என் மலர்
இஸ்லாம்
தலைவர்கள் அவமதித்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையில் அங்கிருந்து மற்ற தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள் நபி முஹம்மது (ஸல்).
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அன்பு மனைவி கதீஜா (ரலி) மற்றும் பெரிய தந்தை அபூதாலிப் இருவரின் மங்களும் தந்த அதிர்ச்சியாலும் துக்கத்தாலும் துவண்டு போயிருந்த நபிகளாருக்கு ஆதரவுக் கரம் நீட்டினார் அபூலஹப். ஆனால் அதில் நயவஞ்சகமும் ஒளிந்தே இருந்தது. ஹம்ஸா (ரலி) மற்றும் உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுச் சில ஆண்டுகள் கடந்த பிறகும் கூட குறிப்பிடத்தகுந்தவர்கள் எவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அபூலஹப் தனக்கு ஆதரவாக இருப்பதாக நம்பி நபிகளார் ஏகத்துவத்தைப் பிரகடனப்படுத்தினார்.
குறைஷிகள் அபூலஹபுக்குப் பயந்து அமைதி காத்தனர். குறைஷிகளின் தூண்டுதலின் பெயரில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் “உனது தந்தை அப்துல்லாஹ்வின் தந்தை அப்துல் முத்தலிப் சொர்க்கத்திற்குச் செல்வாரா அல்லது நரகத்திற்குப் போவாரா?” என்று தயங்கியபடி கேட்டான் அபூலஹப். நபிகளார் சிறிதும் தயங்காமல் “அவரும் அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களும் நரகத்திற்குதான் போவார்கள்” என்று சொல்லி தாமதிக்கும் முன்னர் அபூலஹப், “இனி நீதான் என் ஜென்ம விரோதி, இனி நான் உனக்குப் பாதுகாவலன் இல்லை” என்று கூறினான். அபூலஹபுக்கும் நபிகளாருக்கும் இடையில் விழுந்த விரிசல் குறித்துக் குறைஷிகளுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. குறைஷிகள் வழக்கம்போல் கொடுமையாகவும் மிகக் கடுமையாகவும் நபிகளாரிடம் நடந்து கொண்டனர்.
மக்காவில் இஸ்லாத்தை யாரும் ஏற்காத நிலையில் புதிய இடம், புதிய முகங்கள் என்று முயன்று பார்க்கலாமென்று நபிகள் பெருமானார் மக்காவிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் தாஃயிபிற்குப் பயணப்பட்டார்கள். அவர்களுடன் ஸைத் இப்னு ஹரித்தாவும் உடன் சென்றார்.
மக்காவில் குறைஷியினர் உயர் குலத்தவர்கள், அதேபோல் தாயிஃபில் ஸகீஃப் கூட்டத்தினருக்குப் பெரும் மதிப்பு இருந்தது. ஸகீஃப் கூட்டத்தின் தலைவர் அம்ர் இப்னு உமைர் அவர்களைச் சந்தித்தார்கள். அவரோ, தமது மகன்களைச் சந்திக்கும்படி சொல்லி அனுப்பிவிட்டார். அவரின் மகன்களான அப்து ஜலீல், மஸ்வூத் மற்றும் ஹபீப் மூவரையும் சந்தித்த நபிகள் நாயகம் (ஸல்), தான் முஹம்மத் என்றும் மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இஸ்லாத்தை பரப்புவதற்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்கள்.
இதைக் கேட்ட இறைமறுப்பாளர்கள் வாய்விட்டுக் குரலுயர்த்திச் சிரித்தனர். அவர்களில் ஒருவன் “கடவுள் இவரை இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்திருந்தால், நான் கஅபாவுடைய திரையையே கிழித்து எறிந்துவிடுவேன்” என்று ஏளனம் செய்தான். இன்னொருவன் மிகவும் குத்தலான தொனியில் “கடவுளுக்கு இறைத்தூதராக்குவதற்கு உன்னைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா?” என்று எள்ளளுடன் பேசினான். மூன்றாமவன், “நீர் கடவுளின் தூதராக இருந்தால் நான் உன்னிடம் பேச முடியாது, நான் தகுதியற்றவன்.
மாறாக நீர் சொல்வது பொய்யென்றால் என்னுடன் பேசவும் நீ தகுதி பெறமாட்டாய்” என்று நபிகளாரை அவமதித்தான். சொற்களால் காயப்பட்ட நபிகளார் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் “இது உங்களின் முடிவென்றால் அது உங்களோடே இருந்துவிட்டு போகட்டும். நான் உங்களைச் சந்தித்ததையோ பேசினதையோ நீங்கள் மற்றவர்களிடம் சொல்லி அவர்கள் மனதையும் கெடுக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வளவு அவமானப்படுத்தியும் இப்படியொரு மென்மையான கோரிக்கையை நபிகளார் முன் வைத்ததைக் கண்டு அவர்கள் வியந்தனர்.
தலைவர்கள் அவமதித்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையில் அங்கிருந்து மற்ற தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள் நபி முஹம்மது (ஸல்).
(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், ரஹீக் அல்மக்தூம்)
ஜெஸிலா பானு.
குறைஷிகள் அபூலஹபுக்குப் பயந்து அமைதி காத்தனர். குறைஷிகளின் தூண்டுதலின் பெயரில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் “உனது தந்தை அப்துல்லாஹ்வின் தந்தை அப்துல் முத்தலிப் சொர்க்கத்திற்குச் செல்வாரா அல்லது நரகத்திற்குப் போவாரா?” என்று தயங்கியபடி கேட்டான் அபூலஹப். நபிகளார் சிறிதும் தயங்காமல் “அவரும் அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களும் நரகத்திற்குதான் போவார்கள்” என்று சொல்லி தாமதிக்கும் முன்னர் அபூலஹப், “இனி நீதான் என் ஜென்ம விரோதி, இனி நான் உனக்குப் பாதுகாவலன் இல்லை” என்று கூறினான். அபூலஹபுக்கும் நபிகளாருக்கும் இடையில் விழுந்த விரிசல் குறித்துக் குறைஷிகளுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. குறைஷிகள் வழக்கம்போல் கொடுமையாகவும் மிகக் கடுமையாகவும் நபிகளாரிடம் நடந்து கொண்டனர்.
மக்காவில் இஸ்லாத்தை யாரும் ஏற்காத நிலையில் புதிய இடம், புதிய முகங்கள் என்று முயன்று பார்க்கலாமென்று நபிகள் பெருமானார் மக்காவிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் தாஃயிபிற்குப் பயணப்பட்டார்கள். அவர்களுடன் ஸைத் இப்னு ஹரித்தாவும் உடன் சென்றார்.
மக்காவில் குறைஷியினர் உயர் குலத்தவர்கள், அதேபோல் தாயிஃபில் ஸகீஃப் கூட்டத்தினருக்குப் பெரும் மதிப்பு இருந்தது. ஸகீஃப் கூட்டத்தின் தலைவர் அம்ர் இப்னு உமைர் அவர்களைச் சந்தித்தார்கள். அவரோ, தமது மகன்களைச் சந்திக்கும்படி சொல்லி அனுப்பிவிட்டார். அவரின் மகன்களான அப்து ஜலீல், மஸ்வூத் மற்றும் ஹபீப் மூவரையும் சந்தித்த நபிகள் நாயகம் (ஸல்), தான் முஹம்மத் என்றும் மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இஸ்லாத்தை பரப்புவதற்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்கள்.
இதைக் கேட்ட இறைமறுப்பாளர்கள் வாய்விட்டுக் குரலுயர்த்திச் சிரித்தனர். அவர்களில் ஒருவன் “கடவுள் இவரை இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்திருந்தால், நான் கஅபாவுடைய திரையையே கிழித்து எறிந்துவிடுவேன்” என்று ஏளனம் செய்தான். இன்னொருவன் மிகவும் குத்தலான தொனியில் “கடவுளுக்கு இறைத்தூதராக்குவதற்கு உன்னைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா?” என்று எள்ளளுடன் பேசினான். மூன்றாமவன், “நீர் கடவுளின் தூதராக இருந்தால் நான் உன்னிடம் பேச முடியாது, நான் தகுதியற்றவன்.
மாறாக நீர் சொல்வது பொய்யென்றால் என்னுடன் பேசவும் நீ தகுதி பெறமாட்டாய்” என்று நபிகளாரை அவமதித்தான். சொற்களால் காயப்பட்ட நபிகளார் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் “இது உங்களின் முடிவென்றால் அது உங்களோடே இருந்துவிட்டு போகட்டும். நான் உங்களைச் சந்தித்ததையோ பேசினதையோ நீங்கள் மற்றவர்களிடம் சொல்லி அவர்கள் மனதையும் கெடுக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வளவு அவமானப்படுத்தியும் இப்படியொரு மென்மையான கோரிக்கையை நபிகளார் முன் வைத்ததைக் கண்டு அவர்கள் வியந்தனர்.
தலைவர்கள் அவமதித்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையில் அங்கிருந்து மற்ற தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள் நபி முஹம்மது (ஸல்).
(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், ரஹீக் அல்மக்தூம்)
ஜெஸிலா பானு.
‘திருக்குர்ஆன்’ இறைவனின் அருள் வாக்காகும். அது இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாகும்.
‘திருக்குர்ஆன்’ இறைவனின் அருள் வாக்காகும். அது இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாகும்.
“இது அல்லாஹ்வின் வேதமாகும். இதில் யாதொரு சந்தேகமும் தேவை இல்லை” (2:2) என்றும்,
“(முகம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை நாம் உம் மீது இறக்கியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக” (14:1) என்றும் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
திருக்குர்ஆனை இறைவன்தான் இறக்கி அருளினான் என்று குர்ஆனே திட்டவட்டமாகக் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடக்கக் கல்வியைக்கூட கற்றதில்லை. அதனால்தான் அவர்களை ‘உம்மீ நபி’ என்கிறார்கள். ‘உம்மீ நபி’ என்றால் ‘எழுதப் படிக்கத் தெரியாத நபி’ என்று பொருள்.
திருக்குர்ஆன் அரபி மொழியின் மிகச்சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. அரபி மொழிக்கு இலக்கணம், சொல் வளம், சொற்றொடரியல் ஆகியவற்றுக்கான அடித்தளமாக அமைந்தது, குர்ஆனே. அப்படிப்பட்ட குர்ஆனை எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் இயற்றினார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். இதுவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதற்கு முதல் அத்தாட்சியாகும்.
திருக்குர்ஆன் 23 ஆண்டு கால இடைவெளியில் சிறிது சிறிதாகப் பல்வேறு சூழ்நிலைகளில் அருளப்பட்டது. ஆனாலும் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை குர்ஆனின் உரை அனைத்தும் ஒழுங்காகவும், சீராகவும் அமைந்துள்ளதைக் காணலாம். அதில் முரண்பாடுகள் எதையும் காண முடியாது. ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடுகள் இல்லாமல் இருக்கும்.
இதுகுறித்து திருமறையில், “இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் காண்பார்கள்” (திருக்குர்ஆன்-4:82) இறைவன் கூறுகின்றான்.
திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை என்பது அது இறைவேதம் என்பதற்கு போதுமான சான்றாகும்.
இறைமொழி என்றால் அது தரமாக இருக்க வேண்டும்; உயர்தரமாக இருக்க வேண்டும்; நிரந்தரமாக இருக்க வேண்டும். திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால், அரபி மொழி அறிந்த முஸ்லிம் அல்லாதார் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் நிச்சயமாக அது இறைவேதம் என்பதை அறிந்து கொள்ளவும், அறிவிக்கவும் முடியும்.
குர்ஆனின் நடை உரைநடையும் அல்ல; கவிதையும் அல்ல. இவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஈர்க்கும் இசைநயம் கொண்ட ஓசையுடன் புதிய பாணியில் அமைந்துள்ளது. பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அதே நேரத்தில் அறிஞர்களும் ஆச்சரியப்படத்தக்க வகையிலும் அதன் வசனங்கள் அமைந்துள்ளன. இவ்வளவு உயர்ந்த இலக்கிய தரத்தில் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் நபிகளார், அறிஞராகவோ, அரபி மொழியில் கரை கண்டவராகவோ இருக்க வேண்டும். ஆனால் அவர்களோ படிப்பறிவு இல்லாதவர்.
இதையே, “(நபியே!) நீங்கள் இதற்கு முன்னர் யாதொரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உங்களுடைய கையால் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதனை நீங்கள் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்” (29:48) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
திருக்குர்ஆனின் நடையும் நயமும், நபிகளாரின் மொழி நடையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது; வேறுபட்டது. சில நேரங்களில் நபிகளார் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டினாலோ அல்லது பாராமுகமாக இருந்தாலோ இறைத் தூதராயிற்றே என்று இறைவன் பார்ப்பதில்லை.
சான்றாக, பார்வையற்ற ஒருவர் நபிகளாரிடம் அறிவுரை கேட்க வந்தபோது அதனை அவர்கள் விரும்பவில்லை. அப்போது, “(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) தன்னிடம் ஒரு பார்வையற்றவர் வந்ததற்காக” (திருக்குர்ஆன்-80:1) என்ற இறைவாக்கு வருகிறது.
சில பல சமயங்களில் சிக்கலான பிரச்சினைகள் வரும்போது இறை வழிகாட்டுதல் வரும் வரை நபிகளார் காத்திருந்தார்கள். இவை அனைத்தும் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
திருக்குர்ஆனில் உள்ள கம்பீரம், தொனி, உவமை, சொல்லாட்சி, இலக்கிய நயம் ஆகிய அனைத்தும் மனித ஆற்றல் களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.
குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதுதானா என்று சந்தேகம் கொள்வோரைச் சந்திக்க இறைவன் தயாராக இருக்கின்றான் என்பதற்கு கீழ்க்கண்ட வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன.
“இவர்தான் இவ்வேதத்தை புனைந்து கூறுகிறார்” என்று இவர்கள் வாதிடுகிறார்களா? நீர் கூறும்: அவ்வாறாயின் இதுபோன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் இயற்றிக் கொண்டு வாருங்கள்” (11:13)
“என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா? நீர் கூறும்: “(இக்குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக் கொண்டு வாருங்கள்!” (10:38)
இறைவன் விடுத்த இந்தச் சவால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல; உலக முடிவு நாள் வரையுள்ள அனைத்து மக்களுக்கும் விடப்பட்ட சவால் ஆகும். குர்ஆன் அருளப்பட்டு 1,500 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தச் சவாலுக்கு இன்று வரை எவராலும் பதில் அளிக்க முடியவில்லை.
“இது அல்லாஹ்வின் வேதமாகும். இதில் யாதொரு சந்தேகமும் தேவை இல்லை” (2:2) என்றும்,
“(முகம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை நாம் உம் மீது இறக்கியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக” (14:1) என்றும் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
திருக்குர்ஆனை இறைவன்தான் இறக்கி அருளினான் என்று குர்ஆனே திட்டவட்டமாகக் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடக்கக் கல்வியைக்கூட கற்றதில்லை. அதனால்தான் அவர்களை ‘உம்மீ நபி’ என்கிறார்கள். ‘உம்மீ நபி’ என்றால் ‘எழுதப் படிக்கத் தெரியாத நபி’ என்று பொருள்.
திருக்குர்ஆன் அரபி மொழியின் மிகச்சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. அரபி மொழிக்கு இலக்கணம், சொல் வளம், சொற்றொடரியல் ஆகியவற்றுக்கான அடித்தளமாக அமைந்தது, குர்ஆனே. அப்படிப்பட்ட குர்ஆனை எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் இயற்றினார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். இதுவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதற்கு முதல் அத்தாட்சியாகும்.
திருக்குர்ஆன் 23 ஆண்டு கால இடைவெளியில் சிறிது சிறிதாகப் பல்வேறு சூழ்நிலைகளில் அருளப்பட்டது. ஆனாலும் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை குர்ஆனின் உரை அனைத்தும் ஒழுங்காகவும், சீராகவும் அமைந்துள்ளதைக் காணலாம். அதில் முரண்பாடுகள் எதையும் காண முடியாது. ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடுகள் இல்லாமல் இருக்கும்.
இதுகுறித்து திருமறையில், “இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் காண்பார்கள்” (திருக்குர்ஆன்-4:82) இறைவன் கூறுகின்றான்.
திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை என்பது அது இறைவேதம் என்பதற்கு போதுமான சான்றாகும்.
இறைமொழி என்றால் அது தரமாக இருக்க வேண்டும்; உயர்தரமாக இருக்க வேண்டும்; நிரந்தரமாக இருக்க வேண்டும். திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால், அரபி மொழி அறிந்த முஸ்லிம் அல்லாதார் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் நிச்சயமாக அது இறைவேதம் என்பதை அறிந்து கொள்ளவும், அறிவிக்கவும் முடியும்.
குர்ஆனின் நடை உரைநடையும் அல்ல; கவிதையும் அல்ல. இவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஈர்க்கும் இசைநயம் கொண்ட ஓசையுடன் புதிய பாணியில் அமைந்துள்ளது. பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அதே நேரத்தில் அறிஞர்களும் ஆச்சரியப்படத்தக்க வகையிலும் அதன் வசனங்கள் அமைந்துள்ளன. இவ்வளவு உயர்ந்த இலக்கிய தரத்தில் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் நபிகளார், அறிஞராகவோ, அரபி மொழியில் கரை கண்டவராகவோ இருக்க வேண்டும். ஆனால் அவர்களோ படிப்பறிவு இல்லாதவர்.
இதையே, “(நபியே!) நீங்கள் இதற்கு முன்னர் யாதொரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உங்களுடைய கையால் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதனை நீங்கள் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்” (29:48) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
திருக்குர்ஆனின் நடையும் நயமும், நபிகளாரின் மொழி நடையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது; வேறுபட்டது. சில நேரங்களில் நபிகளார் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டினாலோ அல்லது பாராமுகமாக இருந்தாலோ இறைத் தூதராயிற்றே என்று இறைவன் பார்ப்பதில்லை.
சான்றாக, பார்வையற்ற ஒருவர் நபிகளாரிடம் அறிவுரை கேட்க வந்தபோது அதனை அவர்கள் விரும்பவில்லை. அப்போது, “(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) தன்னிடம் ஒரு பார்வையற்றவர் வந்ததற்காக” (திருக்குர்ஆன்-80:1) என்ற இறைவாக்கு வருகிறது.
சில பல சமயங்களில் சிக்கலான பிரச்சினைகள் வரும்போது இறை வழிகாட்டுதல் வரும் வரை நபிகளார் காத்திருந்தார்கள். இவை அனைத்தும் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
திருக்குர்ஆனில் உள்ள கம்பீரம், தொனி, உவமை, சொல்லாட்சி, இலக்கிய நயம் ஆகிய அனைத்தும் மனித ஆற்றல் களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.
குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதுதானா என்று சந்தேகம் கொள்வோரைச் சந்திக்க இறைவன் தயாராக இருக்கின்றான் என்பதற்கு கீழ்க்கண்ட வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன.
“இவர்தான் இவ்வேதத்தை புனைந்து கூறுகிறார்” என்று இவர்கள் வாதிடுகிறார்களா? நீர் கூறும்: அவ்வாறாயின் இதுபோன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் இயற்றிக் கொண்டு வாருங்கள்” (11:13)
“என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா? நீர் கூறும்: “(இக்குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக் கொண்டு வாருங்கள்!” (10:38)
இறைவன் விடுத்த இந்தச் சவால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல; உலக முடிவு நாள் வரையுள்ள அனைத்து மக்களுக்கும் விடப்பட்ட சவால் ஆகும். குர்ஆன் அருளப்பட்டு 1,500 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தச் சவாலுக்கு இன்று வரை எவராலும் பதில் அளிக்க முடியவில்லை.
நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக இருந்த இருவரும் மரணமடைந்த நிலையில் நபிகளார் நிலைகுலைந்துப் போனார்கள்.
நபித்துவத்தின் பத்தாவது வருடம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் மரணமடைந்தபோது நபிகளார் வேதனையால் சூழப்பட்டிருந்ததோடு கதீஜா (ரலி) அவர்களின் உடல்நிலை குறித்த கவலையிலும் இருந்தார்கள் நபி முஹம்மது (ஸல்).
இஸ்லாமை முதன்முதலில் ஏற்றவர்கள் கதீஜா (ரலி). நபி முஹம்மது (ஸல்) அவர்களை எல்லாத் தருணங்களிலும் முழுமையாக நம்பியவர்கள். நபித்துவம் கிடைத்தது பற்றி நபிகளார் முதலில் சொன்னது கதீஜா (ரலி) அவர்களுக்குத்தான்.
நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தைப் பலருக்கு எடுத்துச் சொன்னவர்கள் கதீஜா (ரலி). நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரும் பலமாக நின்றவர்கள். தன்னுடைய செல்வத்தை இறைவழியில் செலவு செய்தவர்கள். நபிகளாருக்கு உறுதுணையாக, சகிப்புத் தன்மையுடையவராக, ஆதரவாக, ஆறுதலாக இருந்து வந்தவர்கள். நபிகளாரைப் பலரும் பலவிதமாகப் பேசியபோதும், நிராகரித்தபோதும், பொய்யர், மூடர், ஜோசியக்காரர், சூனியக்காரர் என்றெல்லாம் ஒதுக்கியபோதும் கதீஜா (ரலி) அவர்கள் துணையாக, இறைவனின் அருளாக, கருணையின் கடலாக, அன்பின் உருவாக நபிகளாருக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தவர்கள்.
ஒருமுறை நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்காக, கதீஜா (ரலி) ஒரு பாத்திரத்தில் உணவு கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை), “உங்களுக்கு உணவு கொண்டு வரும் உங்கள் மனைவிக்கு இறைவனின் தரப்பிலிருந்தும், என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி, அவருக்கு சொர்க்கத்தில் கூச்சலோ குழப்பமோ களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று நபிகளாரிடம் கூறினார்கள்.
கதீஜா (ரலி) அவர்களின் மூலமாகத்தான் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, குழந்தைகளை அல்லாஹ் அருளியிருந்தான். கதீஜா (ரலி) அவர்களுடன் மட்டும்தான் நபிகளார் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் தனது 65-வது வயதில் மரணமடைந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. கதீஜா (ரலி) அவர்கள் இறக்கும் வரை, நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேறு எந்த மனைவியுமில்லை, கஜீதா (ரலி) மட்டுமே நபிகளாருக்கு மனைவியாகத் திகழ்ந்தார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக இருந்த இருவரும் மரணமடைந்த நிலையில் நபிகளார் நிலைகுலைந்துப் போனார்கள்.
ஸஹீஹ் புகாரி 2:26:1791-1792, 4:63:3816-3817, 4:63:3820
- ஜெஸிலா பானு.
இஸ்லாமை முதன்முதலில் ஏற்றவர்கள் கதீஜா (ரலி). நபி முஹம்மது (ஸல்) அவர்களை எல்லாத் தருணங்களிலும் முழுமையாக நம்பியவர்கள். நபித்துவம் கிடைத்தது பற்றி நபிகளார் முதலில் சொன்னது கதீஜா (ரலி) அவர்களுக்குத்தான்.
நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தைப் பலருக்கு எடுத்துச் சொன்னவர்கள் கதீஜா (ரலி). நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரும் பலமாக நின்றவர்கள். தன்னுடைய செல்வத்தை இறைவழியில் செலவு செய்தவர்கள். நபிகளாருக்கு உறுதுணையாக, சகிப்புத் தன்மையுடையவராக, ஆதரவாக, ஆறுதலாக இருந்து வந்தவர்கள். நபிகளாரைப் பலரும் பலவிதமாகப் பேசியபோதும், நிராகரித்தபோதும், பொய்யர், மூடர், ஜோசியக்காரர், சூனியக்காரர் என்றெல்லாம் ஒதுக்கியபோதும் கதீஜா (ரலி) அவர்கள் துணையாக, இறைவனின் அருளாக, கருணையின் கடலாக, அன்பின் உருவாக நபிகளாருக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தவர்கள்.
ஒருமுறை நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்காக, கதீஜா (ரலி) ஒரு பாத்திரத்தில் உணவு கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை), “உங்களுக்கு உணவு கொண்டு வரும் உங்கள் மனைவிக்கு இறைவனின் தரப்பிலிருந்தும், என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி, அவருக்கு சொர்க்கத்தில் கூச்சலோ குழப்பமோ களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று நபிகளாரிடம் கூறினார்கள்.
கதீஜா (ரலி) அவர்களின் மூலமாகத்தான் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, குழந்தைகளை அல்லாஹ் அருளியிருந்தான். கதீஜா (ரலி) அவர்களுடன் மட்டும்தான் நபிகளார் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் தனது 65-வது வயதில் மரணமடைந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. கதீஜா (ரலி) அவர்கள் இறக்கும் வரை, நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேறு எந்த மனைவியுமில்லை, கஜீதா (ரலி) மட்டுமே நபிகளாருக்கு மனைவியாகத் திகழ்ந்தார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக இருந்த இருவரும் மரணமடைந்த நிலையில் நபிகளார் நிலைகுலைந்துப் போனார்கள்.
ஸஹீஹ் புகாரி 2:26:1791-1792, 4:63:3816-3817, 4:63:3820
- ஜெஸிலா பானு.
எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ், ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒரு சிறப்பைத்தந்திருக்கிறான். இந்த சிறப்புகளை அவர்கள் தங்கள் தியாகத்தின் மூலம் பெற்றார்கள்.
எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ், ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒரு சிறப்பைத்தந்திருக்கிறான். இந்த சிறப்புகளை அவர்கள் தங்கள் தியாகத்தின் மூலம் பெற்றார்கள்.
இதில் குறிப்பிடத்தக்கவர் இப்ராகிம் நபிகள். அவரது தியாகங்கள் போற்றப்பட வேண்டும் என்கிற காரணம் ஒருபுறம் இருந்தாலும், அதன் மூலம் அல்லாஹ் ஒட்டு மொத்த மனித குலத்திற்கு தனது அருட்கிருபையை வழங்க நாடினான்.
இப்ராகிம் நபிகளின் தந்தை ஆஜர். இவர் களிமண்ணால் கடவுள் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வந்தார். குழந்தைப்பருவம் கடந்து சிந்திக்கும் திறனைப் பெற்ற போது தனது தந்தையின் இந்த செயலை இப்ராகிம் நபிகளார் நிராகரித்தார்கள். ‘மண்ணுக்கு எந்த மகிமையும் கிடையாது, எல்லா சக்திகளுக்கும் அப்பாற்பட்ட மாபெரும் சக்தி அல்லாஹ்’ என்பதை இப்ராகிம் நபிகள் மூலம் உலக மக்களுக்கு உணர்த்தினான் இறைவன்.
மேலும், ‘நான் தான் கடவுள்’ என்று மக்களை நம்பச் செய்து நாசம் செய்த ‘நம்ரூத்’ என்ற மன்னனை இப்ராகிம் நபிகள் எதிர்த்தார்கள். ‘மனிதனுக்கு இறைவனுக்குரிய சக்தி இல்லை’ என்பதை நிரூபித்தார்கள்.
கோபம் கொண்ட நம்ரூத், இப்ராகிம் நபிகளை நெருப்பு கிடங்கில் தூக்கி எறிந்தான். ஆனால் அவர் அச்சம் கொள்ளவில்லை. ‘நான் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் தான் என்னை காப்பாற்றும் வல்லமை பெற்றவன்’ என்றார்கள். நெருப்பிற்கு அல்லாஹ்விடமிருந்து ஆணை வருகிறது.‘நெருப்பே இப்ராகிம் நபியவர்களுக்கு இதம் தரும் குளிராக மாறி விடு’ என்று. நெருப்பும் கட்டளைக்கு அடிபணிந்தது.
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது அனைத்திற்கும் பொருந்தும் என்ற உண்மை இதன் மூலம் வெளிவந்தது.
இறைவனின் கட்டளைக்கு ஏற்ப, இப்ராகிம் நபியவர்கள் தனது மனைவி ஹாஜராவையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு மக்கா நோக்கி பாலைவனத்தில் பயணிக் கிறார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும், அவர்கள் இருவரையும் அப்படியே விட்டு விட்டு திரும்பி செல்கிறார்கள்.
கணவனின் இறையச்சத்தை நன்றாக அறிந்திருந்த அன்னை ஹாஜரா கேட்கிறார்கள் ‘இது இறைவனின் கட்டளையா?’ என்று. ‘ஆம்’ என்பது போல் நபியவர்கள் தன் தலையை மட்டும் அசைக் கிறார்கள்.
‘அப்படி என்றால் திரும்பிச் செல்லுங்கள். இறைவன் எங்களுக்கு போதுமானவன்’ என்று அன்னை ஹாஜரா உறுதி பட சொல் கிறார்கள். அன்னை ஹாஜரா மூலம் இறையச்சம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு பாடமாய் அமைத்து தந்திருக் கிறான் அல்லாஹ்.
பாலைவனத்தில், பச்சிளம் பாலகன் இஸ்மாயில் நபியவர்கள் பசியால் துடிக்கிறார்கள். தண்ணீரையாவது தரலாமே என்று அங்கும் மிங்கும் ஓடுகிறார் கள் ஹாஜரா அம்மையார்.
சபா குன்று பகுதியில் ஒன்றும் கிடைக்காததால், மர்வா குன்றை நோக்கி திரும்புகிறார்கள். பச்சிளம் குழந்தை மணலில் காலை உதைத்து உதைத்து அழுகிறது. காலினால் உதைபட்ட இடத்திலிருந்து ஊற்று ஒன்று உருவாகி ஓடி வருகிறது அமிர்தமான தண்ணீர்.
அள்ளி அள்ளி அருந்துகிறார்கள். போதும் என்ற நிலை வந்த போது, ‘போதும் போதும், நில் நில்’ என்றார்கள் அன்னை. இப்ரூ மொழியில் சொல்லப்பட்ட அந்த வார்த்தை ‘ஜம் ஜம்’. அந்தப் பெயரே பின்னால் அந்த நீரூற்றுக்கு நிலைபெற்றது.
நீராதரமற்ற பாலைவனத்தில் ஓர் அற்புதம் தான் இந்த நீர்ச்சுனை. தோன்றிய நாள் முதல் இன்று வரை அதன் நீர் மட்டம் குறையவில்லை.
அல்லாஹ் மனித குலத்திற்கு இந்த அருட்கொடையை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், நபிகளுக்கு சோதனைகள் அளித்தான். அதன்மூலம் அவர்களின் தியாகங்களை வெளிக்கொணர்ந்தான்.
கனவு காண்கிறார்கள் இப்ராகிம் நபியவர்கள். மகனை அறுத்து பலியிட வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை. மகனின் அனுமதி பெற்று நிறைவேற்றத் துணிந்து விட்டார்கள். கத்தியை கழுத்தில் வைக்கிறார்கள், அறுக்க மறுக்கிறது. அருகில் உள்ள பாறையில் ஓங்கி அடிக்கிறார்கள் பாறை இரண்டாக பிளக்கிறது. அத்தனை கூர்மை. இங்கும் அல்லாஹ்வின் கட்டளை இல்லாததால் அறுக்கும் பண்பு கொண்ட கூரிய கத்தி அறுக்க மறுக்கிறது. இப்ராகிம் நபியவர்களின் தியாகத்தை மெச்சிய அல்லாஹ், ஆட்டை பகரமாக அனுப்பி குர்பானி செய்யச் சொன்னான். இது தான் தியாகத்திருநாளின் வரலாறு.
இப்ராஹிம் நபிகளும், இஸ்மாயில் நபிகளும் இறையில்லமான ‘கஅபா’வை புனரமைப்பதன் நோக்கம் கொண்டே அந்த பாலைவனத்தில் பரிதவிக்க விடப்பட்டார்கள். பாக்கியங்களை அள்ளித்தரும் ‘கஅபா’ என்ற இறையில்லம் மனிதர்களுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற உயர் நோக்கில் தான் இப்ராகிம் நபியவர்களின் வாழ்வில் ஒரு சம்பவமாய் இதுவும் நிகழ்ந் தேறியது.
உலக மக்களின் பெரும் பகுதியினர் இங்கு ஒன்று கூடுகிறார்கள். ஹஜ், உம்ரா கடமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ், இப்ராகிம் நபியின் தியாகத்தை முன்னிறுத்தி அதன் பின்னால் அவன் நாடிய அருட் கிருபைகளை உலகத்தில் பரவ செய்ய வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியுள்ளான். அதனை அனைத்து மக்களுக்கும் பயன்தரக் கூடியதாக ஆக்கிவைத்தான்.
தியாகத்தின் மறுபக்கத்தில் இப்படிபட்ட பெரும் அருட்கிருபைகளை மறைத்து வைத்து மனித குலம் மேம்பட வழி வகுத்து தந்தான்.
எம். முஹம்மது யூசுப் உடன்குடி.
இதில் குறிப்பிடத்தக்கவர் இப்ராகிம் நபிகள். அவரது தியாகங்கள் போற்றப்பட வேண்டும் என்கிற காரணம் ஒருபுறம் இருந்தாலும், அதன் மூலம் அல்லாஹ் ஒட்டு மொத்த மனித குலத்திற்கு தனது அருட்கிருபையை வழங்க நாடினான்.
இப்ராகிம் நபிகளின் தந்தை ஆஜர். இவர் களிமண்ணால் கடவுள் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வந்தார். குழந்தைப்பருவம் கடந்து சிந்திக்கும் திறனைப் பெற்ற போது தனது தந்தையின் இந்த செயலை இப்ராகிம் நபிகளார் நிராகரித்தார்கள். ‘மண்ணுக்கு எந்த மகிமையும் கிடையாது, எல்லா சக்திகளுக்கும் அப்பாற்பட்ட மாபெரும் சக்தி அல்லாஹ்’ என்பதை இப்ராகிம் நபிகள் மூலம் உலக மக்களுக்கு உணர்த்தினான் இறைவன்.
மேலும், ‘நான் தான் கடவுள்’ என்று மக்களை நம்பச் செய்து நாசம் செய்த ‘நம்ரூத்’ என்ற மன்னனை இப்ராகிம் நபிகள் எதிர்த்தார்கள். ‘மனிதனுக்கு இறைவனுக்குரிய சக்தி இல்லை’ என்பதை நிரூபித்தார்கள்.
கோபம் கொண்ட நம்ரூத், இப்ராகிம் நபிகளை நெருப்பு கிடங்கில் தூக்கி எறிந்தான். ஆனால் அவர் அச்சம் கொள்ளவில்லை. ‘நான் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் தான் என்னை காப்பாற்றும் வல்லமை பெற்றவன்’ என்றார்கள். நெருப்பிற்கு அல்லாஹ்விடமிருந்து ஆணை வருகிறது.‘நெருப்பே இப்ராகிம் நபியவர்களுக்கு இதம் தரும் குளிராக மாறி விடு’ என்று. நெருப்பும் கட்டளைக்கு அடிபணிந்தது.
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது அனைத்திற்கும் பொருந்தும் என்ற உண்மை இதன் மூலம் வெளிவந்தது.
இறைவனின் கட்டளைக்கு ஏற்ப, இப்ராகிம் நபியவர்கள் தனது மனைவி ஹாஜராவையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு மக்கா நோக்கி பாலைவனத்தில் பயணிக் கிறார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும், அவர்கள் இருவரையும் அப்படியே விட்டு விட்டு திரும்பி செல்கிறார்கள்.
கணவனின் இறையச்சத்தை நன்றாக அறிந்திருந்த அன்னை ஹாஜரா கேட்கிறார்கள் ‘இது இறைவனின் கட்டளையா?’ என்று. ‘ஆம்’ என்பது போல் நபியவர்கள் தன் தலையை மட்டும் அசைக் கிறார்கள்.
‘அப்படி என்றால் திரும்பிச் செல்லுங்கள். இறைவன் எங்களுக்கு போதுமானவன்’ என்று அன்னை ஹாஜரா உறுதி பட சொல் கிறார்கள். அன்னை ஹாஜரா மூலம் இறையச்சம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு பாடமாய் அமைத்து தந்திருக் கிறான் அல்லாஹ்.
பாலைவனத்தில், பச்சிளம் பாலகன் இஸ்மாயில் நபியவர்கள் பசியால் துடிக்கிறார்கள். தண்ணீரையாவது தரலாமே என்று அங்கும் மிங்கும் ஓடுகிறார் கள் ஹாஜரா அம்மையார்.
சபா குன்று பகுதியில் ஒன்றும் கிடைக்காததால், மர்வா குன்றை நோக்கி திரும்புகிறார்கள். பச்சிளம் குழந்தை மணலில் காலை உதைத்து உதைத்து அழுகிறது. காலினால் உதைபட்ட இடத்திலிருந்து ஊற்று ஒன்று உருவாகி ஓடி வருகிறது அமிர்தமான தண்ணீர்.
அள்ளி அள்ளி அருந்துகிறார்கள். போதும் என்ற நிலை வந்த போது, ‘போதும் போதும், நில் நில்’ என்றார்கள் அன்னை. இப்ரூ மொழியில் சொல்லப்பட்ட அந்த வார்த்தை ‘ஜம் ஜம்’. அந்தப் பெயரே பின்னால் அந்த நீரூற்றுக்கு நிலைபெற்றது.
நீராதரமற்ற பாலைவனத்தில் ஓர் அற்புதம் தான் இந்த நீர்ச்சுனை. தோன்றிய நாள் முதல் இன்று வரை அதன் நீர் மட்டம் குறையவில்லை.
அல்லாஹ் மனித குலத்திற்கு இந்த அருட்கொடையை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், நபிகளுக்கு சோதனைகள் அளித்தான். அதன்மூலம் அவர்களின் தியாகங்களை வெளிக்கொணர்ந்தான்.
கனவு காண்கிறார்கள் இப்ராகிம் நபியவர்கள். மகனை அறுத்து பலியிட வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை. மகனின் அனுமதி பெற்று நிறைவேற்றத் துணிந்து விட்டார்கள். கத்தியை கழுத்தில் வைக்கிறார்கள், அறுக்க மறுக்கிறது. அருகில் உள்ள பாறையில் ஓங்கி அடிக்கிறார்கள் பாறை இரண்டாக பிளக்கிறது. அத்தனை கூர்மை. இங்கும் அல்லாஹ்வின் கட்டளை இல்லாததால் அறுக்கும் பண்பு கொண்ட கூரிய கத்தி அறுக்க மறுக்கிறது. இப்ராகிம் நபியவர்களின் தியாகத்தை மெச்சிய அல்லாஹ், ஆட்டை பகரமாக அனுப்பி குர்பானி செய்யச் சொன்னான். இது தான் தியாகத்திருநாளின் வரலாறு.
இப்ராஹிம் நபிகளும், இஸ்மாயில் நபிகளும் இறையில்லமான ‘கஅபா’வை புனரமைப்பதன் நோக்கம் கொண்டே அந்த பாலைவனத்தில் பரிதவிக்க விடப்பட்டார்கள். பாக்கியங்களை அள்ளித்தரும் ‘கஅபா’ என்ற இறையில்லம் மனிதர்களுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற உயர் நோக்கில் தான் இப்ராகிம் நபியவர்களின் வாழ்வில் ஒரு சம்பவமாய் இதுவும் நிகழ்ந் தேறியது.
உலக மக்களின் பெரும் பகுதியினர் இங்கு ஒன்று கூடுகிறார்கள். ஹஜ், உம்ரா கடமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ், இப்ராகிம் நபியின் தியாகத்தை முன்னிறுத்தி அதன் பின்னால் அவன் நாடிய அருட் கிருபைகளை உலகத்தில் பரவ செய்ய வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியுள்ளான். அதனை அனைத்து மக்களுக்கும் பயன்தரக் கூடியதாக ஆக்கிவைத்தான்.
தியாகத்தின் மறுபக்கத்தில் இப்படிபட்ட பெரும் அருட்கிருபைகளை மறைத்து வைத்து மனித குலம் மேம்பட வழி வகுத்து தந்தான்.
எம். முஹம்மது யூசுப் உடன்குடி.
விவாகரத்து காரணமாக திருமண உறவு முறிந்தாலும், கணவன் இறந்து போன காரணத்தால் திருமண உறவு நீங்கினாலும் மனைவி இவ்வாறு (இத்தா) காத்திருக்க வேண்டும்.
‘இத்தா’ என்பது காத்திருப்புக் காலம். ‘இத்தா’ என்ற சொல்லுக்கு அகராதியில் கணக்கிடுதல், எண்ணுதல் என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் திருமண உறவு நீங்கும்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை மனைவி, மறுமணம் செய்து கொள்ளாமல் எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு ‘இத்தா’ என்பர்.
விவாகரத்து காரணமாக திருமண உறவு முறிந்தாலும், கணவன் இறந்து போன காரணத்தால் திருமண உறவு நீங்கினாலும் மனைவி இவ்வாறு (இத்தா) காத்திருக்க வேண்டும்.
கணவனால் மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண், மூன்று மாதவிடாய் காலமும், கணவனை இழந்த கைம்பெண், நான்கு மாதம் பத்து நாட்களும் மறுமணம் செய்து கொள்ளாமல் தம் கணவர் வீட்டில் தங்கி இருப்பதே ‘இத்தா’ எனப்படும்.
“தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய்கள் ஆகும் வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும்” (2:228) என்றும் “உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணம் அடைந்து விட்டால், அவருடைய அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும்” (2:234) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மணவிலக்குச் செய்யப்பட்ட பெண், இத்தா காலம் முடியும் வரை கணவனுடைய வீட்டிலேயே வசிப்பது கட்டாயம் ஆகும். அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கோ, அங்கிருந்து கணவன் அவளை வெளியேற்றுவதற்கோ அனுமதி கிடையாது.
மணவிலக்கோ அல்லது கணவனின் மரணத்தால் ஏற்படும் பிரிவோ கணவனுடைய வீடு அல்லாத ஓரிடத்தில் வைத்து நடந்தால், சம்பவம் அறிந்த உடனேயே அவள் கணவனின் வீடு செல்வது கட்டாயம் ஆகும்.
மாதவிடாய் அற்றுப் போன பெண், மணவிலக்குச் செய்யப்பட்டால் மூன்று மாதங்கள் ‘இத்தா’ இருக்க வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’ காலம், குழந்தை பெற்றெடுக்கும் வரை ஆகும். கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண்ணின் இத்தா காலமும் குழந்தை பெற்றெடுக்கும் வரையே ஆகும்.
“உங்கள் பெண்களில் எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது’ என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கின்றார்களோ அவர் களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்) அவர்களுடைய இத்தா காலம் மூன்று மாதங்களாகும். மேலும் எந்தப் பெண்களுக்கு இதுவரை மாத விலக்கு வரவில்லையோ அவர் களுக்கான வழிமுறையும் இதுவே! மேலும் கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப் பதுடன் முடிகின்றது” (65:4) என்று திருமறை கூறுகிறது.
கணவனை இழந்த பெண்களை உடனே மறுமணம் செய்ய அனுமதிக்காமல் இவ்வளவு காலம் காத்திருக்கக் கூறுவது, பெண்களைக் கொடுமைப்படுத்துவதற்கு அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்வதற்கே.
கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையில் அவள் இன்னொருவரை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்; இரண்டாம் கணவன் அந்தக் குழந்தை என்னுடைய குழந்தை இல்லை என்று கூறக்கூடும். முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தம்முடைய குடும்பத்துக் குழந்தை இல்லை என்று சொல்லி விடலாம். தந்தை யார் என்று தெரியாததால் அந்தக் குழந்தை மனரீதியாகப் பாதிக்கப்படும். தந்தையிடம் இருந்து கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய் விடும். இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாவது கணவன் நினைத்தால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்.
இத்தகைய காரணங்களால் பெண்களுக்கு நன்மை செய்யும் வகையில் அவர்களின் எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் வருங்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.
“தங்களது கருவறைகளில் அல்லாஹ் எதையேனும் படைத்திருப்பானேயானால் அதை மறைப்பது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” (திருக்குர்ஆன்-2:227) என்பது இறைவன் வாக்கு.
மணவிலக்கு அளித்த அல்லது இறந்துபோன கணவனின் கரு மனைவியின் வயிற்றில் வளர்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்காகவும், மண உறவு அகன்று தான் பிரிந்து வாழ்வதை உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் மனைவி குறிப்பால் உணர்த்துவதற்காகவும் இவ்வாறு ‘இத்தா’ இருப்பது மனைவியின் கடமையாகும்.
கணவனை இழந்த பெண் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ‘அல் இஹ்தாத்’ என்பர். இந்தச் சொல்லுக்கு ‘தடுத்தல்’ என்று அர்த்தம். இறந்தவருக்காகத் துக்கம் கடைப்பிடிப் பதையே மக்கள் வழக்கில் ‘அல் இஹ்தாத்’ என்கிறார்கள்.
அலங்காரம் செய்து கொள்வது, நறுமணம் பூசிக் கொள்வது, அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்வது போன்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயல்களைக் கைவிடுவதே இஸ்லாமிய வழக்கில் ‘அல் இஹ்தாத்’ எனப்படுகிறது. தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற நெருங்கிய உறவினர்களின் இறப்புக்காக ஒரு பெண் மூன்று நாட்கள் வரை இவ்வாறு துக்கம் கடைப்பிடிக்கலாம்.
அதற்கு மேல் கூடாது. ஆனால் கணவனை இழந்த கைம்பெண், கணவன் இறந்தது முதல் அவளது இத்தா காலமான நான்கு மாதம் பத்து நாட்கள் வரை துக்கம் கடைப்பிடிப்பாள். இந்த நாட்களில் அவள் சாதாரண ஆடை அணியலாம். சாதாரண எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொள்ளலாம். நறுமணம் இல்லாத பொருட்களை உடலில் தேய்த்துக் குளிக்கலாம். ஆனால் ஆடையில் கூடுதல் அலங்காரம் செய்தல், வாசனை எண்ணெய் தேய்த்தல், உடையிலோ உடலிலோ நறுமணம் பூசிக்கொள்ளுதல், கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுதல், மறுமணம் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்திட வேண்டும்.
விவாகரத்து காரணமாக திருமண உறவு முறிந்தாலும், கணவன் இறந்து போன காரணத்தால் திருமண உறவு நீங்கினாலும் மனைவி இவ்வாறு (இத்தா) காத்திருக்க வேண்டும்.
கணவனால் மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண், மூன்று மாதவிடாய் காலமும், கணவனை இழந்த கைம்பெண், நான்கு மாதம் பத்து நாட்களும் மறுமணம் செய்து கொள்ளாமல் தம் கணவர் வீட்டில் தங்கி இருப்பதே ‘இத்தா’ எனப்படும்.
“தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய்கள் ஆகும் வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும்” (2:228) என்றும் “உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணம் அடைந்து விட்டால், அவருடைய அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும்” (2:234) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மணவிலக்குச் செய்யப்பட்ட பெண், இத்தா காலம் முடியும் வரை கணவனுடைய வீட்டிலேயே வசிப்பது கட்டாயம் ஆகும். அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கோ, அங்கிருந்து கணவன் அவளை வெளியேற்றுவதற்கோ அனுமதி கிடையாது.
மணவிலக்கோ அல்லது கணவனின் மரணத்தால் ஏற்படும் பிரிவோ கணவனுடைய வீடு அல்லாத ஓரிடத்தில் வைத்து நடந்தால், சம்பவம் அறிந்த உடனேயே அவள் கணவனின் வீடு செல்வது கட்டாயம் ஆகும்.
மாதவிடாய் அற்றுப் போன பெண், மணவிலக்குச் செய்யப்பட்டால் மூன்று மாதங்கள் ‘இத்தா’ இருக்க வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’ காலம், குழந்தை பெற்றெடுக்கும் வரை ஆகும். கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண்ணின் இத்தா காலமும் குழந்தை பெற்றெடுக்கும் வரையே ஆகும்.
“உங்கள் பெண்களில் எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது’ என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கின்றார்களோ அவர் களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்) அவர்களுடைய இத்தா காலம் மூன்று மாதங்களாகும். மேலும் எந்தப் பெண்களுக்கு இதுவரை மாத விலக்கு வரவில்லையோ அவர் களுக்கான வழிமுறையும் இதுவே! மேலும் கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப் பதுடன் முடிகின்றது” (65:4) என்று திருமறை கூறுகிறது.
கணவனை இழந்த பெண்களை உடனே மறுமணம் செய்ய அனுமதிக்காமல் இவ்வளவு காலம் காத்திருக்கக் கூறுவது, பெண்களைக் கொடுமைப்படுத்துவதற்கு அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்வதற்கே.
கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையில் அவள் இன்னொருவரை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்; இரண்டாம் கணவன் அந்தக் குழந்தை என்னுடைய குழந்தை இல்லை என்று கூறக்கூடும். முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தம்முடைய குடும்பத்துக் குழந்தை இல்லை என்று சொல்லி விடலாம். தந்தை யார் என்று தெரியாததால் அந்தக் குழந்தை மனரீதியாகப் பாதிக்கப்படும். தந்தையிடம் இருந்து கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய் விடும். இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாவது கணவன் நினைத்தால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்.
இத்தகைய காரணங்களால் பெண்களுக்கு நன்மை செய்யும் வகையில் அவர்களின் எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் வருங்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.
“தங்களது கருவறைகளில் அல்லாஹ் எதையேனும் படைத்திருப்பானேயானால் அதை மறைப்பது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” (திருக்குர்ஆன்-2:227) என்பது இறைவன் வாக்கு.
மணவிலக்கு அளித்த அல்லது இறந்துபோன கணவனின் கரு மனைவியின் வயிற்றில் வளர்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்காகவும், மண உறவு அகன்று தான் பிரிந்து வாழ்வதை உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் மனைவி குறிப்பால் உணர்த்துவதற்காகவும் இவ்வாறு ‘இத்தா’ இருப்பது மனைவியின் கடமையாகும்.
கணவனை இழந்த பெண் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ‘அல் இஹ்தாத்’ என்பர். இந்தச் சொல்லுக்கு ‘தடுத்தல்’ என்று அர்த்தம். இறந்தவருக்காகத் துக்கம் கடைப்பிடிப் பதையே மக்கள் வழக்கில் ‘அல் இஹ்தாத்’ என்கிறார்கள்.
அலங்காரம் செய்து கொள்வது, நறுமணம் பூசிக் கொள்வது, அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்வது போன்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயல்களைக் கைவிடுவதே இஸ்லாமிய வழக்கில் ‘அல் இஹ்தாத்’ எனப்படுகிறது. தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற நெருங்கிய உறவினர்களின் இறப்புக்காக ஒரு பெண் மூன்று நாட்கள் வரை இவ்வாறு துக்கம் கடைப்பிடிக்கலாம்.
அதற்கு மேல் கூடாது. ஆனால் கணவனை இழந்த கைம்பெண், கணவன் இறந்தது முதல் அவளது இத்தா காலமான நான்கு மாதம் பத்து நாட்கள் வரை துக்கம் கடைப்பிடிப்பாள். இந்த நாட்களில் அவள் சாதாரண ஆடை அணியலாம். சாதாரண எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொள்ளலாம். நறுமணம் இல்லாத பொருட்களை உடலில் தேய்த்துக் குளிக்கலாம். ஆனால் ஆடையில் கூடுதல் அலங்காரம் செய்தல், வாசனை எண்ணெய் தேய்த்தல், உடையிலோ உடலிலோ நறுமணம் பூசிக்கொள்ளுதல், கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுதல், மறுமணம் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்திட வேண்டும்.
அல்லாஹ் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். நேர்வழியில் செல்லத் தகுதி பெற்றவர்களை அவனே நன்கறிவான்!” என்ற இறை வசனமும் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்டது.
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) மற்றும் நபிகளாரின் தந்தையின் சகோதரர் அபூதாலிப் இருவருமே நோய்வாய்ப்பட்டிருந்தனர்.
அபூதாலிபின் உடல்நிலை மோசமடைந்திருந்த நிலையில் நபி முஹம்மது (ஸல்) அவரைச் சந்திக்கச் சென்றார்கள். அங்கே அவரருகே அபூஜஹ்லையும் அப்துல்லாஹ் பின் அபூ உமய்யாவையும் கண்டார்கள். அப்போது நபிகளார், “என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங்கள். இந்த ஏகத்துவ உறுதிமொழிக்காக நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்" என்று சொன்னார்கள். ஆனால், அங்கிருந்த அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இறுதியில் அபூதாலிப் “நான் என் தந்தை அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்” என்று சொல்லி உறுதிமொழி எடுக்க மறத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்குத் தடை விதிக்கப்படும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்பேன்” என்று கூறினார்கள்.
“இறைவனுக்கு இணைவைத்து வணங்குபர்கள் தம் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரி அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை" என்ற இறை வசனமும் “நபியே! நீங்கள் நேசிப்பவர்களையெல்லாம் நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உங்களால் முடியாது. ஆனால், அல்லாஹ் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். நேர்வழியில் செல்லத் தகுதி பெற்றவர்களை அவனே நன்கறிவான்!” என்ற இறை வசனமும் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்டது.
குறைஷித் தலைவர்கள் மற்றும் இணைவைப்பவர்களின் தாக்குதலிலிருந்து நபிகளாரை பாதுகாத்து உதவியது அபூதாலிப். அப்படியிருக்க, அபூதாலிபுக்கு பிரதி உபகாரமாக நபிகளால் என்ன செய்ய முடிந்ததென்று அப்பாஸ் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் “ஆமாம், என் பெரிய தந்தை அபூதாலிப் எனக்குப் பல வகையில் உதவியுள்ளார். அவருக்காக நான் இறைவனிடம் பிரார்த்தித்ததால் இப்போது அவர் கணுக்கால்வரை தீண்டும் சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார், இல்லையென்றால் அவர் நரகின் அடித்தளத்திற்கே சென்றிருப்பார்” என்று கூறினார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் மரணமடைந்தபோது நபிகளார் ஆழ்ந்த துயரத்தில் இருந்தார்கள்.
திருக்குர்ஆன் 9:113, 28:56, ஸஹீஹ் முஸ்லிம் 39:1, 357:1
-ஜெஸிலா பானு.
அபூதாலிபின் உடல்நிலை மோசமடைந்திருந்த நிலையில் நபி முஹம்மது (ஸல்) அவரைச் சந்திக்கச் சென்றார்கள். அங்கே அவரருகே அபூஜஹ்லையும் அப்துல்லாஹ் பின் அபூ உமய்யாவையும் கண்டார்கள். அப்போது நபிகளார், “என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங்கள். இந்த ஏகத்துவ உறுதிமொழிக்காக நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்" என்று சொன்னார்கள். ஆனால், அங்கிருந்த அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இறுதியில் அபூதாலிப் “நான் என் தந்தை அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்” என்று சொல்லி உறுதிமொழி எடுக்க மறத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்குத் தடை விதிக்கப்படும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்பேன்” என்று கூறினார்கள்.
“இறைவனுக்கு இணைவைத்து வணங்குபர்கள் தம் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரி அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை" என்ற இறை வசனமும் “நபியே! நீங்கள் நேசிப்பவர்களையெல்லாம் நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உங்களால் முடியாது. ஆனால், அல்லாஹ் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். நேர்வழியில் செல்லத் தகுதி பெற்றவர்களை அவனே நன்கறிவான்!” என்ற இறை வசனமும் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்டது.
குறைஷித் தலைவர்கள் மற்றும் இணைவைப்பவர்களின் தாக்குதலிலிருந்து நபிகளாரை பாதுகாத்து உதவியது அபூதாலிப். அப்படியிருக்க, அபூதாலிபுக்கு பிரதி உபகாரமாக நபிகளால் என்ன செய்ய முடிந்ததென்று அப்பாஸ் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் “ஆமாம், என் பெரிய தந்தை அபூதாலிப் எனக்குப் பல வகையில் உதவியுள்ளார். அவருக்காக நான் இறைவனிடம் பிரார்த்தித்ததால் இப்போது அவர் கணுக்கால்வரை தீண்டும் சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார், இல்லையென்றால் அவர் நரகின் அடித்தளத்திற்கே சென்றிருப்பார்” என்று கூறினார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் மரணமடைந்தபோது நபிகளார் ஆழ்ந்த துயரத்தில் இருந்தார்கள்.
திருக்குர்ஆன் 9:113, 28:56, ஸஹீஹ் முஸ்லிம் 39:1, 357:1
-ஜெஸிலா பானு.
நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் உலக ஆசையைத் தூண்டிப் பார்த்தனர். நபிகளார் அசரவில்லை.
நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் உலக ஆசையைத் தூண்டிப் பார்த்தனர். நபிகளார் அசரவில்லை. பிறகு பயமுறுத்தினர். நபிகளார் அஞ்சவில்லை. நபிகளாரிடம் பேரம்பேசினர், அதிலும் குறைஷிகளுக்குத் தோல்வி. நபி முஹம்மது (ஸல்) சொன்னதெல்லாம் “உங்கள் விருப்பத்திற்காகத் திருக்குர்ஆனின் வசனங்களை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. இறைவசனங்கள் மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறொன்றையும் நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் நான் வேதனைக்கு ஆளாக வேண்டிவரும், நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று திருக்குர்ஆனின் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
“அல்லாஹ் அறிவித்ததை விடுத்து நான் வேறு ஏதாவது இட்டுக்கட்டியிருந்தால், என்னை நீங்கள் உற்ற நண்பராக்கிக் கொண்டிருப்பீர்கள். நான் உறுதியாளனாக இல்லாமல் உங்கள் பக்கம் சாய்ந்திருந்தால் இந்த வாழ்வில் மட்டுமல்ல, இறந்த பிறகு மறுமையிலும் இரு மடங்கு வேதனையை நான் சுவைத்திருக்க வேண்டி வரும்” என்று திருமறையிலுள்ள வசனங்களையும் குறைஷிகளுக்கு ஓதிக்காட்டினார்கள் நபி முஹம்மது (ஸல்).
ஆத்திரமடைந்த குறைஷிகள் தங்களில் ஒருவரை யூத அறிஞர்களிடம் அனுப்பி நபி (ஸல்) பற்றியும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் பற்றியும் விசாரித்து வரச் செய்தனர். யூத அறிஞர்கள் சில கேள்விகளுக்குப் பதிலை முஹம்மது (ஸல்) சரியாகச் சொல்லிவிட்டால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்றனர். அதன்படியே நபிகளாரிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன.
அத்தியாயம் ‘கஹ்ஃப்’ அருளப்பட்டு, அதிலிருந்து அவர்களுக்கான பதிலை நபிகளார் சிறப்பாகத் தந்தார்கள். குறைஷிகளுக்கு உண்மை விளங்கிவிட்டது, நபிகள் முஹம்மது (ஸல்) கொண்டுவந்தது சத்தியமான மார்க்கம் என்றும் நபிகளார் உண்மையாளர் என்பது பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டனர், ஆனாலும் இறைமறுப்பாளர்கள் நபிகளாரை ஏற்க மறுத்தனர்.
குறைஷிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நபிகளாரின் குடும்பத்தினரை அதாவது இஸ்லாமை ஏற்றவர்கள் ஏற்காதவர்கள் என்றில்லாமல் ஒட்டுமொத்தமாக ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினரை ஒதுக்கி வைத்தனர். கொடுக்கல் வாங்கலோ, திருமண உறவோ எவ்வித தொடர்பும் அவர்களுடன் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தீர்மானித்தனர். இதனால் ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினர் பல இன்னல்களுக்குள்ளாகினர். அவர்களின் வெறுப்பும் சாபமும் குறைஷிகளைப் பாதிக்குமென்று குறைஷிகளில் பெரும்பாலோர் நம்பியதால் அப்படியான உடன்படிக்கையிலிருந்து விடுபட்டனர். ஆனால் இப்படியான இன்னல்களால் மிகவும் தளர்ந்து வலுவிழுந்தார் அபூதாலிப்.
தனது சகோதரனின் மகனான முஹம்மது (ஸல்) அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தனது எண்பது வயதைக் கடந்தும் உறுதியாக இருந்தார்கள். இறை மறுப்பாளர்கள் அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கினால் அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமென்று அஞ்சி அபூதாலிப் உயிருடன் இருக்கும்போதே அவருடன் பேச்சுவார்த்தை நடத்தலாமென்று வந்தனர்.
“அபூதாலிபே! உங்களது சகோதரனின் மகனை அழைத்து அவரிடமிருந்து எங்களுக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். அபூதாலிபும் நபிகளாரை வரவழைத்து வாக்குறுதியை கேட்க முற்பட்டபோது நபி முஹம்மது (ஸல்) “குறைஷிகள் நான் கேட்கும் ஒரே ஒரு சொல்லை சொல்லிவிட்டால் அவர்கள் அரபியர்களையும் அரபி அல்லாதவர்களையும் ஆட்சி செய்யலாம். எல்லோருமே இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று கேட்க, எல்லோரும் ஒப்புக் கொண்டு “அது என்ன சொல்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் “லா இலாஹா இல்லல்லாஹ், வழிபாட்டிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு விலகிவிட வேண்டும்” என்றார்கள். உடனே குறைஷிகள் மறுப்பு தெரிவித்தனர். 'கடவுள்களையெல்லாம் ஒரே கடவுளாக்குவதை அவர்கள் விரும்பவில்லையென்றும் அதில் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஏதோ சுயநலம் உள்ளதென்றும்' கூறி வெளியேறிவிட்டனர்.
அப்போதுதான் அத்தியாயம் ‘ஸாத்’தின் இறைவசனங்கள் அருளப்பட்டன.
(திருக்குர்ஆன் 10:15, 17:73-75, 38:1-8 சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)
-ஜெஸிலா பானு.
“அல்லாஹ் அறிவித்ததை விடுத்து நான் வேறு ஏதாவது இட்டுக்கட்டியிருந்தால், என்னை நீங்கள் உற்ற நண்பராக்கிக் கொண்டிருப்பீர்கள். நான் உறுதியாளனாக இல்லாமல் உங்கள் பக்கம் சாய்ந்திருந்தால் இந்த வாழ்வில் மட்டுமல்ல, இறந்த பிறகு மறுமையிலும் இரு மடங்கு வேதனையை நான் சுவைத்திருக்க வேண்டி வரும்” என்று திருமறையிலுள்ள வசனங்களையும் குறைஷிகளுக்கு ஓதிக்காட்டினார்கள் நபி முஹம்மது (ஸல்).
ஆத்திரமடைந்த குறைஷிகள் தங்களில் ஒருவரை யூத அறிஞர்களிடம் அனுப்பி நபி (ஸல்) பற்றியும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் பற்றியும் விசாரித்து வரச் செய்தனர். யூத அறிஞர்கள் சில கேள்விகளுக்குப் பதிலை முஹம்மது (ஸல்) சரியாகச் சொல்லிவிட்டால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்றனர். அதன்படியே நபிகளாரிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன.
அத்தியாயம் ‘கஹ்ஃப்’ அருளப்பட்டு, அதிலிருந்து அவர்களுக்கான பதிலை நபிகளார் சிறப்பாகத் தந்தார்கள். குறைஷிகளுக்கு உண்மை விளங்கிவிட்டது, நபிகள் முஹம்மது (ஸல்) கொண்டுவந்தது சத்தியமான மார்க்கம் என்றும் நபிகளார் உண்மையாளர் என்பது பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டனர், ஆனாலும் இறைமறுப்பாளர்கள் நபிகளாரை ஏற்க மறுத்தனர்.
குறைஷிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நபிகளாரின் குடும்பத்தினரை அதாவது இஸ்லாமை ஏற்றவர்கள் ஏற்காதவர்கள் என்றில்லாமல் ஒட்டுமொத்தமாக ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினரை ஒதுக்கி வைத்தனர். கொடுக்கல் வாங்கலோ, திருமண உறவோ எவ்வித தொடர்பும் அவர்களுடன் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தீர்மானித்தனர். இதனால் ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினர் பல இன்னல்களுக்குள்ளாகினர். அவர்களின் வெறுப்பும் சாபமும் குறைஷிகளைப் பாதிக்குமென்று குறைஷிகளில் பெரும்பாலோர் நம்பியதால் அப்படியான உடன்படிக்கையிலிருந்து விடுபட்டனர். ஆனால் இப்படியான இன்னல்களால் மிகவும் தளர்ந்து வலுவிழுந்தார் அபூதாலிப்.
தனது சகோதரனின் மகனான முஹம்மது (ஸல்) அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தனது எண்பது வயதைக் கடந்தும் உறுதியாக இருந்தார்கள். இறை மறுப்பாளர்கள் அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கினால் அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமென்று அஞ்சி அபூதாலிப் உயிருடன் இருக்கும்போதே அவருடன் பேச்சுவார்த்தை நடத்தலாமென்று வந்தனர்.
“அபூதாலிபே! உங்களது சகோதரனின் மகனை அழைத்து அவரிடமிருந்து எங்களுக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். அபூதாலிபும் நபிகளாரை வரவழைத்து வாக்குறுதியை கேட்க முற்பட்டபோது நபி முஹம்மது (ஸல்) “குறைஷிகள் நான் கேட்கும் ஒரே ஒரு சொல்லை சொல்லிவிட்டால் அவர்கள் அரபியர்களையும் அரபி அல்லாதவர்களையும் ஆட்சி செய்யலாம். எல்லோருமே இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று கேட்க, எல்லோரும் ஒப்புக் கொண்டு “அது என்ன சொல்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் “லா இலாஹா இல்லல்லாஹ், வழிபாட்டிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு விலகிவிட வேண்டும்” என்றார்கள். உடனே குறைஷிகள் மறுப்பு தெரிவித்தனர். 'கடவுள்களையெல்லாம் ஒரே கடவுளாக்குவதை அவர்கள் விரும்பவில்லையென்றும் அதில் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஏதோ சுயநலம் உள்ளதென்றும்' கூறி வெளியேறிவிட்டனர்.
அப்போதுதான் அத்தியாயம் ‘ஸாத்’தின் இறைவசனங்கள் அருளப்பட்டன.
(திருக்குர்ஆன் 10:15, 17:73-75, 38:1-8 சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)
-ஜெஸிலா பானு.
உலகில் வாழும் நாம் பிறருக்கு செய்யும் அநீதிகள் மூலம் உலகில் நாம் செய்த நல்லறங்கள் யாவும் மறுமையில் பாழாகி போய்விடுகிறது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (மக்களிடம்) ‘திவாலாகிப் போனவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள்.
அங்கு கூடியிருந்த மக்கள், ‘யாரிடம் வெள்ளிக்காசோ, பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களை பொறுத்தவரை திவாலானவர்’ என்று பதிலளித்தார்கள்.
இதற்கு நபிகளார் இவ்வாறு பதில் அளித்தார்கள் :
‘என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார்.அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அந்நேரத்தில்) அவர் ஒருவரை திட்டியிருப்பர்; ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார்; ஒருவரின் பொருளை (முறைகேடாக) புசித்திருப்பர்; ஒருவரை அடித்திருப்பார்.
ஆகவே, அவருடைய நன்மைகளில் இருந்து சிலவற்றை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்படும். இன்னும் சிலவற்றை மற்றவருக்கு கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளில் இருந்து எடுத்து கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களில் இருந்து சிலவற்றை எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும் பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவர். (அவரே திவாலாகிப்போனவர்). (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம் 5037).
உலகில் நிறைவேற்றப்படும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், தான தர்மம், உதவிக்கரம் நீட்டுதல், சமூக சேவை, பொது சேவை, நற்சேவை, நல்லறம் போன்றவற்றின் மூலம் கிடைக்கப்பெறக் கூடிய நற்கூலிகள் தான் மறுமையின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். இத்தகைய சொத்துக்களை சேமித்து வைத்திருப்பவரே மறுமையில் பெரும் செல்வந்தராக மதிக்கப்படுகிறார்.
உலகில் தவறு செய்த செல்வந்தரிடமிருந்து, மறுமையில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்கப்படுகிறது. மறுமையில், செல்வந்தரால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு எப்படி நஷ்டஈடு வழங்க முடியும்?
அங்கே பணத்திற்கும், பொருளுக்கும் வேலை இல்லை. பாதிப்பை ஏற்படுத்தியவரின் நன்மைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். நன்மைகள் அனைத்தும் தீர்ந்த பிறகும் இன்னும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நெடிய வரிசையில் நின்று, நீதி கேட்கும் சமயம், பாதிக்கப்பட்டவரின் பாவங்களை எடுத்து, பாதிப்பை ஏற்படுத்திய வரின் தலையில் இறைவன் போட்டுவிடுவான்.
உலகில் நன்மைகளை செய்தவர் மறுமையில் திவாலாகி விடுகிறார். இங்கே தீமைகளை செய்தவர் அங்கே செல்வந்தராக மாறிவிடுகிறார்கள்.
உலகில் வாழும் நாம் பிறருக்கு செய்யும் அநீதிகள் மூலம் உலகில் நாம் செய்த நல்லறங்கள் யாவும் மறுமையில் பாழாகி போய்விடுகிறது.
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).
“அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசம் அளிப்பான். இறுதியில் அவனை பிடித்து விட்டால், அவனை தப்ப விடமாட்டான்” என இவ்வாறு கூறிவிட்டு “அநீதி இழைத்த ஊர்(காரர்)களைப்பிடிக்கும் போது இவரே உம்முடைய இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி வதைக்கக்கூடியது; கடுமையானது” (திருக்குர்ஆன் 11:102) எனும் இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பாளர்: அபுமூஸா அல்அஷ்அரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5039)
‘அநீதி இழைப்பதிலிருந்து தவித்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது மறுமை நாளில் இருள்களாக காட்சிதரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 5034)
இந்த உலகில் அநீதி இழைத்தவன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அல்லது தனது செல்வாக்கை பயன்படுத்தி, அநீதியான நீதியை நிலைநாட்டிவிடலாம். ஆனால் மறுமையில் இந்த அதிகாரம், சொல்வாக்கு, செல்வாக்கு யாவும் செல்லுபடியாகாது.
அங்கே நீதி தராசு ஒன்று உண்டு. அது மனித நியாயங்களையும், அநியாயங்களையும் நீதமான முறையில் அளந்துகாட்டி விடும்.
இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
“மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (21:47)
இதுதொடர்பாக ஆயிஷா (ரலி) கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அமர்ந்து தனது நிலைமையை எடுத்துக்கூறுகிறார். ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அடிமைகள் உண்டு. அவ்விருவரும் என்னிடம் பொய்யாக நடந்து கொள்கிறார்கள்; மேலும், எனக்கு மோசடி செய்கிறார்கள்: இன்னும், எனக்கு மாறு செய்கிறார்கள்; இதனால் நான் அவர்களை திட்டிவிடுகிறேன்; இன்னும் நான் அவர்களை அடிக்கவும் செய்கிறேன். நான் அவர்களிடம் நடந்துகொள்ளும் முறை எப்படி?’ என வினவுகிறார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் அவர்கள் உனக்கு செய்த பொய், மோசடி, மாறு ஆகியவற்றையும், நீ அவர்களுக்கு வழங்கிய தண்டனையையும் நீதி தராசில் வைத்து நிறுக்கப்படும். அவர்கள் செய்த குற்றங்களுக்கு நிகராக உனது தண்டனை அமைந்துவிட்டால், அது உனக்கு போதுமானதாகும். இதனால் உன்மீது ஏதும் பாவம் கிடையாது. ஆனால், அவர்களின் குற்றங்களை விடவும் உனது தண்டனை குறைவாக அமைந்து விட்டால், இது உனக்கு சிறப்பானதாகும். மாறாக அவர்களை குற்றங்களை விடவும் உனது தண்டனை மேலோங்கிவிட்டால், அவர்களுக்காக உமது நன்மைகள் பிடுங்கப்பட்டு நீ பழிவாங்கப்படுவாய்’ என கூறினார்கள்.
இதை கேட்ட அந்த மனிதர் சப்தமிட்டு அழ ஆரம்பித்து, கண்ணீர் வடித்தார். அவரைப்பார்த்து நபி (ஸல்) அவர்கள் ‘திருக்குர்ஆனில் வருகிற (21:47) இந்த வசனத்தை நீ படிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.
‘உலகில் திவாலாகிப்போனால், முயற்சி செய்து இழந்ததை மீட்டிவிடலாம் மறுமையில் திவாலாகிப்போனால், இழந்த நன்மைகளை ஒரு போதும் மீட்டிவிட முடியாது. ஏனென்றால், மறுமையில் நன்மைகள் புரிய முடியாது. உலகில் நாம் செய்த பாவ-புண்ணியங்களுக்கு அங்கே பிரதிபலன் வழங்கப்படும். நன்மை செய்தால் சுவன இன்பம், தீமை செய்தால் நரக வேதனையின் துன்பம் கிடைக்கும். எனவே, எவர் ஒரு அணுவளவு நன்மை புரிந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவர் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அத(ற்குரிய பல)னையும் அவர் கண்டுகொள்வார்’ (திருக்குர்ஆன் 99:7,8)
ஆதலால், உலகில் நாம் வாழும் போது யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. மனிதர்களின் உரிமை மீறல் விஷயத்தில் ஈடுபடக்கூடாது. ஒரு வேளை மனித உரிமை மீறல் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டால், பாதிக்கப்பட்டவனிடம் சென்று அவனுக்கு கிடைக்கவேண்டிய உரிமையையும், நிவாரணத்தையும் நிறைவேற்றி, அவரிடம் பரிபூரணமான மன்னிப்பையும் பெற்றிட வேண்டும். இது தான் நாம் மறுமையில் திவாலாகாமல் இருப்பதற்கு சிறந்த வழி. இதை விட்டால் வேறு வழி இல்லை.
இத்தகைய சிறந்த வழியை கடைப்பிடிக்கும்படி கருணை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
திருநெல்வேலி டவுன்.
அங்கு கூடியிருந்த மக்கள், ‘யாரிடம் வெள்ளிக்காசோ, பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களை பொறுத்தவரை திவாலானவர்’ என்று பதிலளித்தார்கள்.
இதற்கு நபிகளார் இவ்வாறு பதில் அளித்தார்கள் :
‘என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார்.அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அந்நேரத்தில்) அவர் ஒருவரை திட்டியிருப்பர்; ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார்; ஒருவரின் பொருளை (முறைகேடாக) புசித்திருப்பர்; ஒருவரை அடித்திருப்பார்.
ஆகவே, அவருடைய நன்மைகளில் இருந்து சிலவற்றை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்படும். இன்னும் சிலவற்றை மற்றவருக்கு கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளில் இருந்து எடுத்து கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களில் இருந்து சிலவற்றை எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும் பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவர். (அவரே திவாலாகிப்போனவர்). (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம் 5037).
உலகில் நிறைவேற்றப்படும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், தான தர்மம், உதவிக்கரம் நீட்டுதல், சமூக சேவை, பொது சேவை, நற்சேவை, நல்லறம் போன்றவற்றின் மூலம் கிடைக்கப்பெறக் கூடிய நற்கூலிகள் தான் மறுமையின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். இத்தகைய சொத்துக்களை சேமித்து வைத்திருப்பவரே மறுமையில் பெரும் செல்வந்தராக மதிக்கப்படுகிறார்.
உலகில் தவறு செய்த செல்வந்தரிடமிருந்து, மறுமையில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்கப்படுகிறது. மறுமையில், செல்வந்தரால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு எப்படி நஷ்டஈடு வழங்க முடியும்?
அங்கே பணத்திற்கும், பொருளுக்கும் வேலை இல்லை. பாதிப்பை ஏற்படுத்தியவரின் நன்மைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். நன்மைகள் அனைத்தும் தீர்ந்த பிறகும் இன்னும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நெடிய வரிசையில் நின்று, நீதி கேட்கும் சமயம், பாதிக்கப்பட்டவரின் பாவங்களை எடுத்து, பாதிப்பை ஏற்படுத்திய வரின் தலையில் இறைவன் போட்டுவிடுவான்.
உலகில் நன்மைகளை செய்தவர் மறுமையில் திவாலாகி விடுகிறார். இங்கே தீமைகளை செய்தவர் அங்கே செல்வந்தராக மாறிவிடுகிறார்கள்.
உலகில் வாழும் நாம் பிறருக்கு செய்யும் அநீதிகள் மூலம் உலகில் நாம் செய்த நல்லறங்கள் யாவும் மறுமையில் பாழாகி போய்விடுகிறது.
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).
“அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசம் அளிப்பான். இறுதியில் அவனை பிடித்து விட்டால், அவனை தப்ப விடமாட்டான்” என இவ்வாறு கூறிவிட்டு “அநீதி இழைத்த ஊர்(காரர்)களைப்பிடிக்கும் போது இவரே உம்முடைய இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி வதைக்கக்கூடியது; கடுமையானது” (திருக்குர்ஆன் 11:102) எனும் இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பாளர்: அபுமூஸா அல்அஷ்அரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5039)
‘அநீதி இழைப்பதிலிருந்து தவித்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது மறுமை நாளில் இருள்களாக காட்சிதரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 5034)
இந்த உலகில் அநீதி இழைத்தவன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அல்லது தனது செல்வாக்கை பயன்படுத்தி, அநீதியான நீதியை நிலைநாட்டிவிடலாம். ஆனால் மறுமையில் இந்த அதிகாரம், சொல்வாக்கு, செல்வாக்கு யாவும் செல்லுபடியாகாது.
அங்கே நீதி தராசு ஒன்று உண்டு. அது மனித நியாயங்களையும், அநியாயங்களையும் நீதமான முறையில் அளந்துகாட்டி விடும்.
இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
“மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (21:47)
இதுதொடர்பாக ஆயிஷா (ரலி) கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அமர்ந்து தனது நிலைமையை எடுத்துக்கூறுகிறார். ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அடிமைகள் உண்டு. அவ்விருவரும் என்னிடம் பொய்யாக நடந்து கொள்கிறார்கள்; மேலும், எனக்கு மோசடி செய்கிறார்கள்: இன்னும், எனக்கு மாறு செய்கிறார்கள்; இதனால் நான் அவர்களை திட்டிவிடுகிறேன்; இன்னும் நான் அவர்களை அடிக்கவும் செய்கிறேன். நான் அவர்களிடம் நடந்துகொள்ளும் முறை எப்படி?’ என வினவுகிறார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் அவர்கள் உனக்கு செய்த பொய், மோசடி, மாறு ஆகியவற்றையும், நீ அவர்களுக்கு வழங்கிய தண்டனையையும் நீதி தராசில் வைத்து நிறுக்கப்படும். அவர்கள் செய்த குற்றங்களுக்கு நிகராக உனது தண்டனை அமைந்துவிட்டால், அது உனக்கு போதுமானதாகும். இதனால் உன்மீது ஏதும் பாவம் கிடையாது. ஆனால், அவர்களின் குற்றங்களை விடவும் உனது தண்டனை குறைவாக அமைந்து விட்டால், இது உனக்கு சிறப்பானதாகும். மாறாக அவர்களை குற்றங்களை விடவும் உனது தண்டனை மேலோங்கிவிட்டால், அவர்களுக்காக உமது நன்மைகள் பிடுங்கப்பட்டு நீ பழிவாங்கப்படுவாய்’ என கூறினார்கள்.
இதை கேட்ட அந்த மனிதர் சப்தமிட்டு அழ ஆரம்பித்து, கண்ணீர் வடித்தார். அவரைப்பார்த்து நபி (ஸல்) அவர்கள் ‘திருக்குர்ஆனில் வருகிற (21:47) இந்த வசனத்தை நீ படிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.
‘உலகில் திவாலாகிப்போனால், முயற்சி செய்து இழந்ததை மீட்டிவிடலாம் மறுமையில் திவாலாகிப்போனால், இழந்த நன்மைகளை ஒரு போதும் மீட்டிவிட முடியாது. ஏனென்றால், மறுமையில் நன்மைகள் புரிய முடியாது. உலகில் நாம் செய்த பாவ-புண்ணியங்களுக்கு அங்கே பிரதிபலன் வழங்கப்படும். நன்மை செய்தால் சுவன இன்பம், தீமை செய்தால் நரக வேதனையின் துன்பம் கிடைக்கும். எனவே, எவர் ஒரு அணுவளவு நன்மை புரிந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவர் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அத(ற்குரிய பல)னையும் அவர் கண்டுகொள்வார்’ (திருக்குர்ஆன் 99:7,8)
ஆதலால், உலகில் நாம் வாழும் போது யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. மனிதர்களின் உரிமை மீறல் விஷயத்தில் ஈடுபடக்கூடாது. ஒரு வேளை மனித உரிமை மீறல் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டால், பாதிக்கப்பட்டவனிடம் சென்று அவனுக்கு கிடைக்கவேண்டிய உரிமையையும், நிவாரணத்தையும் நிறைவேற்றி, அவரிடம் பரிபூரணமான மன்னிப்பையும் பெற்றிட வேண்டும். இது தான் நாம் மறுமையில் திவாலாகாமல் இருப்பதற்கு சிறந்த வழி. இதை விட்டால் வேறு வழி இல்லை.
இத்தகைய சிறந்த வழியை கடைப்பிடிக்கும்படி கருணை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
திருநெல்வேலி டவுன்.
இறைவன் ஒருவன் என்ற மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அது உங்களின் ஈருலகத்திற்கு நன்மையைத் தரும்.
உத்பாவை வசியப்படுத்திவிட்டார் முஹம்மத் (ஸல்) என்று நம்பினர் குறைஷிகள். அதனால் உத்பா பேசிய பேரத்தை ஒரு குழுவாக இருந்து பேச குறைஷி தலைவர்கள் ஒன்று கூடினர். அனைவரும் சேர்ந்து கேட்டால் நபிகளார் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்பினர். நபிகளாரை அழைத்து ஆசை வார்த்தை கூறினர். ஆனால் நபி முஹம்மது (ஸல்), “உங்களின் ஆட்சி அதிகாரங்கள் எனக்குத் தேவையற்றது. நான் இறைத்தூதர் மட்டுமே. வேதத்தின் மூலம் உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மட்டுமே நான் இருக்கின்றேன். இறைவன் ஒருவன் என்ற மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அது உங்களின் ஈருலகத்திற்கு நன்மையைத் தரும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்” என்று பதிலளித்தார்கள்.
குறைஷிகள் தங்களின் கேள்விகளைத் தொடர்ந்தனர் “நாங்கள் உங்களிடம் பல கோரிக்கைகளை வைப்போம், கேள்விகளைக் கேட்போம் என்று உங்களது இறைவன் உங்களுக்குச் சொல்லவில்லையா? பதில் சொல்வதற்குத் தேவையானதை அவன் உங்களுக்குக் கற்றுத்தரவில்லையா? சரி, உங்களது இறைவன் உண்மையானவர் என்றால் இந்த மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும். இவ்வூரை செழிப்பாக்க வேண்டும், இறந்துவிட்ட முன்னோர்களை உயிர்ப்பிக்க வேண்டும். மாட மாளிகைகளையும், தோட்டங்களையும், தங்கம், வெள்ளிகளையும் - எங்களுக்கில்லை - உங்களுக்காக உங்களது இறைவனிடம் கேளுங்கள். குறைந்தபட்சம் ஒரு வானவரை எங்களிடம் அனுப்பச் சொல்லுங்கள், நாங்களே அவருடன் பேசித் தெரிந்து கொள்கிறோம். இப்படி ஏதாவது செய்தால்தானே நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை என்று நாங்கள் நம்ப முடியும்?” என்றனர்.
அதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன் கூறிய அதே பதிலையே கூறினார்கள்.
கோபமடைந்த குறைஷிகள் “நீங்கள் எச்சரிப்பதை இப்போதே நிறைவேற்றச் சொல்லுங்கள். எங்கள் மீது வேதனையை இறக்கச் சொல்லுங்கள்” என்று வெடித்தனர். அதற்கும் பொறுமையாக நபி முஹம்மத் (ஸல்) “அல்லாஹ் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள்.
வெறுப்படைந்த குறைஷிகள் அடுத்து நபிகளாரைக் கொலை செய்வது என்று முடிவெடுத்தனர். அபூஜுஹ்ல் ஒரு பெரிய கல்லை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இறை வணக்கம் செய்யும்போது, சிரம் தாழ்த்தும்போது தலையில் போடத் தயாராக இருந்தான். நபிகளாரை நெருங்கி கல்லைத் தூக்கியவன் எதையோ பார்த்து பயந்தவனாக ஓட்டம்பிடித்தான். மற்ற குறைஷிகள் அது பற்றிக் கேட்டபோது “ஒரு மிகப்பெரிய ஒட்டகம் பயங்கரமான கோரைப் பற்களைக் காட்டி என்னைக் கடிக்க வந்தது” என்றான். கொலை முயற்சியிலும் தோற்ற குறைஷிகள், ஒருவேளை நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கம் உண்மையாக இருக்குமோ என்று சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தனரே தவிர இஸ்லாமை ஏற்கவில்லை.
முஹம்மது (ஸல்) அவர்களின் வழியிலேயே சென்று மடக்க மற்றொன்றையும் கேட்டனர் “நீங்கள் வணங்குவதை நாங்களும் வணங்குகிறோம், நாங்கள் வணங்குவதை நீங்களும் வணங்குங்கள். நாம் அனைவரும் இவ்விஷயத்தில் கூட்டாக ஒற்றுமையாக இருப்போம், என்ன சொல்கிறீர்? ” என்றனர்.
அதற்கு நபிகள் “அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்ற இறைவசனத்தை ஓதினார்கள். அத்தியாயம் காஃபிரூனையும் முழுமையாக ஓதினார்கள் “நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்க மாட்டீர்கள். நீங்கள் வணங்குபவைகளை நானும் வணங்க மாட்டேன். உங்களுடைய செயலுக்குரிய கூலி உங்களுக்கும், என்னுடைய செயலுக்குரிய கூலி எனக்கும் கிடைக்கும்” என்றார்கள்.
எல்லா முயற்சிகளிலும் தோற்ற குறைஷிகள், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தனர்.
(திருக்குர்ஆன் 42:14, 39:64, 109:1-6, அர்ரஹீக் அல்மக்தூம்)
- ஜெஸிலா பானு.
குறைஷிகள் தங்களின் கேள்விகளைத் தொடர்ந்தனர் “நாங்கள் உங்களிடம் பல கோரிக்கைகளை வைப்போம், கேள்விகளைக் கேட்போம் என்று உங்களது இறைவன் உங்களுக்குச் சொல்லவில்லையா? பதில் சொல்வதற்குத் தேவையானதை அவன் உங்களுக்குக் கற்றுத்தரவில்லையா? சரி, உங்களது இறைவன் உண்மையானவர் என்றால் இந்த மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும். இவ்வூரை செழிப்பாக்க வேண்டும், இறந்துவிட்ட முன்னோர்களை உயிர்ப்பிக்க வேண்டும். மாட மாளிகைகளையும், தோட்டங்களையும், தங்கம், வெள்ளிகளையும் - எங்களுக்கில்லை - உங்களுக்காக உங்களது இறைவனிடம் கேளுங்கள். குறைந்தபட்சம் ஒரு வானவரை எங்களிடம் அனுப்பச் சொல்லுங்கள், நாங்களே அவருடன் பேசித் தெரிந்து கொள்கிறோம். இப்படி ஏதாவது செய்தால்தானே நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை என்று நாங்கள் நம்ப முடியும்?” என்றனர்.
அதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன் கூறிய அதே பதிலையே கூறினார்கள்.
கோபமடைந்த குறைஷிகள் “நீங்கள் எச்சரிப்பதை இப்போதே நிறைவேற்றச் சொல்லுங்கள். எங்கள் மீது வேதனையை இறக்கச் சொல்லுங்கள்” என்று வெடித்தனர். அதற்கும் பொறுமையாக நபி முஹம்மத் (ஸல்) “அல்லாஹ் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள்.
வெறுப்படைந்த குறைஷிகள் அடுத்து நபிகளாரைக் கொலை செய்வது என்று முடிவெடுத்தனர். அபூஜுஹ்ல் ஒரு பெரிய கல்லை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இறை வணக்கம் செய்யும்போது, சிரம் தாழ்த்தும்போது தலையில் போடத் தயாராக இருந்தான். நபிகளாரை நெருங்கி கல்லைத் தூக்கியவன் எதையோ பார்த்து பயந்தவனாக ஓட்டம்பிடித்தான். மற்ற குறைஷிகள் அது பற்றிக் கேட்டபோது “ஒரு மிகப்பெரிய ஒட்டகம் பயங்கரமான கோரைப் பற்களைக் காட்டி என்னைக் கடிக்க வந்தது” என்றான். கொலை முயற்சியிலும் தோற்ற குறைஷிகள், ஒருவேளை நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கம் உண்மையாக இருக்குமோ என்று சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தனரே தவிர இஸ்லாமை ஏற்கவில்லை.
முஹம்மது (ஸல்) அவர்களின் வழியிலேயே சென்று மடக்க மற்றொன்றையும் கேட்டனர் “நீங்கள் வணங்குவதை நாங்களும் வணங்குகிறோம், நாங்கள் வணங்குவதை நீங்களும் வணங்குங்கள். நாம் அனைவரும் இவ்விஷயத்தில் கூட்டாக ஒற்றுமையாக இருப்போம், என்ன சொல்கிறீர்? ” என்றனர்.
அதற்கு நபிகள் “அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்ற இறைவசனத்தை ஓதினார்கள். அத்தியாயம் காஃபிரூனையும் முழுமையாக ஓதினார்கள் “நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்க மாட்டீர்கள். நீங்கள் வணங்குபவைகளை நானும் வணங்க மாட்டேன். உங்களுடைய செயலுக்குரிய கூலி உங்களுக்கும், என்னுடைய செயலுக்குரிய கூலி எனக்கும் கிடைக்கும்” என்றார்கள்.
எல்லா முயற்சிகளிலும் தோற்ற குறைஷிகள், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தனர்.
(திருக்குர்ஆன் 42:14, 39:64, 109:1-6, அர்ரஹீக் அல்மக்தூம்)
- ஜெஸிலா பானு.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை விவாகரத்து என்பது ஓர் அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது என்று ஒப்பீடு செய்வது பொருத்தமாக இருக்கும்.
“இஸ்லாத்தில் விவாகரத்து செய்வது மிகவும் எளிது. ‘தலாக் தலாக் தலாக்’ என்று மூன்று முறை சொன்னால் மண முறிவு ஏற்பட்டு விடும்; முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து செய்வது அதிக அளவில் உள்ளது” என்பன போன்ற கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இது மிகவும் தவறான கருத்து. முஸ்லிம்களிடையே அதிக அளவில் விவாகரத்து நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்தும் எந்த உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது உண்மை நிலவரமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில், ஒரு நபித்தோழர் ஒரே மூச்சில் மூன்று முறை ‘தலாக்’ கூறி விட்டார். இதைக் கேள்விப்பட்ட நபிகளார், “நான் உங்களுக்கு மத்தியில் உயிரோடு இருக்கும்போதே இறை வசனங்களோடு விளையாடுகிறீர்களா?” என்று மிகுந்த கோபத்தோடு கேட்டார்கள்.
ஒரே தடவையில் மூன்று முறை ‘தலாக்’ கூறினாலும் அது ஒருமுறை சொல்லப்பட்டதாகவே கருதப்படும். ருக்கானா (ரலி) தனது மனைவியை ஒரே இடத்தில் வைத்து மூன்று முறை ‘தலாக்’ கூறி விட்டார். பின்னர் அதற்காகக் கடுமையாகக் கவலைப்பட்டார். “நீங்கள் எவ்வாறு தலாக் சொன்னீர்கள்?” என்று நபிகளார் அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் ‘மூன்று தலாக்’ என்று பதில் அளித்தார். நபிகளார் கேட்டார்கள், ‘ஒரே சமயத்திலா?’. அதற்கு ‘ஆம்’ என்று அவர் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதெல்லாம் ஒரு தலாக் தான். நீங்கள் விரும்பினால் உங்கள் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்” என்றார்கள். அவரும் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டார். (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அவர் களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் காலத்திலும் மூன்று தலாக்குகள் ஒரே தலாக்காகவே கருதப்பட்டது. ‘முத்தலாக்’ என்பது பிற்காலத்தில் வந்த விவாகரத்து முறை. இதனால் இது நூதன தலாக் (தலாக்குள் பித்அத்) என்று கூறப்படுகிறது.
“எல்லா நூதனங்களும் (பித்அத்) வழிகேடு ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தலாக்குகள் அல்லாஹ் ஏற்படுத்திய சட்டத்திற்கும், நபிகளாரின் நடைமுறைக்கும் எதிரானது ஆகும் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.
ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆயினும் சில மார்க்க அறிஞர்கள் ஒரே மூச்சில் முத்தலாக் கூடும் என்று கூறுகிறார்கள்.
ஆண்களுக்கு இருப்பது போலவே, பெண்களுக்கும் விவாகரத்து கோரும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கு, ‘குலா’ என்று பெயர்.
“அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(பிரிந்து) விடுவதில் இவ்விருவர் மீதும் குற்றமில்லை” (திருக்குர்ஆன் 2:229) என்று திருமறை கூறுகிறது. பெண் தரப்பில் விவாகரத்து கோரிக்கை வரும்போது கொடுத்த ‘மஹரை’ ஆண்கள் திரும்பக் கேட்கலாம் என்பதே இதன் கருத்தாகும். ஆனால் ஒரு ஆண் விவாகரத்து கோரிக்கையை முன் வைக்கும்போது அவன் கொடுத்த மஹரைத் திரும்பக் கேட்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே, இந்த வசனத்திற்கு முந்தைய பகுதியில், “நீங்கள் (மனைவியரான) அவர்களுக்குக் கொடுத்தவற்றில் இருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே நபிகளாரும் ஒருமுறை தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஒருமுறை ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “என் கணவர் நல்லவர்தான்; ஆனால் அவருடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை” என்று கூறி விவாகரத்து கோரியபோது, நபிகளார் அந்தப் பெண்ணின் விவாகரத்து கோரிக்கையை ஏற்றார்கள். அந்தப் பெண்ணை நோக்கி, “கணவர் உனக்குக் கொடுத்த தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கத் தயாரா?” என்று கேட்டார்கள். “ஆம், தந்து விடுகிறேன்” என்று அந்தப் பெண் பதில் அளித்தார். “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒருமுறை தலாக் சொல்லி விடுங்கள்” என்று ஸாபித்திடம் கூறினார்கள்.
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில், ஒரு பெண் விவாகரத்து கோரிக்கையை முன்வைத்தார். வேற்றுமைகளை மறந்து கணவனுடன் தொடர்ந்து வாழும்படி கலீபா உமர் கூறியதையும் அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பெண்ணை ஒரு தனி அறையில் மூன்று நாட்கள் தங்க வைக்க கலீபா ஏற்பாடு செய்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து, “இப்போது என்ன சொல்கிறாய்?” என்று கலீபா கேட்டார். அதற்கு அந்தப் பெண், “இந்த மூன்று நாட்கள்தான் நான் அமைதியாகக் கழித்த நாட்கள்” என்று பதில் அளித்தார். இதைக் கேட்ட மறுநொடியே அந்தப் பெண்ணின் விவாகரத்து கோரிக்கையை மறுப்பேதும் சொல்லாமல் உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
எனவே விவாகரத்து கோரும் உரிமை ஆணுக்கு இருப்பது போலவே பெண்ணுக்கும் இருக்கிறது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை விவாகரத்து என்பது ஓர் அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது என்று ஒப்பீடு செய்வது பொருத்தமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போன நிலையில் அறுவை சிகிச்சைக்கு உடன்படுவதைத் தவிர வேறு சிறந்த மார்க்கம் (வழி) இல்லை என்பதால்தான் இஸ்லாம் மார்க்கம், மணவிலக்குக்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில், ஒரு நபித்தோழர் ஒரே மூச்சில் மூன்று முறை ‘தலாக்’ கூறி விட்டார். இதைக் கேள்விப்பட்ட நபிகளார், “நான் உங்களுக்கு மத்தியில் உயிரோடு இருக்கும்போதே இறை வசனங்களோடு விளையாடுகிறீர்களா?” என்று மிகுந்த கோபத்தோடு கேட்டார்கள்.
ஒரே தடவையில் மூன்று முறை ‘தலாக்’ கூறினாலும் அது ஒருமுறை சொல்லப்பட்டதாகவே கருதப்படும். ருக்கானா (ரலி) தனது மனைவியை ஒரே இடத்தில் வைத்து மூன்று முறை ‘தலாக்’ கூறி விட்டார். பின்னர் அதற்காகக் கடுமையாகக் கவலைப்பட்டார். “நீங்கள் எவ்வாறு தலாக் சொன்னீர்கள்?” என்று நபிகளார் அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் ‘மூன்று தலாக்’ என்று பதில் அளித்தார். நபிகளார் கேட்டார்கள், ‘ஒரே சமயத்திலா?’. அதற்கு ‘ஆம்’ என்று அவர் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதெல்லாம் ஒரு தலாக் தான். நீங்கள் விரும்பினால் உங்கள் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்” என்றார்கள். அவரும் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டார். (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அவர் களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் காலத்திலும் மூன்று தலாக்குகள் ஒரே தலாக்காகவே கருதப்பட்டது. ‘முத்தலாக்’ என்பது பிற்காலத்தில் வந்த விவாகரத்து முறை. இதனால் இது நூதன தலாக் (தலாக்குள் பித்அத்) என்று கூறப்படுகிறது.
“எல்லா நூதனங்களும் (பித்அத்) வழிகேடு ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தலாக்குகள் அல்லாஹ் ஏற்படுத்திய சட்டத்திற்கும், நபிகளாரின் நடைமுறைக்கும் எதிரானது ஆகும் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.
ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆயினும் சில மார்க்க அறிஞர்கள் ஒரே மூச்சில் முத்தலாக் கூடும் என்று கூறுகிறார்கள்.
ஆண்களுக்கு இருப்பது போலவே, பெண்களுக்கும் விவாகரத்து கோரும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கு, ‘குலா’ என்று பெயர்.
“அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(பிரிந்து) விடுவதில் இவ்விருவர் மீதும் குற்றமில்லை” (திருக்குர்ஆன் 2:229) என்று திருமறை கூறுகிறது. பெண் தரப்பில் விவாகரத்து கோரிக்கை வரும்போது கொடுத்த ‘மஹரை’ ஆண்கள் திரும்பக் கேட்கலாம் என்பதே இதன் கருத்தாகும். ஆனால் ஒரு ஆண் விவாகரத்து கோரிக்கையை முன் வைக்கும்போது அவன் கொடுத்த மஹரைத் திரும்பக் கேட்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே, இந்த வசனத்திற்கு முந்தைய பகுதியில், “நீங்கள் (மனைவியரான) அவர்களுக்குக் கொடுத்தவற்றில் இருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே நபிகளாரும் ஒருமுறை தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஒருமுறை ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “என் கணவர் நல்லவர்தான்; ஆனால் அவருடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை” என்று கூறி விவாகரத்து கோரியபோது, நபிகளார் அந்தப் பெண்ணின் விவாகரத்து கோரிக்கையை ஏற்றார்கள். அந்தப் பெண்ணை நோக்கி, “கணவர் உனக்குக் கொடுத்த தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கத் தயாரா?” என்று கேட்டார்கள். “ஆம், தந்து விடுகிறேன்” என்று அந்தப் பெண் பதில் அளித்தார். “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒருமுறை தலாக் சொல்லி விடுங்கள்” என்று ஸாபித்திடம் கூறினார்கள்.
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில், ஒரு பெண் விவாகரத்து கோரிக்கையை முன்வைத்தார். வேற்றுமைகளை மறந்து கணவனுடன் தொடர்ந்து வாழும்படி கலீபா உமர் கூறியதையும் அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பெண்ணை ஒரு தனி அறையில் மூன்று நாட்கள் தங்க வைக்க கலீபா ஏற்பாடு செய்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து, “இப்போது என்ன சொல்கிறாய்?” என்று கலீபா கேட்டார். அதற்கு அந்தப் பெண், “இந்த மூன்று நாட்கள்தான் நான் அமைதியாகக் கழித்த நாட்கள்” என்று பதில் அளித்தார். இதைக் கேட்ட மறுநொடியே அந்தப் பெண்ணின் விவாகரத்து கோரிக்கையை மறுப்பேதும் சொல்லாமல் உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
எனவே விவாகரத்து கோரும் உரிமை ஆணுக்கு இருப்பது போலவே பெண்ணுக்கும் இருக்கிறது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை விவாகரத்து என்பது ஓர் அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது என்று ஒப்பீடு செய்வது பொருத்தமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போன நிலையில் அறுவை சிகிச்சைக்கு உடன்படுவதைத் தவிர வேறு சிறந்த மார்க்கம் (வழி) இல்லை என்பதால்தான் இஸ்லாம் மார்க்கம், மணவிலக்குக்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று தொடங்கி அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள்.
உமர் பின் கத்தாப் (ரலி) முஸ்லிமாகிவிட்ட பிறகு, நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள் “நாம் ஏன் மறைவாகச் செயல்பட வேண்டும்? நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியாக வேண்டும்” என்று இரண்டு குழுவாக முஸ்லிம்களைக் கூட்டி, ஒரு பக்கம் ஹம்ஜா (ரலி) நிற்க, மறுபக்கம் உமர் (ரலி) நிற்க, நடுவில் நபி முஹம்மது (ஸல்) என்று ஒரு திரளாக இறை இல்லத்திற்குள் நுழைந்தவுடன் குறைஷிகள் பீதியடைந்தனர். குறைஷிகளின் இரு வலிமை மிக்க வீரர்களான ஹம்ஜா (ரலி) மற்றும் உமர் (ரலி) இஸ்லாமை ஏற்ற பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு வேதனை தருவதை குறைத்து கொண்டனர். நபி முஹம்மது (ஸல்) அவர்கள், ‘அல் ஃபாரூக்’ அதாவது நன்மை- தீமையை பிரித்தறிபவர் என உமர் (ரலி) அவர்களுக்குப் பெயரிட்டார்கள்.
மற்றொரு நாள் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உத்பா இப்னு ரபீஆ என்பவர் குறைஷிகளின் அனுமதியுடன் நபி (ஸல்) அவர்களை நெருங்கினார். நபி (ஸல்) அவர்களிடம் உத்பா, “எனது சகோதரனின் மகனே! நீ எங்களின் வம்சத்தில் கண்ணியமிக்கவர்.
ஆனால் நீ கொண்டு வந்த புதிய மார்க்கத்தால் நமது சமுதாயத்தின் ஒற்றுமை குலைகிறது. எங்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் புறக்கணித்துவிட்டாய். நமக்கு முன் சென்ற நமது முன்னோர்களை ‘நிராகரித்தவர்கள்’ என்று கூறிவிட்டாய்! ஏன் இப்படிச் செய்கிறாய்? நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேர்க்க விரும்பினால், பெரிய செல்வந்தராக வேண்டுமென்று ஆசைப்பட்டால் எங்கள் செல்வங்களை உன்னிடம் கொடுத்துவிடுகிறோம்.
ஆட்சி அதிகாரத்திற்காகத்தான் இதெல்லாமென்றால் உன்னையே எங்கள் அரசராக்கிக் கொள்கிறோம். அல்லது உனக்குப் பித்துப் பிடித்திருந்தால், உடல்நிலை குறைபாடின் சிக்கலால் இப்படிச் செய்கிறாயென்றால் எங்கள் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கிறோம். என்ன சொல்கிறாய்?” என்று மிகவும் நயமாகப் பேசினார்.
அவருக்கு பதில் தரும் வகையில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று தொடங்கி அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். அந்த அத்தியாயம் ஸஜ்தாவுடையது அதாவது நெற்றி தரையில் படும்படி சிரம் தாழ்த்தி வணங்குதல், (திருக்குர்ஆன் வாசிக்கும்போது சில இடங்களில் அல்லாஹ்வுக்கு சிரம் பணியுங்கள் என்று வரும் இடங்களில் ஸஜ்தா செய்ய வேண்டும்.) அப்படியே நபி முஹம்மது (ஸல்) ஸஜ்தா செய்தார்கள். ஓதி முடித்த பிறகு உத்பாவிடம் “நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன், இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று நபி முஹம்மது (ஸல்) பதிலளித்தார்கள்.
முகத்தைத் தொங்கப்போட்டவராக, பலமான யோசனையோடு திரும்பிய உத்பா, குறைஷிகளிடம் “முஹம்மதை விட்டு விடுவோம். அவருடைய பணியில் குறுக்கிடாமல் இருப்போம். முஹம்மது என்னிடம் சொன்னது கவிதை அல்ல, ஜோசியமும் அல்ல. என்னால் விவரிக்க முடியாததை அவர் ஓதினார். ஆனால் அதற்கு மகத்தான ஆற்றல் உள்ளது. மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டாலும் அல்லது அழித்துவிட்டாலும் அது நமக்கு வெற்றிதானே?” என்று குறைஷிகளைக் குழப்புவதுபோல் பேசினார்.
அதற்குக் குறைஷிகள் “முஹம்மத் தன்னுடைய நாவன்மையால் உத்பாவை வசியப்படுத்திவிட்டார். இனி தனி நபராக யாரும் முஹம்மதை சந்தித்துப் பேச வேண்டாம். நாம் குழுவாகச் சென்று உத்பா பேசிய பேரத்தை பேசுவோம்” என்று பேசி முடிவெடுத்தனர்.
(திருக்குர்ஆன் 41:1-13, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)
- ஜெஸிலா பானு.
மற்றொரு நாள் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உத்பா இப்னு ரபீஆ என்பவர் குறைஷிகளின் அனுமதியுடன் நபி (ஸல்) அவர்களை நெருங்கினார். நபி (ஸல்) அவர்களிடம் உத்பா, “எனது சகோதரனின் மகனே! நீ எங்களின் வம்சத்தில் கண்ணியமிக்கவர்.
ஆனால் நீ கொண்டு வந்த புதிய மார்க்கத்தால் நமது சமுதாயத்தின் ஒற்றுமை குலைகிறது. எங்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் புறக்கணித்துவிட்டாய். நமக்கு முன் சென்ற நமது முன்னோர்களை ‘நிராகரித்தவர்கள்’ என்று கூறிவிட்டாய்! ஏன் இப்படிச் செய்கிறாய்? நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேர்க்க விரும்பினால், பெரிய செல்வந்தராக வேண்டுமென்று ஆசைப்பட்டால் எங்கள் செல்வங்களை உன்னிடம் கொடுத்துவிடுகிறோம்.
ஆட்சி அதிகாரத்திற்காகத்தான் இதெல்லாமென்றால் உன்னையே எங்கள் அரசராக்கிக் கொள்கிறோம். அல்லது உனக்குப் பித்துப் பிடித்திருந்தால், உடல்நிலை குறைபாடின் சிக்கலால் இப்படிச் செய்கிறாயென்றால் எங்கள் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கிறோம். என்ன சொல்கிறாய்?” என்று மிகவும் நயமாகப் பேசினார்.
அவருக்கு பதில் தரும் வகையில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று தொடங்கி அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். அந்த அத்தியாயம் ஸஜ்தாவுடையது அதாவது நெற்றி தரையில் படும்படி சிரம் தாழ்த்தி வணங்குதல், (திருக்குர்ஆன் வாசிக்கும்போது சில இடங்களில் அல்லாஹ்வுக்கு சிரம் பணியுங்கள் என்று வரும் இடங்களில் ஸஜ்தா செய்ய வேண்டும்.) அப்படியே நபி முஹம்மது (ஸல்) ஸஜ்தா செய்தார்கள். ஓதி முடித்த பிறகு உத்பாவிடம் “நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன், இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று நபி முஹம்மது (ஸல்) பதிலளித்தார்கள்.
முகத்தைத் தொங்கப்போட்டவராக, பலமான யோசனையோடு திரும்பிய உத்பா, குறைஷிகளிடம் “முஹம்மதை விட்டு விடுவோம். அவருடைய பணியில் குறுக்கிடாமல் இருப்போம். முஹம்மது என்னிடம் சொன்னது கவிதை அல்ல, ஜோசியமும் அல்ல. என்னால் விவரிக்க முடியாததை அவர் ஓதினார். ஆனால் அதற்கு மகத்தான ஆற்றல் உள்ளது. மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டாலும் அல்லது அழித்துவிட்டாலும் அது நமக்கு வெற்றிதானே?” என்று குறைஷிகளைக் குழப்புவதுபோல் பேசினார்.
அதற்குக் குறைஷிகள் “முஹம்மத் தன்னுடைய நாவன்மையால் உத்பாவை வசியப்படுத்திவிட்டார். இனி தனி நபராக யாரும் முஹம்மதை சந்தித்துப் பேச வேண்டாம். நாம் குழுவாகச் சென்று உத்பா பேசிய பேரத்தை பேசுவோம்” என்று பேசி முடிவெடுத்தனர்.
(திருக்குர்ஆன் 41:1-13, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)
- ஜெஸிலா பானு.
முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு ஒளி கீற்று மின்னத்தொடங்கியது.
நபித்துவத்தின் ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையிலும், இஸ்லாமை ஏற்றதைக் குறித்து வெளிப்படையாக யாருமே சொல்ல முடியவில்லை. காரணம் அக்காலத்தில் ஒருவர் முஸ்லிமாகி விட்டார் என்று தெரியவந்தால் அனைவரும் அவரைப் பிடித்து அடிப்பார்கள், சண்டைக்கு வருவார்கள்.
ஆறாம் ஆண்டு் தொடக்கத்தில் வலிமைமிக்க ஹம்ஜா (ரலி) இஸ்லாமை ஏற்றார். அவரைப் போன்ற மற்றொருவரும் இஸ்லாமிற்குத் தேவைப்பட்டது. நபி முஹம்மது (ஸல்) இறைவனிடம் “அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
இரவு நேரத்தில் உமர் இப்னு கத்தாப் இறை இல்லமான கஅபாவின் திரைக்குள் நுழைந்த போது அங்கு நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்ததைக் கவனித்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) ‘அல் ஹாஃக்கா’ அத்தியாயத்தின் வசனங்களை ஓதினார்கள். தன்னை அறியாமல் அதனை உமர் இப்னு கத்தாப் ரசிக்க ஆரம்பித்தார்கள். மனத்திற்குள் ‘இவர் கவிஞராக இருப்பாரோ!’ என்று உமர் நினைக்க, “இது, நிச்சயமாக நம்மால் (இறைவனால்) அறிவிக்கப்பட்டபடி மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும், ஒரு கவிஞனுடைய சொல்லல்ல.
எனினும், இதனை வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள்” என்ற திருக்குர்ஆனின் அத்தியாயம் 69-இன் வசனங்களை ஓதக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். மறுபடியும் மனதினுள் ‘இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ!’ என்று நினைத்து முடிக்குமுன் “இது ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. எனினும், இதனைக் கொண்டு வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள்.
உலகத்தார்களின் இறைவனால் இறக்கப்பட்டுள்ளது” என்று அதே அத்தியாயத்தின் தொடர்ச்சிகளை ஓத செவிமடுத்த உமர் பின் கத்தாப், இஸ்லாமை மனதளவில் கடுகளவு ஏற்றுக் கொள்ள விருப்பங்கொண்டாலும், தனது மூதாதையர்கள் விட்டுச் சென்ற வழிமுறைகளையும் சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று தீவிரமாக இருந்தார்கள்.
அந்த நிலையில், உமர் பின் கத்தாபுக்கு தனது சகோதரியும் அவரது கணவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட செய்தி கிடைத்தது. ஆத்திரமடைந்தவர்களாக அவருடைய சகோதரியின் வீட்டிற்கு விரைந்தார்கள். அங்கு அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்ததை உமர் கேட்டுவிட்டார்கள். உமர் வருவதை அறிந்து அந்த ஏட்டை மறைத்து வைத்தார் உமரின் சகோதரி. அனுமதி பெற்று உள்ளே நுழைந்த உமர் “நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
அதற்கு உமரின் சகோதரியின் கணவர் “உமரே, உன்னுடைய மார்க்கத்தில் இல்லாதது, சத்தியமானது வேறொரு மார்க்கத்தில் இருந்தால் உன் கருத்து என்ன?” என்று கேட்டார். கடுஞ்சினம் கொண்டு தனது சகோதரியின் கணவர் என்றும் பாராமல் அவரை அடித்து மிதித்தார் உமர். உமரை விலக்க வந்த தனது சகோதரியையும் கன்னத்தில் அறைந்து காயத்தை ஏற்படுத்தினார்.
உடனே அவரது சகோதரி “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று உரக்கக் கூறினார். ஏற்கெனவே கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காகச் சோதனைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்திருந்த உமர், தனது சகோதரியின் உறுதியையும் கண்டு திக்குமுக்காடிப் போனார்.
"நீங்கள் ஓதிக் கொண்டிருந்ததைக் காட்டுங்கள்" என்று உமர் கேட்டார். அவரது சகோதரி “நீ அசுத்தமாக இருக்கிறாய், குளித்து வா தருகிறேன்” என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையைக் கையிலேந்தி “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்)” என்று ஓதியவுடன் “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து அத்தியாயம் ‘தாஹா’வை ஓதிப் பார்த்தார்.
நெகிழ்ந்தார். உண்மையை அறிந்து கொண்டவராக நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் தேடி வந்து “அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ். அதாவது வழிபாட்டிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்” என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் “அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன்” என்று முழங்கினர்.
முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு ஒளி கீற்று மின்னத்தொடங்கியது.
(அல்குர்ஆன் 69:40-43, ஸஹீஹ் புகாரி 4:63:3862, 3867 )
- ஜெஸிலா பானு, துபாய்
ஆறாம் ஆண்டு் தொடக்கத்தில் வலிமைமிக்க ஹம்ஜா (ரலி) இஸ்லாமை ஏற்றார். அவரைப் போன்ற மற்றொருவரும் இஸ்லாமிற்குத் தேவைப்பட்டது. நபி முஹம்மது (ஸல்) இறைவனிடம் “அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
இரவு நேரத்தில் உமர் இப்னு கத்தாப் இறை இல்லமான கஅபாவின் திரைக்குள் நுழைந்த போது அங்கு நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்ததைக் கவனித்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) ‘அல் ஹாஃக்கா’ அத்தியாயத்தின் வசனங்களை ஓதினார்கள். தன்னை அறியாமல் அதனை உமர் இப்னு கத்தாப் ரசிக்க ஆரம்பித்தார்கள். மனத்திற்குள் ‘இவர் கவிஞராக இருப்பாரோ!’ என்று உமர் நினைக்க, “இது, நிச்சயமாக நம்மால் (இறைவனால்) அறிவிக்கப்பட்டபடி மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும், ஒரு கவிஞனுடைய சொல்லல்ல.
எனினும், இதனை வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள்” என்ற திருக்குர்ஆனின் அத்தியாயம் 69-இன் வசனங்களை ஓதக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். மறுபடியும் மனதினுள் ‘இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ!’ என்று நினைத்து முடிக்குமுன் “இது ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. எனினும், இதனைக் கொண்டு வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள்.
உலகத்தார்களின் இறைவனால் இறக்கப்பட்டுள்ளது” என்று அதே அத்தியாயத்தின் தொடர்ச்சிகளை ஓத செவிமடுத்த உமர் பின் கத்தாப், இஸ்லாமை மனதளவில் கடுகளவு ஏற்றுக் கொள்ள விருப்பங்கொண்டாலும், தனது மூதாதையர்கள் விட்டுச் சென்ற வழிமுறைகளையும் சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று தீவிரமாக இருந்தார்கள்.
அந்த நிலையில், உமர் பின் கத்தாபுக்கு தனது சகோதரியும் அவரது கணவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட செய்தி கிடைத்தது. ஆத்திரமடைந்தவர்களாக அவருடைய சகோதரியின் வீட்டிற்கு விரைந்தார்கள். அங்கு அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்ததை உமர் கேட்டுவிட்டார்கள். உமர் வருவதை அறிந்து அந்த ஏட்டை மறைத்து வைத்தார் உமரின் சகோதரி. அனுமதி பெற்று உள்ளே நுழைந்த உமர் “நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
அதற்கு உமரின் சகோதரியின் கணவர் “உமரே, உன்னுடைய மார்க்கத்தில் இல்லாதது, சத்தியமானது வேறொரு மார்க்கத்தில் இருந்தால் உன் கருத்து என்ன?” என்று கேட்டார். கடுஞ்சினம் கொண்டு தனது சகோதரியின் கணவர் என்றும் பாராமல் அவரை அடித்து மிதித்தார் உமர். உமரை விலக்க வந்த தனது சகோதரியையும் கன்னத்தில் அறைந்து காயத்தை ஏற்படுத்தினார்.
உடனே அவரது சகோதரி “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று உரக்கக் கூறினார். ஏற்கெனவே கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காகச் சோதனைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்திருந்த உமர், தனது சகோதரியின் உறுதியையும் கண்டு திக்குமுக்காடிப் போனார்.
"நீங்கள் ஓதிக் கொண்டிருந்ததைக் காட்டுங்கள்" என்று உமர் கேட்டார். அவரது சகோதரி “நீ அசுத்தமாக இருக்கிறாய், குளித்து வா தருகிறேன்” என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையைக் கையிலேந்தி “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்)” என்று ஓதியவுடன் “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து அத்தியாயம் ‘தாஹா’வை ஓதிப் பார்த்தார்.
நெகிழ்ந்தார். உண்மையை அறிந்து கொண்டவராக நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் தேடி வந்து “அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ். அதாவது வழிபாட்டிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்” என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் “அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன்” என்று முழங்கினர்.
முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு ஒளி கீற்று மின்னத்தொடங்கியது.
(அல்குர்ஆன் 69:40-43, ஸஹீஹ் புகாரி 4:63:3862, 3867 )
- ஜெஸிலா பானு, துபாய்






