத்மா வலுப்பெற்று மனங்கள் தூய்மையடைந்து, அதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு புதிய நாகரீகத்திற்கு அவர்களைத் தயார்படுத்தியது.
இந்த இரகசிய இஸ்லாமிய அழைப்பு பற்றியும், இறை வசனங்களின் வருகை குறித்தும் குறைஷிகள் அறிந்தே இருந்தனர். ஆனால் அது அவர்களின் சிலை வணக்கங்களுக்குப் பங்கம் விளைவிக்காததால் இஸ்லாமிற்குத் திரும்பியவர்களை அவர்கள் விட்டு வைத்தனர். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்பை சிலையை வணங்கும் மக்காவாசிகள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
(சீறா இப்னு ஹிஷாம், திருக்குர்ஆன் 9:100)
- ஜெஸிலா பானு.
அழைப்புப் பணியின் முதல் நாளில் இஸ்லாமை ஏற்றவர்களில் நபிகளாரின் நெருங்கிய நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களின் சொல்லுக்கு மரியாதை இருந்தது. நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல் அபூபக்ர் (ரலி) அவர்களும் பலரின் நேசத்திற்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார்கள். அதனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களான உஸ்மான் இப்னு அஃப்பான், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும், குறைஷி குலத்திலிருந்து பலரும், மற்ற குலத்திலிருந்து சிலரும் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.
நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்க, அந்த நெருக்கமானவர்களின் நெருக்கமானவர்களும் குடும்பத்தார்களுமென்று கிட்டதட்ட 120 நபர்களுக்கு மேல் இஸ்லாமை ஏற்றனர். அவர்களை திருக்குர்ஆனில் ‘அஸ்ஸாபிகூனல் அவ்வலூன்’ அதாவது முந்தியவர்கள் முதலாமவர்கள் என்று போற்றப்பட்டுள்ளது.
அந்த முதன்மையானவர்கள் அல்லாஹ்வை வணங்கும்போது திருப்தியடைந்ததால், அல்லாஹ்வும் அவர்களின் செயலால் திருப்தி அடைகிறான் என்றும் அவர்களுக்குச் சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான் என்றும் திருக்குர்ஆனில் வந்துள்ளது.
இஸ்லாமை ஏற்றவர்கள் இரகசியமாகத் தொழுது வந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தொழுகை கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் இத்தனை வேளை தொழுகை என்றில்லாமல் தங்களால் இயலும்போதெல்லாம் தொழுதார்கள். இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்களுக்காக அல்லாஹ் அனுப்பிய இறை வசனங்கள் மூலம் வந்த உபதேசங்களை முஸ்லிமானவர்கள் ஏற்றுக் கொண்டு பின்பற்றினர். அவ்வசனங்களால் அவர்களின் ஆத்மா வலுப்பெற்று மனங்கள் தூய்மையடைந்து, அதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு புதிய நாகரீகத்திற்கு அவர்களைத் தயார்படுத்தியது.
இந்த இரகசிய இஸ்லாமிய அழைப்பு பற்றியும், இறை வசனங்களின் வருகை குறித்தும் குறைஷிகள் அறிந்தே இருந்தனர். ஆனால் அது அவர்களின் சிலை வணக்கங்களுக்குப் பங்கம் விளைவிக்காததால் இஸ்லாமிற்குத் திரும்பியவர்களை அவர்கள் விட்டு வைத்தனர். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்பை சிலையை வணங்கும் மக்காவாசிகள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
(சீறா இப்னு ஹிஷாம், திருக்குர்ஆன் 9:100)
- ஜெஸிலா பானு.
‘ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்ற நபிகளாரின் பொன்மொழி, ஸலாத்தின் சிறப்பை–மேன்மையைப் போற்றும் மொழியாகும்.
‘ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்ற நபிகளாரின் பொன்மொழி, ஸலாத்தின் சிறப்பை–மேன்மையைப் போற்றும் மொழியாகும்.
மனிதர்களுக்கு இடையே நேசத்தை–பிரியத்தை வளர்க்கும் ஆயுதம் ‘ஸலாம்’.
ஸலாம் சொல்வதில் ஒரு ஒழுங்கு முறை உள்ளது. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவர்களுக்கும், சிறு கூட்டத்தினர் பெருங்கூட்டத்தினருக்கும், சிறுவர்கள் பெரியவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும். இது ஒழுக்கத்தையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வகையில் கூறப்பட்ட ஒரு மரபாகும். இதற்கு மாறாக மற்றவர்கள் முதலில் ஸலாம் கூறினாலும் அதில் தவறேதும் இல்லை.
வாகனத்தில் செல்பவர், நடப்பவருக்கு ஸலாம் கூறும்போது, நடப்பவருக்கு அவரைப்பற்றி உண்டான அச்சம், பயம் நீங்கி விடும். வாகனத்தில் உள்ளவர் ஸலாம் கூறும்போது, நடப்பவரை விட நாம்தான் உயர்ந்தவர் என்ற கர்வம் ஏற்படாது. மாறாகப் பணிவு ஏற்படும். எண்ணிக்கையில் அதிகமானவர்களின் உரிமை அதிகமானதால், எண்ணிக்கையில் குறைவானவர்கள் அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்.
ஒருவரையொருவர் சந்திக்கும்போது ‘ஸலாம்’ கூறுவதைப் போன்றே, கரம் பற்றி வாழ்த்து தெரிவிப்பதும் நபி வழியாகும். இதை ‘முஸாபஹா’ என்பர். ஒருவரின் கை மற்றவரின் கையுடன் சேர்வதை இது குறிக்கும்.
இதில் இரு கைகளையும் பற்றி வாழ்த்து தெரிவிப்பதே சிறந்த முறையாகும். ‘நபித் தோழர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது கரம் பற்றி ‘முஸாபஹா’ செய்வார்கள். பயணத்தில் இருந்து வந்தால் கட்டித் தழுவிக் கொள்வார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஒரு வீட்டுக்குச் சென்றவுடன் உள்ளே நுழைவதற்கு முன்பு முதலில் ஸலாம் கூற வேண்டும். பிறகு உள்ளே செல்ல அனுமதி பெற வேண்டும்.
‘நம்பிக்கையாளர்களே! உங்களுடையது அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக)’ (திருக்குர்ஆன்–24: 27) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
ஒரு வீட்டுக்குச் சென்று அனுமதி கோரி கதவைத் தட்டும்போது உள்ளே இருப்பவர், ‘வந்திருப்பது யார்?’ என்று வினவினால், ‘நான்தான்’ என்று கூறக் கூடாது. தான் இன்னார் என்பதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பெயர், ஊர் போன்றவற்றைத் தெளிவாகக் கூற வேண்டும்.
முஸ்லிம்கள் நாள்தோறும் நடைமுறைப்படுத்துகின்ற ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்துச் சொல், ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.
இந்த வாழ்த்துச் சொல்லை எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் சொல்லலாம்.
‘‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’’ என்ற இந்தச் சொல்லை மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் சொல்லலாம்.
திருமண வீடுகளிலும் சொல்லலாம்; துக்க வீடுகளிலும் மொழியலாம். ஏனெனில் எல்லோருக்குமே சாந்தியும், சமாதானமும் தேவையானது. நிம்மதியும், அமைதியும் அனைவருக்கும் அவசியமானது.
இந்த வாழ்த்தைக் காலையிலும் கூறலாம்; மாலையிலும் கூறலாம்; இரவிலும் கூறலாம்.
ஆங்கில நடைமுறையான ‘குட் மார்னிங்’ (நல்ல காலைப் பொழுது) என்பதை மாலையிலோ இரவிலோ சொல்ல முடியாது. சோகமான இடங்களில் சொல்லக் கூடாது.
சோகமாக இருக்கும் ஒருவரிடம், ‘நல்ல காலைப் பொழுது’ என்று சொல்வது நல்லதல்ல.
மேலும், பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும் ‘ஸலாம்’ கூறலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் ‘ஸலாம்’ சொல்லலாம். தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம். பணக்காரர்கள் ஏழைகளுக்கும், ஏழைகள் பணக்காரர்களுக்கும் ‘ஸலாம்’ சொல்லலாம்.
வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம் போன்ற வாழ்த்துச் சொற்கள், வணங்குகிறேன் என்ற பொருளில் வழங்கப்படுகின்றன. இதோடு ஒப்பிடுகையில் இஸ்லாமியர்களின் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்துச் சொல் ஒப்பற்றது. அனைவரின் கவுரவத்தையும், மரியாதையையும் பேணுகின்ற வகையில் அமைந்துள்ளது.
‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக; இன்னும் இறைவனின் அருளும் அவனது நிரந்தரமான அபிவிருத்தியும் உண்டாகட்டும்’ என்று ஒருவருக்காக மற்றொருவர் வாழ்த்துவதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் போன்ற அடிப்படையில் அமைந்திருக்கிற இந்த வாழ்த்து இஸ்லாத்தின் தனிச்சிறப்பாகும்.
இதில் இன்னொரு மகத்தான மகத்துவமும் உள்ளது. பிற மதங்களில் ஏழைகள், பணக்காரர்களுக்கும், தொழிலாளர்கள், தொழில் அதிபர்களுக்கும் வாழ்த்து கூறுகின்ற நடைமுறை உள்ளது. ஆனால் முஸ்லிம்களுக் கிடையே இதில் நேர்மாறான நிலை காணப்படுகிறது. கோடீஸ்வரர்கள்கூட, சாதாரணமானவர்களைக் கண்டதும் ‘ஸலாம்’ சொல்ல முந்திக் கொள்வதைக் காணலாம்.
‘முஸ்லிம்களுக்கிடையே ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள்’ என்று நபிகளார் சொல்லி இருப்பதே இதற்குக் காரணமாகும்.
‘முதலில் ஸலாம் கூறுபவரே இறைவனுக்கு வழிபட்டு அவனை நெருங்குவதற்கு மக்களில் மிகவும் தகுதியானவர்’ என்பது நபிகளாரின் கூற்று.
மனிதர்களுக்கு இடையே நேசத்தை–பிரியத்தை வளர்க்கும் ஆயுதம் ‘ஸலாம்’.
ஸலாம் சொல்வதில் ஒரு ஒழுங்கு முறை உள்ளது. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவர்களுக்கும், சிறு கூட்டத்தினர் பெருங்கூட்டத்தினருக்கும், சிறுவர்கள் பெரியவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும். இது ஒழுக்கத்தையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வகையில் கூறப்பட்ட ஒரு மரபாகும். இதற்கு மாறாக மற்றவர்கள் முதலில் ஸலாம் கூறினாலும் அதில் தவறேதும் இல்லை.
வாகனத்தில் செல்பவர், நடப்பவருக்கு ஸலாம் கூறும்போது, நடப்பவருக்கு அவரைப்பற்றி உண்டான அச்சம், பயம் நீங்கி விடும். வாகனத்தில் உள்ளவர் ஸலாம் கூறும்போது, நடப்பவரை விட நாம்தான் உயர்ந்தவர் என்ற கர்வம் ஏற்படாது. மாறாகப் பணிவு ஏற்படும். எண்ணிக்கையில் அதிகமானவர்களின் உரிமை அதிகமானதால், எண்ணிக்கையில் குறைவானவர்கள் அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்.
ஒருவரையொருவர் சந்திக்கும்போது ‘ஸலாம்’ கூறுவதைப் போன்றே, கரம் பற்றி வாழ்த்து தெரிவிப்பதும் நபி வழியாகும். இதை ‘முஸாபஹா’ என்பர். ஒருவரின் கை மற்றவரின் கையுடன் சேர்வதை இது குறிக்கும்.
இதில் இரு கைகளையும் பற்றி வாழ்த்து தெரிவிப்பதே சிறந்த முறையாகும். ‘நபித் தோழர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது கரம் பற்றி ‘முஸாபஹா’ செய்வார்கள். பயணத்தில் இருந்து வந்தால் கட்டித் தழுவிக் கொள்வார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஒரு வீட்டுக்குச் சென்றவுடன் உள்ளே நுழைவதற்கு முன்பு முதலில் ஸலாம் கூற வேண்டும். பிறகு உள்ளே செல்ல அனுமதி பெற வேண்டும்.
‘நம்பிக்கையாளர்களே! உங்களுடையது அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக)’ (திருக்குர்ஆன்–24: 27) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
ஒரு வீட்டுக்குச் சென்று அனுமதி கோரி கதவைத் தட்டும்போது உள்ளே இருப்பவர், ‘வந்திருப்பது யார்?’ என்று வினவினால், ‘நான்தான்’ என்று கூறக் கூடாது. தான் இன்னார் என்பதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பெயர், ஊர் போன்றவற்றைத் தெளிவாகக் கூற வேண்டும்.
முஸ்லிம்கள் நாள்தோறும் நடைமுறைப்படுத்துகின்ற ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்துச் சொல், ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.
இந்த வாழ்த்துச் சொல்லை எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் சொல்லலாம்.
‘‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’’ என்ற இந்தச் சொல்லை மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் சொல்லலாம்.
திருமண வீடுகளிலும் சொல்லலாம்; துக்க வீடுகளிலும் மொழியலாம். ஏனெனில் எல்லோருக்குமே சாந்தியும், சமாதானமும் தேவையானது. நிம்மதியும், அமைதியும் அனைவருக்கும் அவசியமானது.
இந்த வாழ்த்தைக் காலையிலும் கூறலாம்; மாலையிலும் கூறலாம்; இரவிலும் கூறலாம்.
ஆங்கில நடைமுறையான ‘குட் மார்னிங்’ (நல்ல காலைப் பொழுது) என்பதை மாலையிலோ இரவிலோ சொல்ல முடியாது. சோகமான இடங்களில் சொல்லக் கூடாது.
சோகமாக இருக்கும் ஒருவரிடம், ‘நல்ல காலைப் பொழுது’ என்று சொல்வது நல்லதல்ல.
மேலும், பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும் ‘ஸலாம்’ கூறலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் ‘ஸலாம்’ சொல்லலாம். தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம். பணக்காரர்கள் ஏழைகளுக்கும், ஏழைகள் பணக்காரர்களுக்கும் ‘ஸலாம்’ சொல்லலாம்.
வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம் போன்ற வாழ்த்துச் சொற்கள், வணங்குகிறேன் என்ற பொருளில் வழங்கப்படுகின்றன. இதோடு ஒப்பிடுகையில் இஸ்லாமியர்களின் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்துச் சொல் ஒப்பற்றது. அனைவரின் கவுரவத்தையும், மரியாதையையும் பேணுகின்ற வகையில் அமைந்துள்ளது.
‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக; இன்னும் இறைவனின் அருளும் அவனது நிரந்தரமான அபிவிருத்தியும் உண்டாகட்டும்’ என்று ஒருவருக்காக மற்றொருவர் வாழ்த்துவதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் போன்ற அடிப்படையில் அமைந்திருக்கிற இந்த வாழ்த்து இஸ்லாத்தின் தனிச்சிறப்பாகும்.
இதில் இன்னொரு மகத்தான மகத்துவமும் உள்ளது. பிற மதங்களில் ஏழைகள், பணக்காரர்களுக்கும், தொழிலாளர்கள், தொழில் அதிபர்களுக்கும் வாழ்த்து கூறுகின்ற நடைமுறை உள்ளது. ஆனால் முஸ்லிம்களுக் கிடையே இதில் நேர்மாறான நிலை காணப்படுகிறது. கோடீஸ்வரர்கள்கூட, சாதாரணமானவர்களைக் கண்டதும் ‘ஸலாம்’ சொல்ல முந்திக் கொள்வதைக் காணலாம்.
‘முஸ்லிம்களுக்கிடையே ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள்’ என்று நபிகளார் சொல்லி இருப்பதே இதற்குக் காரணமாகும்.
‘முதலில் ஸலாம் கூறுபவரே இறைவனுக்கு வழிபட்டு அவனை நெருங்குவதற்கு மக்களில் மிகவும் தகுதியானவர்’ என்பது நபிகளாரின் கூற்று.
இப்ராஹீம் (அலை) அவர்களின் மறைவுக்குப்பின், அவர்களது வழிகாட்டுதலைப் பின்பற்றி அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வந்த மக்கள், காலங்கள் செல்லச் செல்ல அந்தப் போதனைகளை மறக்க ஆரம்பித்தனர்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் மறைவுக்குப்பின், அவர்களது வழிகாட்டுதலைப் பின்பற்றி அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வந்த மக்கள், காலங்கள் செல்லச் செல்ல அந்தப் போதனைகளை மறக்க ஆரம்பித்தனர். வானவர்களையும், அற்புதங்களை வெளிப்படுத்திய நபிமார்களையும், அல்லாஹ்வைப் பின்பற்றிய நல்லடியார்களையும் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக மக்கள் நம்பினார்கள்.
இறைவனுக்கு நெருக்கமான சான்றோர்களை, மக்கள் தங்களது வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற தங்களுக்கான சிபாரிசுகளாக்கிக் கொண்டனர். அச்சான்றோர்களின் நினைவாக அவர்களின் உருவத்தை வரைந்தும், சிலைகள் செய்தும் வைத்துக் கொண்டனர். அப்படியே அவர்கள் மதிக்கும் தமது முன்னோர்களுக்கும் உருவங்கள் செய்து அவர்களின் நினைவாக வைத்துக் கொண்டனர்.
நாளடைவில் வழிபாட்டிற்குரியவன் ஒருவன் என்பதை மறந்து அச்சிலைகளை வணங்கத் தொடங்கிவிட்டனர். சிலர் தமது முன்னோர்கள் புதைக்கப்பட்ட அடக்கத்தலங்களுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டு இறந்தவர்களைத் தரிசிக்கத் தொடங்கினர். இன்னும் சிலர் அத்தலங்களைப் புனிதமானதாகக் கருதி காணிக்கையும் செலுத்தி வந்தனர். காலம் செல்லச் செல்ல காரணமே இல்லாமல் விதவிதமான சிலைகளை, தங்களது கற்பனைக்கேற்றவாறு உருவாக்கி வழிப்படத் தொடங்கி இருந்தனர்.
இப்படியான தருணத்தில், முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த நபித்துவத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அத்தோடு மக்கள் பல காலமாக நம்பி வந்த கொள்கைகளையும் வழிமுறைகளையும் தமக்காக மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றும் மூடப்பழக்கவழக்கத்தைக் கைவிடமாட்டார்கள் என்றும் முஹம்மது (ஸல்) தெரிந்து வைத்திருந்தார்கள். அத்தோடு நபி அவர்களது உறவினர் வரகா சொன்ன எதிர்வினைகளையும் விளைவுகளையும் புரிந்தவர்களாகத் தமது இறை அழைப்பு பணியைத் தனது வீட்டில் இருந்து தொடங்க எண்ணினார்கள் முஹம்மது நபி (ஸல்).
தம்மை முழுமையாக நம்பிய தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களுக்கு ஏகத்துவத்தை முஹம்மது நபி (ஸல்) எடுத்துரைத்தார்கள். கதீஜா (ரலி) இஸ்லாமை முழு மனதாக ஏற்றார்கள். அதன் பிறகு நபி முஹம்மது (ஸல்) தமது நெருங்கிய குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். நபிகளாரின் தந்தையின் சகோதரனின் மகன் அலி (ரலி), உற்ற நண்பர் அபூ பக்ர் (ரலி), நபிகளாரின் அடிமை ஸைது (ரலி) ஆகியோர் இரகசிய அழைப்பின்போதே இஸ்லாமை உடன் ஏற்றவர்கள்.
(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம்)
-ஜெஸிலா பானு.
இறைவனுக்கு நெருக்கமான சான்றோர்களை, மக்கள் தங்களது வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற தங்களுக்கான சிபாரிசுகளாக்கிக் கொண்டனர். அச்சான்றோர்களின் நினைவாக அவர்களின் உருவத்தை வரைந்தும், சிலைகள் செய்தும் வைத்துக் கொண்டனர். அப்படியே அவர்கள் மதிக்கும் தமது முன்னோர்களுக்கும் உருவங்கள் செய்து அவர்களின் நினைவாக வைத்துக் கொண்டனர்.
நாளடைவில் வழிபாட்டிற்குரியவன் ஒருவன் என்பதை மறந்து அச்சிலைகளை வணங்கத் தொடங்கிவிட்டனர். சிலர் தமது முன்னோர்கள் புதைக்கப்பட்ட அடக்கத்தலங்களுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டு இறந்தவர்களைத் தரிசிக்கத் தொடங்கினர். இன்னும் சிலர் அத்தலங்களைப் புனிதமானதாகக் கருதி காணிக்கையும் செலுத்தி வந்தனர். காலம் செல்லச் செல்ல காரணமே இல்லாமல் விதவிதமான சிலைகளை, தங்களது கற்பனைக்கேற்றவாறு உருவாக்கி வழிப்படத் தொடங்கி இருந்தனர்.
இப்படியான தருணத்தில், முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த நபித்துவத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அத்தோடு மக்கள் பல காலமாக நம்பி வந்த கொள்கைகளையும் வழிமுறைகளையும் தமக்காக மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றும் மூடப்பழக்கவழக்கத்தைக் கைவிடமாட்டார்கள் என்றும் முஹம்மது (ஸல்) தெரிந்து வைத்திருந்தார்கள். அத்தோடு நபி அவர்களது உறவினர் வரகா சொன்ன எதிர்வினைகளையும் விளைவுகளையும் புரிந்தவர்களாகத் தமது இறை அழைப்பு பணியைத் தனது வீட்டில் இருந்து தொடங்க எண்ணினார்கள் முஹம்மது நபி (ஸல்).
தம்மை முழுமையாக நம்பிய தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களுக்கு ஏகத்துவத்தை முஹம்மது நபி (ஸல்) எடுத்துரைத்தார்கள். கதீஜா (ரலி) இஸ்லாமை முழு மனதாக ஏற்றார்கள். அதன் பிறகு நபி முஹம்மது (ஸல்) தமது நெருங்கிய குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். நபிகளாரின் தந்தையின் சகோதரனின் மகன் அலி (ரலி), உற்ற நண்பர் அபூ பக்ர் (ரலி), நபிகளாரின் அடிமை ஸைது (ரலி) ஆகியோர் இரகசிய அழைப்பின்போதே இஸ்லாமை உடன் ஏற்றவர்கள்.
(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம்)
-ஜெஸிலா பானு.
அல்லாஹ்வின் அருள்வாக்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
முதல் ‘வஹி’ அதாவது இறைச்செய்திக்கு பிறகு வேறு எந்த வாக்கும் இறைவனிடமிருந்து வராமல் இருந்தது. அதனால் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கவலையில் மனம் உடைந்துபோனார்கள். தாம் தான் ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்று தன்னைத்தானே நிந்தித்தவராக மலையிலிருந்து கீழே விழுந்துவிடலாமென்று மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, ‘முஹம்மதே, நீங்கள் உண்மையாகவே இறைத்தூதர்தாம்’ என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் மனம் பதற்றத்தில் இருந்து விடுபட்டது. அல்லாஹ்வின் அருள்வாக்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காகவும் இறைவன் ‘வஹி’யை தாமதப்படுத்தி இருக்கலாம்.
நபி (ஸல்) வழக்கம்போல் ஹிரா குகையில் தங்கியிருந்துவிட்டு, வீட்டுக்குச் செல்லும் வழியில் தன்னை அழைக்கும் சப்தம் மேலிருந்து கேட்கவே, முஹம்மது (ஸல்) தன் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். அங்கு ஹிரா குகையில் கண்ட அதே வானவரை வானத்திற்கும் பூமிக்குமிடையே பிரமாண்டமான ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். இப்படி திடீரென பிரமாண்ட ஓர் உருவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்தார்கள். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் அவர்களுடைய வீட்டிற்கு ஓட்டம் பிடித்தார்கள்.
வீட்டில் நுழைந்து நடுங்கியவர்களாக, தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று நடுக்கத்துடன் சொன்னார்கள். மனைவி கதீஜாவும் நபி (ஸல்) அவர்களுக்குப் போர்வையை எடுத்துப் போர்த்தினார்கள்.
அப்போது "போர்த்திக் கொண்டிருப்பவரே!! எழுந்து மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள், உம் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள், அசுத்தத்தை வெறுத்து உம் ஆடையைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்" என்ற திருக்குர்ஆனின் வசனங்கள் அந்தத் தருணத்தில் தரப்பட்டது.
நபி முஹம்மது (ஸல்) அவர்களை, ஓய்வெடுக்கும் காலம் ஓய்ந்துவிட்டது, ஓர் உன்னதமான பணிக்கு ஆயுத்தமாக வேண்டும் என்பதான கட்டளையை நிறைவேற்ற நபிகள் எழுந்தார்கள்.
அன்றைக்கு எழுந்தவர்தான் - தம்மிடம் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பைச் சுமந்து ஏகத்துவப் போராட்டத்திலும் இறையழைப்பிலும் தம்மைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி 7:91:6982, 3:59:3238, திருக்குர் ஆன் 74:1-5)
- ஜெஸிலா பானு.
இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் மனம் பதற்றத்தில் இருந்து விடுபட்டது. அல்லாஹ்வின் அருள்வாக்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காகவும் இறைவன் ‘வஹி’யை தாமதப்படுத்தி இருக்கலாம்.
நபி (ஸல்) வழக்கம்போல் ஹிரா குகையில் தங்கியிருந்துவிட்டு, வீட்டுக்குச் செல்லும் வழியில் தன்னை அழைக்கும் சப்தம் மேலிருந்து கேட்கவே, முஹம்மது (ஸல்) தன் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். அங்கு ஹிரா குகையில் கண்ட அதே வானவரை வானத்திற்கும் பூமிக்குமிடையே பிரமாண்டமான ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். இப்படி திடீரென பிரமாண்ட ஓர் உருவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்தார்கள். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் அவர்களுடைய வீட்டிற்கு ஓட்டம் பிடித்தார்கள்.
வீட்டில் நுழைந்து நடுங்கியவர்களாக, தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று நடுக்கத்துடன் சொன்னார்கள். மனைவி கதீஜாவும் நபி (ஸல்) அவர்களுக்குப் போர்வையை எடுத்துப் போர்த்தினார்கள்.
அப்போது "போர்த்திக் கொண்டிருப்பவரே!! எழுந்து மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள், உம் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள், அசுத்தத்தை வெறுத்து உம் ஆடையைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்" என்ற திருக்குர்ஆனின் வசனங்கள் அந்தத் தருணத்தில் தரப்பட்டது.
நபி முஹம்மது (ஸல்) அவர்களை, ஓய்வெடுக்கும் காலம் ஓய்ந்துவிட்டது, ஓர் உன்னதமான பணிக்கு ஆயுத்தமாக வேண்டும் என்பதான கட்டளையை நிறைவேற்ற நபிகள் எழுந்தார்கள்.
அன்றைக்கு எழுந்தவர்தான் - தம்மிடம் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பைச் சுமந்து ஏகத்துவப் போராட்டத்திலும் இறையழைப்பிலும் தம்மைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி 7:91:6982, 3:59:3238, திருக்குர் ஆன் 74:1-5)
- ஜெஸிலா பானு.
முதல் இறைச்செய்திக்குப் பிறகு சிறிது காலம் எந்த வேத அறிவிப்பும் வராமல் நின்று போயிருந்தது.
நூர் மலையின் ஹிரா குகையில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இப்பிரபஞ்சத்தை ஆளும் மறைபொருளைக் குறித்த தேடலில் இருந்தபோது, அங்கு வானவர் ஜிப்ரீல் (அலை) தோன்றி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை ஓதச் சொன்னார்கள்.
கனவாக மட்டுமே வந்து கொண்டிருந்த இறைச்செய்தி, முதன் முறையாக வானவர் ஜிப்ரீல் மூலம் அருளப்பட்டபோது, தமக்கு ஓதத் தெரிந்ததை தம்மாலேயே நம்ப முடியாமல், அந்த வசனங்களுடன் நடுங்கியவர்களாகவே வீடு வந்து சேர்ந்தார்கள் நபி முஹம்மது (ஸல்).
தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் நடந்தவற்றை இதயம் படபடக்கச் சொல்லி 'தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ?' எனப் பயப்படுவதாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகளாரை சமாதானப்படுத்தும்விதமாக கதீஜா (ரலி) “பயப்படாதீர்கள். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி நடப்பவர், வறியவர்களுக்காக உழைப்பவர், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து அவர்களுக்கு உதவியும் புரிகிறவர், விருந்தினர்களை உபசரிப்பவர், அப்படிப்பட்ட உங்களை அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான்” என்று ஆறுதல் சொன்னார்கள்.
பிறகு தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக' என்பவரிடம், நபி முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள். வராக கிறிஸ்துவராக இருந்தார். அவர் இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் எழுதியவர். கண் பார்வையற்ற வயோதிகர்.
அவரிடம் நபி (ஸல்) பார்த்த செய்திகளை எடுத்துரைத்தார்கள். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட வரகா, “அந்த வானவர்தான் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ்” என்று விஷயத்தைப் புரிந்து கொண்டார். சிறிது யோசித்த பிறகு “உங்கள் சமூகத்தார் உங்கள் நாட்டிலிருந்து உங்களை வெளியேற்றும் காலத்தில் நான் உயிருடன் திடமான ஆரோக்கியத்துடன் இருந்தால் நான் உங்களுடன் நிற்பேன்” என்றார்கள். அதைக் கேட்ட முஹம்மது (ஸல்) “என்ன, மக்கள் என்னை வெளியேற்றுவார்களா?” என்று அதிர்ந்தார்கள்.
அதற்கு வரகா, “ஆமாம். நீங்கள் கொண்டு வந்திருக்கும் சத்தியத்தைப் போன்று எவர் கொண்டு வந்திருந்தாலும், அவரை மக்கள் பகைத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். நீங்கள் வெளியேற்றப்படும் அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் நிச்சயமாக உங்களுக்குப் பலமாக உதவுவேன்” என்று உறுதியளித்தார்கள்.
ஆனால் வரகா நீண்ட நாட்கள் வாழவில்லை.
முதல் இறைச்செய்திக்குப் பிறகு சிறிது காலம் எந்த வேத அறிவிப்பும் வராமல் நின்று போயிருந்தது. அதனால் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.
(ஆதாரம் - ஸஹீஹ் புகாரி 1:1:3, 7:91:6982)
- ஜெஸிலா பானு.
கனவாக மட்டுமே வந்து கொண்டிருந்த இறைச்செய்தி, முதன் முறையாக வானவர் ஜிப்ரீல் மூலம் அருளப்பட்டபோது, தமக்கு ஓதத் தெரிந்ததை தம்மாலேயே நம்ப முடியாமல், அந்த வசனங்களுடன் நடுங்கியவர்களாகவே வீடு வந்து சேர்ந்தார்கள் நபி முஹம்மது (ஸல்).
தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் நடந்தவற்றை இதயம் படபடக்கச் சொல்லி 'தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ?' எனப் பயப்படுவதாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகளாரை சமாதானப்படுத்தும்விதமாக கதீஜா (ரலி) “பயப்படாதீர்கள். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி நடப்பவர், வறியவர்களுக்காக உழைப்பவர், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து அவர்களுக்கு உதவியும் புரிகிறவர், விருந்தினர்களை உபசரிப்பவர், அப்படிப்பட்ட உங்களை அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான்” என்று ஆறுதல் சொன்னார்கள்.
பிறகு தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக' என்பவரிடம், நபி முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள். வராக கிறிஸ்துவராக இருந்தார். அவர் இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் எழுதியவர். கண் பார்வையற்ற வயோதிகர்.
அவரிடம் நபி (ஸல்) பார்த்த செய்திகளை எடுத்துரைத்தார்கள். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட வரகா, “அந்த வானவர்தான் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ்” என்று விஷயத்தைப் புரிந்து கொண்டார். சிறிது யோசித்த பிறகு “உங்கள் சமூகத்தார் உங்கள் நாட்டிலிருந்து உங்களை வெளியேற்றும் காலத்தில் நான் உயிருடன் திடமான ஆரோக்கியத்துடன் இருந்தால் நான் உங்களுடன் நிற்பேன்” என்றார்கள். அதைக் கேட்ட முஹம்மது (ஸல்) “என்ன, மக்கள் என்னை வெளியேற்றுவார்களா?” என்று அதிர்ந்தார்கள்.
அதற்கு வரகா, “ஆமாம். நீங்கள் கொண்டு வந்திருக்கும் சத்தியத்தைப் போன்று எவர் கொண்டு வந்திருந்தாலும், அவரை மக்கள் பகைத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். நீங்கள் வெளியேற்றப்படும் அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் நிச்சயமாக உங்களுக்குப் பலமாக உதவுவேன்” என்று உறுதியளித்தார்கள்.
ஆனால் வரகா நீண்ட நாட்கள் வாழவில்லை.
முதல் இறைச்செய்திக்குப் பிறகு சிறிது காலம் எந்த வேத அறிவிப்பும் வராமல் நின்று போயிருந்தது. அதனால் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.
(ஆதாரம் - ஸஹீஹ் புகாரி 1:1:3, 7:91:6982)
- ஜெஸிலா பானு.
சினைமுட்டையில் இருந்துதான் உயிர் உண்டாகுகிறது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது.
ஒரு ரமதான் மாதத்தில் மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள நூர் மலையில் ஹிரா குகையில் தனிமையில் நபி முஹம்மது (ஸல்) இப்பிரபஞ்சத்தை ஆளும் சக்தியைப் பற்றிச் சிந்திந்தவர்களாக இவ்வுலகத்தை இயக்கும் மறைபொருளை குறித்த தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானவர் ஜிப்ரீல், முஹம்மது (ஸல்) அவர்கள் முன் தோன்றி அவர்களிடம் “ஓதுவீராக” என்றார்கள்.
அதற்கு நபி முஹம்மது (ஸல்) “எனக்கு ஓதத் தெரியாது” என்றார்கள். உடனே முஹம்மது (ஸல்) அவர்களைச் சிரமப்படும் வகையில் வானவர் இறுகக் கட்டிப்பிடித்து, விட்டுவிட்டு “இப்போது ஓதுவீராக” என்றார்கள்.
ஓத முயன்ற நபி முஹம்மது (ஸல்), தமக்கு ஓதத் தெரியவில்லை என்று வானவரிடம் தெளிவுப்படுத்தினார்கள். ஜிப்ரீல் (அலை) மீண்டும் இன்னும் இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக” என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களோ “நான் ஓதத் தெரிந்தவனில்லை” என்றார்கள். வானவர் ஜிப்ரீல் (அலை), நபி முஹம்மது (ஸல்) அவர்களை மூன்றாவது முறையாக இறுகக் கட்டியணைத்துவிட்டு, “நபியே, எல்லாவற்றையும் படைத்த இறைவனின் திருப்பெயரால் ஓதுங்கள். அவனே மனிதனைக் கருவிலிருந்து படைக்கின்றான். நீங்கள் ஓதுங்கள். இறைவன் மாபெரும் கொடையாளி” என்று சொல்லி திருக்குர்ஆனின் ‘சூரத்துல் அலக்’ என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்கள். ‘அலக்’ என்றால் கருவுற்ற சினைமுட்டை என்று பொருள். சினைமுட்டையில் இருந்து தான் உயிர் உண்டாகிறது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது.
நபி முஹம்மது (ஸல்) அவர்களால் ஓத முடிந்தது. தம்மால் ஓத முடிந்ததை அவர்களுக்கே நம்ப முடியாமல் இருந்தது. அவர்கள் பயந்து குகையைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்றார்கள்.
திருக்குர்ஆன் 96:1-6
- ஜெஸிலா பானு.
அப்போது வானவர் ஜிப்ரீல், முஹம்மது (ஸல்) அவர்கள் முன் தோன்றி அவர்களிடம் “ஓதுவீராக” என்றார்கள்.
அதற்கு நபி முஹம்மது (ஸல்) “எனக்கு ஓதத் தெரியாது” என்றார்கள். உடனே முஹம்மது (ஸல்) அவர்களைச் சிரமப்படும் வகையில் வானவர் இறுகக் கட்டிப்பிடித்து, விட்டுவிட்டு “இப்போது ஓதுவீராக” என்றார்கள்.
ஓத முயன்ற நபி முஹம்மது (ஸல்), தமக்கு ஓதத் தெரியவில்லை என்று வானவரிடம் தெளிவுப்படுத்தினார்கள். ஜிப்ரீல் (அலை) மீண்டும் இன்னும் இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக” என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களோ “நான் ஓதத் தெரிந்தவனில்லை” என்றார்கள். வானவர் ஜிப்ரீல் (அலை), நபி முஹம்மது (ஸல்) அவர்களை மூன்றாவது முறையாக இறுகக் கட்டியணைத்துவிட்டு, “நபியே, எல்லாவற்றையும் படைத்த இறைவனின் திருப்பெயரால் ஓதுங்கள். அவனே மனிதனைக் கருவிலிருந்து படைக்கின்றான். நீங்கள் ஓதுங்கள். இறைவன் மாபெரும் கொடையாளி” என்று சொல்லி திருக்குர்ஆனின் ‘சூரத்துல் அலக்’ என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்கள். ‘அலக்’ என்றால் கருவுற்ற சினைமுட்டை என்று பொருள். சினைமுட்டையில் இருந்து தான் உயிர் உண்டாகிறது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது.
நபி முஹம்மது (ஸல்) அவர்களால் ஓத முடிந்தது. தம்மால் ஓத முடிந்ததை அவர்களுக்கே நம்ப முடியாமல் இருந்தது. அவர்கள் பயந்து குகையைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்றார்கள்.
திருக்குர்ஆன் 96:1-6
- ஜெஸிலா பானு.
நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய மனதைப் புரிந்தவராக மனைவி கதீஜா (ரலி) அவர்களும், நபி (ஸல்) விரும்பிய தனிமையை அவர்களுக்குத் தந்தார்கள்.
நபி முஹம்மது (ஸல்) ஆரம்பக் காலத்திலேயே எல்லா மக்களிடமும் மிகவும் இணக்கமாக அன்புடன் நடந்து கொள்பவராக இருந்தார்கள். இதன் காரணமாக மக்களிடம் நன்மதிப்பு பெற்று விளங்கினார்கள். மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை வெறுப்பவர்களாக நுண்ணறிவாற்றல் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடைய சமுதாயம் இணைவைக்கும் கொள்கையில் இருந்ததை அவர்கள் மனம் ஏற்கவில்லை.
அவர்கள் தமது நாற்பது வயதை நெருங்கியபோது, நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய தூக்கத்தில் இறைச்செய்தி கனவுகளாகத் தோன்ற, அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் அந்தக் கனவுகள் தெள்ளத் தெளிவாக இருந்தாலும் அக்கனவுகளின் விளக்கம் புரியாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களது ஆழ்ந்த சிந்தனை காரணமாகத் தனிமையை விரும்பினார்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய மனதைப் புரிந்தவராக மனைவி கதீஜா (ரலி) அவர்களும், நபி (ஸல்) விரும்பிய தனிமையை அவர்களுக்குத் தந்தார்கள். மக்காவைவிட்டுத் தொலைவில் மலைக் குகைகளில் தியானம் செய்பவருக்கு உணவையும் தண்ணீரையும் தேடியெடுத்துக் கொண்டு தந்தார்கள் கதீஜா (ரலி).
பலமுறை நபி (ஸல்) தனக்குத் தேவையான உணவையும் தண்ணீரையும் அவர்களே எடுத்துக் கொண்டு மலை குகைக்குச் சென்றுவிடுவார்கள். அப்படியாக ஒரு ரமதான் மாதத்தில் மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள நூர் மலையில் ஹிரா குகைக்குச் சென்று இப்பிரபஞ்சத்தை ஆளும் சக்தியைப் பற்றிச் சிந்திப்பவர்களாக, தம்மைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துபவராகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். வியாபாரம் செய்து வந்த நபி (ஸல்) வருடத்தில் சில காலம் இப்படியிருக்கவே விரும்பினார்கள்.
தமது முப்பத்தி ஏழாம் வயதிலிருந்தே நபி (ஸல்) மலைக் குகைக்குச் சென்று தனிமையில் இவ்வுலகத்தை இயக்கும் மறைபொருளை குறித்த தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்று சொல்வதை விட நபித்துவத்தை ஏற்க தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்கள் என்பதே சரியாக இருக்கும்.
(ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:1:1, சீறா இப்னு ஹிஷாம்)
- ஜெஸிலா பானு.
அவர்கள் தமது நாற்பது வயதை நெருங்கியபோது, நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய தூக்கத்தில் இறைச்செய்தி கனவுகளாகத் தோன்ற, அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் அந்தக் கனவுகள் தெள்ளத் தெளிவாக இருந்தாலும் அக்கனவுகளின் விளக்கம் புரியாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களது ஆழ்ந்த சிந்தனை காரணமாகத் தனிமையை விரும்பினார்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய மனதைப் புரிந்தவராக மனைவி கதீஜா (ரலி) அவர்களும், நபி (ஸல்) விரும்பிய தனிமையை அவர்களுக்குத் தந்தார்கள். மக்காவைவிட்டுத் தொலைவில் மலைக் குகைகளில் தியானம் செய்பவருக்கு உணவையும் தண்ணீரையும் தேடியெடுத்துக் கொண்டு தந்தார்கள் கதீஜா (ரலி).
பலமுறை நபி (ஸல்) தனக்குத் தேவையான உணவையும் தண்ணீரையும் அவர்களே எடுத்துக் கொண்டு மலை குகைக்குச் சென்றுவிடுவார்கள். அப்படியாக ஒரு ரமதான் மாதத்தில் மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள நூர் மலையில் ஹிரா குகைக்குச் சென்று இப்பிரபஞ்சத்தை ஆளும் சக்தியைப் பற்றிச் சிந்திப்பவர்களாக, தம்மைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துபவராகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். வியாபாரம் செய்து வந்த நபி (ஸல்) வருடத்தில் சில காலம் இப்படியிருக்கவே விரும்பினார்கள்.
தமது முப்பத்தி ஏழாம் வயதிலிருந்தே நபி (ஸல்) மலைக் குகைக்குச் சென்று தனிமையில் இவ்வுலகத்தை இயக்கும் மறைபொருளை குறித்த தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்று சொல்வதை விட நபித்துவத்தை ஏற்க தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்கள் என்பதே சரியாக இருக்கும்.
(ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:1:1, சீறா இப்னு ஹிஷாம்)
- ஜெஸிலா பானு.
அறியாமையில் இருந்த அரேபியர்களையும் தனது நேர்மை, நீதி, சிந்தனை, அறிவாற்றலைக் கொண்டு சமாளிக்கக் கூடியவராக விளங்கினார் நபிகளார்.
இறை இல்லமான கஅபாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் குறைஷியர்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கஅபாவின் கட்டடம் பாதிப்படைந்து இருந்தது. அதனைப் புதுப்பிக்க வேண்டும் ஆனால், புனிதமான கஅபாவை முறையான வருமானத்தைக் கொண்டே செய்ய வேண்டுமென்றும், விபச்சாரம், திருட்டு, வட்டி, சொத்து அபகரிப்பு போன்றவற்றின் மூலமாகச் சேர்ந்த செல்வத்தை இக்காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஒருமனதாகத் தீர்மானமானது.
புனிதமான இல்லத்தை எப்படி இடிப்பது? அது தெய்வக் குற்றமாகிவிடும் என்றும் குறைஷிகள் அஞ்சினர். அப்போது “நாம் நன்மையை வேண்டியே இக்காரியத்தைச் செய்கிறோமென்று இறைவன் அறிவான்” என்று சொல்லிக் கொண்டே வலீத் இப்னு முகீரா மக்ஜூமி என்பவர் கடப்பாரையை எடுத்து ஒரு பகுதியை இடித்தார். இடித்தவருக்கு ஒன்றுமே ஆகவில்லை என்று ஓர் இரவு காத்திருந்து தெரிந்து கொண்டவர்கள் மறுநாள் தைரியமாக இடித்துப் புதுப்பிக்கும் வேலைகளைத் தொடங்கினர்.
கஅபாவைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தினரும் ஒரு பகுதியைக் கட்ட தொடங்கினர். இறுதியாக இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் நிறுவிய இறை இல்லத்தில் அமைந்திருந்த சொர்க்கத்தின் கல்லென்று அறியப்படுகின்ற ‘ஹஜ்ருல் அஸ்வத்’தை யார் அதற்குரிய இடத்தில் வைப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஆரம்பித்தது. சாதாரணமாக ஆரம்பித்த வாய்த் தகராறு கைகலப்பு வரை சென்று இறுதியில் கோத்திரத்தாருக்கிடையில் போர் மூண்டுவிடும் அபாயம் எழுந்தது.
அப்போது எல்லாக் கோத்திரத்தாரும் மதிக்கும் அபூ உமய்யா இப்னு முகீரா மக்ஜூமி என்பவர் மக்களிடம், “இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்வோமா?” என்று கேட்டார். அந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர். யார் அங்கு முதலில் நுழையப் போகிறார் என்று எல்லாரும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். அங்கு முதலாமவராக நுழைந்தது நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.
அவர்களைக் கண்டதும் எல்லோரும் “இதோ உண்மையாளர் வந்துவிட்டார், நம் நம்பிக்கைக்குரியவர் வந்துவிட்டார்” என்று ஏகமனதாக ஏற்றனர். இது குறித்து ஒன்றுமறியாத நபிகளார், கோத்திரத்தாரின் சிக்கலைப் பற்றி அறிந்து தெரிந்து கொண்டார்கள். போர் வரை வந்த சிக்கலை எல்லாரும் ஏற்கும்படி தீர்க்க வேண்டுமென்று மிகுந்த யோசனையில் இருந்துவிட்டு, ஒரு பெரிய விரிப்பை வரவழைக்கச் சொல்லி அதன் நடுவே அந்த ஹஜ்ருல் அஸ்வத்தை வைத்தார்கள். சண்டையிட்டுக் கொண்டிருந்த வெவ்வேறு கோத்திரத்தின் தலைவர்களை அவ்விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு சொன்னார்கள். அவர்களும் தூக்கினர். எல்லாரும் தூக்கி வைத்த மகிழ்ச்சி அவர்களுக்குக் கிடைத்தது. அதன்பின் கஅபாவிற்கு அருகில் வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.
முரட்டுத்தனமாக எப்போதும் சண்டையிட்டுக் கொள்ளும் அறியாமையில் இருந்த அரேபியர்களையும் தனது நேர்மை, நீதி, சிந்தனை, அறிவாற்றலைக் கொண்டு சமாளிக்கக் கூடியவராக விளங்கினார் நபிகளார். திருக்குர்ஆனில் ‘இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு உண்டு’ என்பதைப் பல சூழலில், பல்வேறு விதங்களில் புரிந்து கொள்ளலாம்.
(ஆதாரம்: இப்னு ஹிஷாம், திருக்குர்ஆன் 33:21)
- ஜெஸிலா பானு.
தாத்தா அப்துல் முத்தலிப் இறைவனின் தூதருமான முஹம்மது (ஸல்) அவர்களை பார்த்து கொள்ளும் பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைத்தார்.
தாய் - தந்தை இருவரையும் இழந்த முஹம்மது (ஸல்) அவர்களை மிகவும் அன்பாகப் பார்த்துக் கொண்டார் தாத்தா அப்துல் முத்தலிப்.
தான் இறந்துவிடுவோம் அதன் பிறகு தமது பேரனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற அச்சம் எழவே, தமது மகன்களை அழைத்து அது பற்றிப் பேசினார். முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரர் அபூ தாலிப் தனது சகோதரரின் மகனை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றார்.
பொறுப்பை ஒப்படைத்த மகிழ்ச்சியில் தாத்தா அப்துல் முத்தலிபும் இறந்துவிட்டார். அப்போது முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எட்டு வயது நிரம்பியிருந்தது. தன் தாத்தாவைப் போலவே அபூதாலிப்பும் முஹம்மது (ஸல்) அவர்களை மிகவும் பாசத்தோடு பார்த்துக் கொண்டதோடு அவரைத் தனியாக விட்டுவிடாமல் எல்லா நேரத்திலும் தன்னுடனே வைத்துக் கொண்டார்.
அபூதாலிப் ஒருமுறை சிரியாவிற்கு வியாபாரத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கு பஹீரா என்ற பிரபலமான துறவி அபூதாலிப்பை தேடி வந்து அவருடன் சென்றிருந்த முஹம்மது (ஸல்) அவர்களைப் பார்த்து “இந்தச் சிறுவன் யார்?” என்று கேட்டார். அதற்கு அபூதாலிப் “இது என்னுடைய மகன்” என்று பதிலளித்தார். அதற்குப் பஹீரா “அது சாத்தியமில்லையே” என்று கூற, “இல்லை, இச்சிறுவன் என் சகோதரனின் மகன்.
இவர் அவருடைய தாய் வயிற்றில் இருக்கும்போதே என் சகோதரர் இறந்துவிட்டார்” என்று உண்மையுரைத்தார். “உண்மைதான். என் கணிப்புச் சரிதான்” என்று சொல்லி முஹம்மது (ஸல்) அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். “எனக்குத் தெரிந்த உண்மை, மற்ற யூதர்களுக்குத் தெரிந்துவிட்டால் இச்சிறுவனுக்கு ஆபத்து ஏற்படலாம்.
ஆகையால் இவரை உன் நாட்டிற்கே அழைத்துச் சென்றுவிடு. அழகான எதிர்காலம் கொண்டவர், இப்பூவுலகுக்குத் தலைவராக, இறைவனுக்குத் தூதராக வந்திருப்பவர். இவர் இந்நகரத்தில் நுழையும்போது மரங்களெல்லாம் சிரம் பணிந்ததை நான் கண்டேன்” என்று எடுத்துரைத்தார்.
அவருடைய வாக்கிற்குக் கட்டுப்பட்டு உடனே அபூதாலிப் சிலரிடம் பன்னிரெண்டு வயது சிறுவரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பாதுகாப்பாக மக்காவிற்கே திரும்ப அனுப்பி வைத்தார்.
(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம்)
- ஜெஸிலா பானு.
நபிகளார் நவின்றார்கள்: ‘வெட்கம் அது எப்போதுமே நன்மையைத்தான் கொண்டு வரும்’ (நூல்: புஹாரி). இந்த நபிமொழி என்றும் நம்நினைவில் இருக்க வேண்டிய ஒரு பொன்மொழி.
‘ஹயா’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘வெட்கம்’ என்பது பொருளாகும். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பாலைவன நகரத்தில் வெட்கம் குறித்து நபிகளார் பேசியிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவத்திற்குரியது. இன்றைக்கும் நம் தேசம் இந்த வெட்கப்பண்புக்காகத் தானே விடியவிடிய போராடிக் கொண்டிருக்கிறது.
நபிகளார் நவின்றார்கள்: ‘ஒவ்வொரு மார்க்கத்திற்கும் தனியே ஒரு சிறப்பு குணமுண்டு. இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு குணம் வெட்கம் ஆகும்’. (நூல்: இப்னுமாஜா, தப்ரானி)
இந்நபிமொழி கூறுவதை நன்கு கவனித்துப் பாருங்கள். ‘வெட்கம்’ என்பது ஒற்றைச்சொல் தான் என்றாலும் ஆழ்ந்த அர்த்தமுள்ளது. இஸ்லாம் சொல்லும் அந்த சிறப்பு குணம் இன்று நம்மிடையே இருக்கிறதா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
வெட்கம் அது என்னவிலை.? என்று கேட்கும் காலமிது. எத்திசை நோக்கினும் ஆபாசமே வெட்கப்பட்டு போகும் அளவுக்கு தீஞ்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. அந்நிய ஆண்களும், அந்நியப் பெண்களும் பொதுஜன நடைமுறைகளை மீறுவதும், அதன் வரைமுறைகளை தம் கண்ணுக்கு முன்னேயே விட்டுவிட்டுச் செல்வதும் முற்றிலும் வேதனைக்குரியது.
பொது வெளியில் அரங்கேறும் அரைகுறை ஆடைக்காட்சிகளும், அதீத ஆபாச கொஞ்சல்களும் ஒரு சாமானியனின் மனதை வெகுசுலபமாக சஞ்சலத்தில் ஆழ்த்தி விடுகிறது. ‘என்னுடல் என்னுரிமை, என்னுடை என்னுரிமை’ என்று சொல்வதெல்லாம் ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல.
முன்னர் வாழ்ந்து சென்ற இறைத் தூதர்கள் அனைவரும் தம் மக்களுக்கு முதன்முதலாகச் சொன்ன செய்தியே ‘நீ வெட்கப்படாவிட்டால், நீ எதையும் செய்து கொள்’ என்பது தான். (நூல்: புஹாரி, அஹ்மது)
எனவே வெட்கம் என்பது இன்றோ, நேற்றோ தோன்றிய ஒரு குணமல்ல. தொன்றுதொட்டு பண்படுத்தப்பட்டு வாழையடி வாழையாக வந்த ஒரு நற்குணம் அது. அதை நாம் விடாபிடியாய் பிடித்துக் கொள்ளவேண்டும்.
வெட்கம் ஒருவனிடம் இல்லாமல் போய்விட்டால் அவனது வாழ்வு உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது தான். அதனால் தான் ‘அவன் விரும்பியதை செய்து கொள்ளட்டும்’ என முன்னர் சென்ற இறைத்தூதர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.
இம்மொழியில் பல்வேறு படிப்பினைகள் இருக்கின்றன. அவற்றை நாம் சற்றும் கண்டு கொள்ளாமலேயே பல வேளைகளில் படுவேகமாகச் சென்றுவிடுகிறோம். இது நல்ல பழக்கமல்ல.
நபிகளார் நவின்றார்கள்: ‘வெட்கம் அது எப்போதுமே நன்மையைத்தான் கொண்டு வரும்’ (நூல்: புஹாரி).
இந்த நபிமொழி என்றும் நம்நினைவில் இருக்க வேண்டிய ஒரு பொன்மொழி. சிறுவெட்கம் கூட நமக்கு சிறியதொரு நன்மையை தந்துவிட்டுச் செல்லக் கூடும்.
சாதாரணமாக முன்பெல்லாம் பெரியோர்கள் முன்னிலையில் கால்மேல்கால் போட்டு அமர்வது, கால் நீட்டி அமர்வது, மரியாதை இல்லாமல் பேசுவது, ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்வது என்பதெல்லாம் அறவே நடைபெறாத ஒன்றாக இருந்தது. ஆனால் அவை எல்லாம் இன்றைக்கு எங்கேபோய் ஒளிந்து கொண்டன?
இதற்கெல்லாம் மூலகாரணம் அந்த வெட்கமின்மை தான். அது இருந்தால் அவனிடம் தீய சொற்கள், தீய செயல்கள், தீய பழக்க வழக்கங்கள், தீய எண்ணங்கள் என எதுவுமே வெளிப்படாது.
வெட்கம் இல்லாததால் தான் மனிதன் மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். இந்நிலை நீடிப்பது இனியும் நமக்கு நல்லதுதானா? யோசிக்க வேண்டிய ஒன்று.
வெட்கம் அது பெண்களுக்கு மட்டும் சொந்தமான குலச்சொத்தல்ல. ஆண்களுக்கும் அதில் பங்குண்டு. ‘ஒரு கன்னிப்பெண் வெட்கப்படுவது போல் நபிகளாரின் வெட்கம் இருந்தது’ என நபித்தோழர்கள் வியந்து கூறியிருப்பது நாம் நன்கு கவனிக்க வேண்டிய ஒன்று.
அதாவது வெட்கம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, உள்ளம் சார்ந்ததும் கூட. அப்போதுதான் அல்லாஹ்வுக்கு, அவனது தூதருக்கு நாம் சிறு மாறு செய்ய முற்படும் போது அவனது வெட்க உணர்வு அவனை தடுத்து நிறுத்தி ‘நீ பாவம் செய்யாதே. இதோ இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான், கொஞ்சமாவது நீ வெட்கப்படு’ என்று வெட்க மனம் அவனோடு ஆத்மார்த்தமாக பேசும்.
நமது மனம் சர்வ சாதாரணமான ஒன்றல்ல, சிறுவயதில் நம் மனதில் எதை விதைக்கிறோமோ அதைத் தான் அது நமது பெருவயதில் திருப்பித்தரும் என்பது அனைவரும் அறிந்த பேருண்மை.
“ஈமான் எனும் இறைநம்பிக்கையின் 77 கிளைகளில் மிக உயர்ந்தது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் திருச்சொற்றொடர் ஆகும், அதில் மிகத்தாழ்ந்தது ‘வீதிகளில் கிடக்கும் நோவினைப் பொருட்களை அகற்றுவதாகும். வெட்கமும் அந்தக் கிளைகளுள் ஒன்று”, என்று நபிகளார் வெகுஅழகாக இறைநம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்களைக் கற்றுத்தந்தார்கள்.
அவற்றுள் இந்த வெட்கத்தை மட்டும் தனியாக குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகுந்த கவனத்திற்குரியது; கடைப்பிடிக்கப்படவேண்டியது.
மனமது செம்மையானால் வாழ்வது செம்மையாகும் என்பது எவருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
வாருங்கள் வாழ்ந்து பார்ப்போம், நாணத்துடனும், நாணயத்துடனும்!
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
செவிலித்தாய் ஹலீமாவின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பல நன்மைகளையும் வளங்களையும் தந்தான்.
செவிலித்தாய் ஹலீமாவின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பல நன்மைகளையும் வளங்களையும் தந்தான், அது குழந்தை முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு ஹலீமாவின் குடும்பத்தாருடன் இருப்பதால் அவர்களுக்குக் கிடைக்கிறது என்று ஹலீமா நம்பினார். அதனால் குழந்தை பால்குடி மறக்கடிக்கப்பட்ட பிறகும் முஹம்மது (ஸல்) இன்னும் சில காலம் தங்களுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியதால் தாய் ஆமினாவும் சம்மதம் தெரிவித்தார்.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நான்கு வயது இருக்கும்போது, அவர்கள் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) வந்து நபியைப் பிடித்து மயக்கமுறச் செய்து, படுக்க வைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியிலெடுத்தார்கள். அதில் ஒட்டியிருந்த ஒரு சதைத் துண்டை வெளியில் எடுத்து “இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு” என்று கூறியவராக அதனை நீக்கினார்.
பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் தண்ணீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்திலேயே மீண்டும் இதயத்தைப் பொருத்தினார். நபியவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், ஹலீமாவிடம் ஓடிச் சென்று “முஹம்மத் கொலை செய்யப்பட்டார்” என்று கூறினர். இதைக் கேட்டுப் பதறியடித்துக் கொண்டு ஹலீமாவின் குடும்பத்தார் குழந்தை முஹம்மத்தை நோக்கி விரைந்து வந்தனர். குழந்தை முஹம்மது (ஸல்) அவர்கள் பயத்தால் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.
அதைக் கண்டு அதிர்ந்துபோன ஹலீமா நபி முஹம்மது (ஸல்) அவர்களை மக்காவிற்கு அழைத்துச் சென்று அவரது தாயாரிடமே ஒப்படைத்துவிட்டார்கள்.
ஆறு வயது வரை தன் தாயார் ஆமினாவுடன் முஹம்மது (ஸல்) வளர்ந்தார்கள். தாயார் ஆமினா தன் இறந்த கணவர் அடக்கம் செய்யப்பட்ட மண்ணறையைப் பார்க்க விரும்பினார். சிறுவராக இருந்த முஹம்மது (ஸல்) அவர்கள், தம் வீட்டுப் பணிப்பெண் மற்றும் தன் கணவரின் தந்தை அப்துல் முத்தலிப்புடன் மதீனாவிற்குச் சென்று அங்கு ஒரு மாதம் வரை தங்கி இருந்தார். அங்கிருந்து மீண்டும் மக்காவிற்கு வரும் வழியில் நோய்வாய்ப்பட்டு மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயுள்ள அப்வா என்ற இடத்தில் ஆமினா இறந்துவிட்டார்.
அனாதையாகிவிட்ட முஹம்மது (ஸல்) அவர்களை, தாத்தா அப்துல் முத்தலிப் மக்காவிற்குப் பத்திரமாக அழைந்து வந்தார். தாய்- தந்தையை இழந்த சிறுவரிடம் மிகுந்த அன்போடும் பாசத்தோடும் நடந்து கொண்டார். தன் மகன்களைவிட, பேரரின் மீது மிகுந்த அன்பைச் செலுத்தினார்.
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல் 1 ஹதீஸ் 261, இப்னு ஹிஷாம்)
- ஜெஸிலா பானு.






