என் மலர்
இஸ்லாம்
திருக்குர்ஆனில் சூரியனையும், சந்திரனையும் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக அறிவியல்பூர்வமான அழகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
சூரியக்குடும்பத்தில் உள்ள பெரிய துணைக்கோள் சந்திரன். இதற்கு நிலா, நிலவு, திங்கள், மதி என்ற பெயர்களும் உண்டு. இது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதற்காக சந்திரன் எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் 29½ நாட்கள் ஆகும்.
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்க ஒரு ஆண்டு என்பதும் விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவு.
“அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்) சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவைகளுக்கு (மாறி மாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை” (10:5) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
நிலவின் கலைகள் என்பது நிலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிக்கும். இதை ‘பிறை’ என்று சொல்வது வழக்கம். முதல் நாள் நிலவே தெரியாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதை ‘அமாவாசை’ என்பார்கள். பிறகு ஒவ்வொரு நாளும் சிறு சிறு நிலா (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிக் கொண்டே வரும். பிறகு 14 நாட்கள் கழித்து ஒருநாள் ‘முழு நிலா’ பெரிதாய் வட்ட வடிவமாய்த் தெரியும். இதைப் ‘பவுர்ணமி’ என்று அழைப்பார்கள். பின்னர் சில நாட்கள் நிலா சிறுக சிறுக தேய்ந்து கொண்டே போய் மீண்டும் ‘அமாவாசை’ வரும்.
சந்திரன் முழு நிலா வரை வளர்ந்து வருவதை ‘வளர் பிறை’ என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் ‘தேய்பிறை’ என்றும் அழைக்கிறார்கள்.
“(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கின்றோம்” (36:39) என்பது இறை வசனம்.
காலக்கணக்கு எனப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கை, மாதங்களின் எண்ணிக்கை மற்றும் வாரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட சந்திரனின்நிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சூரியன் உதிப்பதில் இருந்து மறையும் வரை எவ்வாறு நாளானது பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றதோ, அதைப்போல ஒவ்வொரு நாளும் இரவில் தோன்றி மறையும் சந்திரனின் நிலைகள் மாதங்களின் எண்ணிக்கையை அறிய உதவுகிறது. இவற்றை மேற்கண்ட இரு வசனங்களும் எடுத்துரைக்கின்றன.
எவ்வாறு பழைய பேரீச்ச மடல் பல நெளிவுகளைக் கொண்டுள்ளதோ, அதேபோல சூரியனைப் பூமியோடு சுற்றி வரும் சந்திரனின் பாதையும் பல்வேறு வளைவுகளைக் கொண்டுள்ளது. இதை நவீன விஞ்ஞானத்தின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் குர்ஆன் கூறும் பழைய பேரீச்ச மடல் உவமை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளதை அறியலாம்.
மேலும், “(நபியே!) மாதந்தோறும் வளர்ந்து தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘அவை மனிதர் களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களையும் அறிவிக்கக் கூடியவை” (2:189) என்று திருமறை கூறுகிறது.

சந்திரன் சுயமாகத் தனது பால் ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று பழங்காலத்தில் மக்கள் நம்பி வந்தனர். ஆனால் இன்றோ நிலவின் ஒளி, பிரதிபலிக்கப்பட்ட ஒளியேயாகும் என்ற உண்மையை விஞ்ஞானிகள் வெளிஉலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
“அவற்றுக்கிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும், ஒளிர்கின்ற சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியவான்” (25:61) என்றும்,
“இன்னும் அவற்றில் சந்திரனை பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்” (71:16) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
திருக்குர்ஆனில் சூரியனையும், சந்திரனையும் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக அறிவியல்பூர்வமான அழகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
திருக்குர்ஆனில் சூரியனைச் சுட்டும் அரபுச் சொல், ‘ஷம்ஸ்’. இதை ‘ஸிராஜ்’ (ஒளி விளக்கு), ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு), ‘லியா’ (ஒளிரும் மகிமை) என்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
சூரியன் கடும் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் கொண்டது. எனவே திருக்குர் ஆனில் சூரியனைக் குறிக்க பயன்படுத்தும் மூன்று வர்ணனை வார்த்தைகளும் பொருத்தமானவை.
சந்திரனைக் குறிக்கும் அரபுச் சொல், ‘கமர்’ என்பதாகும். மேலும் திருக்குர்ஆன் சந்திரனை ‘முனீர்’ என்றும் வர்ணிக்கிறது. முனீர் என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று அர்த்தம். இதன் மூலம் சந்திரன் சுயமாக ஒளியை வழங்குவதில்லை. சூரிய ஒளியைப் பெற்றுப் பிரதிபலிக்கிறது என்பது புலனாகிறது.
திருக்குர்ஆனில் எந்த இடத்திலும், சந்திரனைக் குறித்திட ‘ஸிராஜ்’ ‘வஹ்ஹாஜ்’ ‘லியா’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவில்லை. அதைப்போல சூரியனைக் குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்கள் சொல்லப்படவில்லை.
இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், சூரிய ஒளிக்கும், நிலவொளிக்கும் உள்ள இயல்பான வேறுபாட்டை ‘வார்த்தை விளையாட்டு’களின் மூலம் திருக்குர்ஆன் வெளிப்படுத்தியுள்ளது.
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்க ஒரு ஆண்டு என்பதும் விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவு.
“அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்) சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவைகளுக்கு (மாறி மாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை” (10:5) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
நிலவின் கலைகள் என்பது நிலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிக்கும். இதை ‘பிறை’ என்று சொல்வது வழக்கம். முதல் நாள் நிலவே தெரியாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதை ‘அமாவாசை’ என்பார்கள். பிறகு ஒவ்வொரு நாளும் சிறு சிறு நிலா (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிக் கொண்டே வரும். பிறகு 14 நாட்கள் கழித்து ஒருநாள் ‘முழு நிலா’ பெரிதாய் வட்ட வடிவமாய்த் தெரியும். இதைப் ‘பவுர்ணமி’ என்று அழைப்பார்கள். பின்னர் சில நாட்கள் நிலா சிறுக சிறுக தேய்ந்து கொண்டே போய் மீண்டும் ‘அமாவாசை’ வரும்.
சந்திரன் முழு நிலா வரை வளர்ந்து வருவதை ‘வளர் பிறை’ என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் ‘தேய்பிறை’ என்றும் அழைக்கிறார்கள்.
“(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கின்றோம்” (36:39) என்பது இறை வசனம்.
காலக்கணக்கு எனப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கை, மாதங்களின் எண்ணிக்கை மற்றும் வாரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட சந்திரனின்நிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சூரியன் உதிப்பதில் இருந்து மறையும் வரை எவ்வாறு நாளானது பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றதோ, அதைப்போல ஒவ்வொரு நாளும் இரவில் தோன்றி மறையும் சந்திரனின் நிலைகள் மாதங்களின் எண்ணிக்கையை அறிய உதவுகிறது. இவற்றை மேற்கண்ட இரு வசனங்களும் எடுத்துரைக்கின்றன.
எவ்வாறு பழைய பேரீச்ச மடல் பல நெளிவுகளைக் கொண்டுள்ளதோ, அதேபோல சூரியனைப் பூமியோடு சுற்றி வரும் சந்திரனின் பாதையும் பல்வேறு வளைவுகளைக் கொண்டுள்ளது. இதை நவீன விஞ்ஞானத்தின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் குர்ஆன் கூறும் பழைய பேரீச்ச மடல் உவமை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளதை அறியலாம்.
மேலும், “(நபியே!) மாதந்தோறும் வளர்ந்து தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘அவை மனிதர் களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களையும் அறிவிக்கக் கூடியவை” (2:189) என்று திருமறை கூறுகிறது.

சந்திரன் சுயமாகத் தனது பால் ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று பழங்காலத்தில் மக்கள் நம்பி வந்தனர். ஆனால் இன்றோ நிலவின் ஒளி, பிரதிபலிக்கப்பட்ட ஒளியேயாகும் என்ற உண்மையை விஞ்ஞானிகள் வெளிஉலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
“அவற்றுக்கிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும், ஒளிர்கின்ற சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியவான்” (25:61) என்றும்,
“இன்னும் அவற்றில் சந்திரனை பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்” (71:16) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
திருக்குர்ஆனில் சூரியனையும், சந்திரனையும் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக அறிவியல்பூர்வமான அழகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
திருக்குர்ஆனில் சூரியனைச் சுட்டும் அரபுச் சொல், ‘ஷம்ஸ்’. இதை ‘ஸிராஜ்’ (ஒளி விளக்கு), ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு), ‘லியா’ (ஒளிரும் மகிமை) என்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
சூரியன் கடும் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் கொண்டது. எனவே திருக்குர் ஆனில் சூரியனைக் குறிக்க பயன்படுத்தும் மூன்று வர்ணனை வார்த்தைகளும் பொருத்தமானவை.
சந்திரனைக் குறிக்கும் அரபுச் சொல், ‘கமர்’ என்பதாகும். மேலும் திருக்குர்ஆன் சந்திரனை ‘முனீர்’ என்றும் வர்ணிக்கிறது. முனீர் என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று அர்த்தம். இதன் மூலம் சந்திரன் சுயமாக ஒளியை வழங்குவதில்லை. சூரிய ஒளியைப் பெற்றுப் பிரதிபலிக்கிறது என்பது புலனாகிறது.
திருக்குர்ஆனில் எந்த இடத்திலும், சந்திரனைக் குறித்திட ‘ஸிராஜ்’ ‘வஹ்ஹாஜ்’ ‘லியா’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவில்லை. அதைப்போல சூரியனைக் குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்கள் சொல்லப்படவில்லை.
இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், சூரிய ஒளிக்கும், நிலவொளிக்கும் உள்ள இயல்பான வேறுபாட்டை ‘வார்த்தை விளையாட்டு’களின் மூலம் திருக்குர்ஆன் வெளிப்படுத்தியுள்ளது.
உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.
பத்ர் பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள நீர்நிலை பக்கத்தில் நபி முஹம்மது (ஸல்) மற்றும் முஸ்லிம் படையினர் தங்கியிருந்தனர். குறைஷிகளும் பத்ர் பள்ளத்தாக்கின் மேற்பகுதியில் கூடாரங்கள் அமைத்துத் தங்கினர். அன்றிரவு மழை பொழிந்தது. அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக, குறைஷிகளை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கு, சாதாரணத் தூறலாக இருந்தது.
காலை விடிந்து, நபி முஹம்மது (ஸல்), முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து கொண்டிருந்தபோது நபிகளாரின் கையில் இருந்த அம்பு சற்று முன்னால் நிற்பவரின் வயிற்றில் லேசாகக் குத்திவிட்டது, உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் கையிலுள்ள அம்பு என்னைக் குத்திவிட்டதால் வலிக்கிறது, எனக்கு உங்களைப் பழிவாங்க வேண்டும்” என்றார். நபி (ஸல்) சற்றும் தாமதிக்காமல் தனது வயிற்றைத் திறந்து காட்டி “பழி தீர்த்துக் கொள்!” என்றார்கள். உடனே அவர் நபிகளாரை கட்டியணைத்து “அல்லாஹ்வின் தூதரே! போரை நோக்கி செல்லவிருக்கிறோம், இறுதியாக உங்களது மேனியைத் தொட பிரியப்பட்டேன்” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அந்தக் காலை வேளையில் குறைஷிகளில் சிலர், நபி (ஸல்) அவர்களின் படையினரால் உருவாகியிருந்த நீர்நிலையில் நீர் பருக வந்தனர். நீர் பருக நபிகளும் அவர்களது படையினரும் குறைஷிகளை அனுமதித்தனர்.
குறைஷியினரின் ஒற்றர், நபிகளாரின் கூட்டத்தினர் வெறும் முன்னூறு நபர்கள் இருப்பதைக் குறைஷி படையினரிடம் சொல்லிவிட்டு, ‘முஸ்லிம்களின் படையினர் வேறு எங்கும் மறைந்திருப்பதாகத் தெரியவில்லை. தாமதமாக வேறு படையினரும் வருவதாகத் தெரியவில்லை, பாதுகாப்பிற்கும் வாளைத் தவிர வேறெதுவுமில்லை. ஆனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட கூட்டத்தினரான உங்களை அவர்கள் வீழ்த்தினால், நீங்கள் வாழ்ந்து பயனில்லை. முஸ்லிம்கள் இவ்வளவு தைரியமாகப் பெரும் படையான உங்களை எதிர்க்க வருகிறார்கள் என்றால் அது குறித்து யோசித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துச் சென்றனர்.
அதனையடுத்து குறைஷிகளைச் சேர்ந்த உத்பா மற்றும் அவரது பிரிவினர் “முஸ்லிம் படையினருடன் போரிட்டு என்ன செய்யப் போகிறோம், நமது சொந்தங்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும், திரும்பிவிடலாம்” என்று கூறியபோது, அதற்கு அபூஜஹ்ல் “முஹம்மதையும் அவருடைய கூட்டத்தையும் பார்த்து உத்பா பயந்திருக்கலாம் அல்லது முஸ்லிம்களின் படையில் உத்பாவின் மகன் ஹுதைஃபா இருப்பதைப் பார்த்து, அவன் கொல்லப்படுவான் என்று பயந்து கூறியிருக்கலாம்” என்று ஏளனம் செய்தான். அத்தோடு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட அமர் என்பவரின் சகோதரரை அழைத்துப் பழியுணர்ச்சியைத் தூண்டினான் அபூஜஹ்ல். குறைஷிகளுக்கு வெறி தலைக்கேறியது முஸ்லிம்களை எதிர்த்து குறைஷிகளின் படை நேருக்கு நேர் வந்தது.
நபி முஹம்மது (ஸல்) படையினருக்கு கட்டளை பிறப்பித்தார்கள், “போரை எனது கட்டளை வரும் வரை தொடங்காதீர்கள். எதிரிகள் தூரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கிவிடாமல் மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள், அவர்கள் நெருங்கும்போது அவர்களின் மீது அம்பெறியுங்கள். அவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும் வரை நீங்கள் வாட்களை உருவாதீர்கள்” என்று சொல்லிவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, எதிரி அணியின் நிலவரத்தை காண பரண் வீட்டில் ஏறினார்கள்.
அபூஜஹ்லும் பிரார்த்தனை செய்தான் “இறைவா! உனக்கு விருப்பமானவருக்கு உதவி செய். நாங்கள் அறியாததை எங்களுக்கு மார்க்கமாகக்கொண்டு வந்து, உறவுகளில் பிளவை ஏற்படுத்தியவரை அழித்துவிடு” என்று பிரார்த்தித்தான்.
“நிராகரிப்பவர்களே! நீங்கள் வெற்றியின் மூலம் தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி முஸ்லிம்களுக்கு வந்து விட்டது; இனியேனும் நீங்கள் தவறை விட்டு விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் போருக்கு வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.
ஸஹீஹ் புகாரி 4:64:3984,3985, திருக்குர்ஆன் 8:19
-ஜெஸிலா பானு.
காலை விடிந்து, நபி முஹம்மது (ஸல்), முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து கொண்டிருந்தபோது நபிகளாரின் கையில் இருந்த அம்பு சற்று முன்னால் நிற்பவரின் வயிற்றில் லேசாகக் குத்திவிட்டது, உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் கையிலுள்ள அம்பு என்னைக் குத்திவிட்டதால் வலிக்கிறது, எனக்கு உங்களைப் பழிவாங்க வேண்டும்” என்றார். நபி (ஸல்) சற்றும் தாமதிக்காமல் தனது வயிற்றைத் திறந்து காட்டி “பழி தீர்த்துக் கொள்!” என்றார்கள். உடனே அவர் நபிகளாரை கட்டியணைத்து “அல்லாஹ்வின் தூதரே! போரை நோக்கி செல்லவிருக்கிறோம், இறுதியாக உங்களது மேனியைத் தொட பிரியப்பட்டேன்” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அந்தக் காலை வேளையில் குறைஷிகளில் சிலர், நபி (ஸல்) அவர்களின் படையினரால் உருவாகியிருந்த நீர்நிலையில் நீர் பருக வந்தனர். நீர் பருக நபிகளும் அவர்களது படையினரும் குறைஷிகளை அனுமதித்தனர்.
குறைஷியினரின் ஒற்றர், நபிகளாரின் கூட்டத்தினர் வெறும் முன்னூறு நபர்கள் இருப்பதைக் குறைஷி படையினரிடம் சொல்லிவிட்டு, ‘முஸ்லிம்களின் படையினர் வேறு எங்கும் மறைந்திருப்பதாகத் தெரியவில்லை. தாமதமாக வேறு படையினரும் வருவதாகத் தெரியவில்லை, பாதுகாப்பிற்கும் வாளைத் தவிர வேறெதுவுமில்லை. ஆனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட கூட்டத்தினரான உங்களை அவர்கள் வீழ்த்தினால், நீங்கள் வாழ்ந்து பயனில்லை. முஸ்லிம்கள் இவ்வளவு தைரியமாகப் பெரும் படையான உங்களை எதிர்க்க வருகிறார்கள் என்றால் அது குறித்து யோசித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துச் சென்றனர்.
அதனையடுத்து குறைஷிகளைச் சேர்ந்த உத்பா மற்றும் அவரது பிரிவினர் “முஸ்லிம் படையினருடன் போரிட்டு என்ன செய்யப் போகிறோம், நமது சொந்தங்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும், திரும்பிவிடலாம்” என்று கூறியபோது, அதற்கு அபூஜஹ்ல் “முஹம்மதையும் அவருடைய கூட்டத்தையும் பார்த்து உத்பா பயந்திருக்கலாம் அல்லது முஸ்லிம்களின் படையில் உத்பாவின் மகன் ஹுதைஃபா இருப்பதைப் பார்த்து, அவன் கொல்லப்படுவான் என்று பயந்து கூறியிருக்கலாம்” என்று ஏளனம் செய்தான். அத்தோடு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட அமர் என்பவரின் சகோதரரை அழைத்துப் பழியுணர்ச்சியைத் தூண்டினான் அபூஜஹ்ல். குறைஷிகளுக்கு வெறி தலைக்கேறியது முஸ்லிம்களை எதிர்த்து குறைஷிகளின் படை நேருக்கு நேர் வந்தது.
நபி முஹம்மது (ஸல்) படையினருக்கு கட்டளை பிறப்பித்தார்கள், “போரை எனது கட்டளை வரும் வரை தொடங்காதீர்கள். எதிரிகள் தூரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கிவிடாமல் மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள், அவர்கள் நெருங்கும்போது அவர்களின் மீது அம்பெறியுங்கள். அவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும் வரை நீங்கள் வாட்களை உருவாதீர்கள்” என்று சொல்லிவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, எதிரி அணியின் நிலவரத்தை காண பரண் வீட்டில் ஏறினார்கள்.
அபூஜஹ்லும் பிரார்த்தனை செய்தான் “இறைவா! உனக்கு விருப்பமானவருக்கு உதவி செய். நாங்கள் அறியாததை எங்களுக்கு மார்க்கமாகக்கொண்டு வந்து, உறவுகளில் பிளவை ஏற்படுத்தியவரை அழித்துவிடு” என்று பிரார்த்தித்தான்.
“நிராகரிப்பவர்களே! நீங்கள் வெற்றியின் மூலம் தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி முஸ்லிம்களுக்கு வந்து விட்டது; இனியேனும் நீங்கள் தவறை விட்டு விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் போருக்கு வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.
ஸஹீஹ் புகாரி 4:64:3984,3985, திருக்குர்ஆன் 8:19
-ஜெஸிலா பானு.
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் பிரபல திருவிழாவான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு தர்காவில் கந்தூரி விழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ்ப் பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுது வழக்கமே.
இதில் விழாவின் தொடக்கத்தில் நடைபெறும் கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொடி ஊர்வலத்திலும், கொடியேற்றத்திலும் திரளான மக்கள் பங்கேற்பதால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. சந்தனம் பூசும் விழா மார்ச் 10-ஆம் தேதியும், புனித கொடியை இறக்கும் நிகழ்ச்சி மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் விழாவின் தொடக்கத்தில் நடைபெறும் கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொடி ஊர்வலத்திலும், கொடியேற்றத்திலும் திரளான மக்கள் பங்கேற்பதால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. சந்தனம் பூசும் விழா மார்ச் 10-ஆம் தேதியும், புனித கொடியை இறக்கும் நிகழ்ச்சி மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
உடன்படிக்கை பத்திரம் எழுதி முடித்ததும், தம்முடன் வந்திருப்பவர்கள் ‘இங்கேயே ‘குர்பானி’ கொடுத்திட வேண்டும்’ என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் தலைமையிலான இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறைமறுப்பாளர்களான குரைஷிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை குறித்து கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் அந்த உடன்படிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து காண்போம்.
சந்தர்ப்ப சூழ்நிலை தங்களுக்கு எதிராக இருப்பதை அறிந்த குரைஷிகள் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள சுஹைல் இப்னு அம்ர் என்பவரை நபிகளாரிடம் அனுப்பி வைத்தனர்.
சுஹைல் என்பதற்கு ‘இலகுவானது’ என்பது பொருள். சுஹைலைப் பார்த்ததும் நபிகளார், “உங்களது காரியம் உங்களுக்கு இலகுவாகி விட்டது. குரைஷிகள் இவரை அனுப்பியதில் இருந்து அவர்கள் சமாதானத்தை நாடி விட்டனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்கள்.
நபிகளாரிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். அதற்குப் பிறகு சமாதானத்திற்கான அம்சங்களை இருவரும் முடிவு செய்தனர்.
சமாதான உடன்படிக்கையின் ஷரத்துகள் வருமாறு:-
1. இந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுடன் திரும்பிச் செல்ல வேண்டும். மக்கா நகருக்குள் நுழையக் கூடாது.
2. அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் மக்கா வந்து ‘உம்ரா’ செய்யலாம். அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால் அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.
3. இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். (10 ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கக் கூடாது)
4. குரைஷிகளில் யாராவது மதீனா நகருக்கு வந்து விட்டால் அவரை மக்கா நகருக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால் முஸ்லிம்களில் எவராவது மக்கா நகருக்குச் சென்றால் அவரைத் திருப்பி அனுப்ப மாட்டோம்.
இவற்றை எழுதுவதற்காக நபிகளார் அலி (ரலி) அவர்களை அழைத்து வாசகங்களைக் கூறினார்கள். அலி (ரலி) அவர்கள், ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்ற வாசகத்தை எழுதினார்.
அப்போது சுஹைல் குறுக்கிட்டு, “எங்களுக்கு ரஹ்மானையும் தெரியாது; ரஹீமையும் தெரியாது. எங்களுக்கு தெரிந்த முறையில் எழுதுங்கள்” என்றார். அருகில் இருந்த நபிகளார், “அப்படியானால் எப்படி எழுத வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு சுஹைல், “இறைவன் பெயரால் எழுதுங்கள்” என்றார். அவ்வாறு அந்த வாசகம் திருத்தி எழுதப்பட்டது.
பின்பு, “இது அல்லாஹ்வின் தூதர் முகம்மது குரைஷிகளுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலியிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால் சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டால் இந்த ஒப்பந்தமே தேவையில்லையே. அதனால் அதற்குப் பதிலாக அப்துல்லாஹ்வின் மகன் முகம்மது என்று எழுதுங்கள்” என்றார்.
அதற்கு நபிகளார், “நீங்கள் என்னைப் பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறி விட்டு, ‘ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர்) என்ற சொல்லை அழித்து விட்டு ‘முகம்மது இப்னு அப்துல்லாஹ்’ (அப்துல்லாவின் மகன் முகம்மது) என்று எழுதுங்கள்’ என்று அலியிடம் கூறினார்கள். ஆனால் அலி (ரலி) அவர்கள் இந்தச் சொல்லை அழிப்பதற்கு மறுத்து விட்டார்கள். எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால் அந்த வரி எங்கிருக்கிறது என்று கேட்டு நபிகளாரே தம் கையால் அழித்தார்கள்.
இவ்வாறு ஒப்பந்தம் எழுதிக் கொண்டிருந்தபோது, குரைஷிகளின் பிரதிநிதி சுஹைலின் மகன் அபூஜந்தல் (ரலி) மக்காவில் இருந்து கை மற்றும் கால்களில் இருந்த விலங்குகளோடு தப்பியோடி எப்படியோ அங்கு வந்து சேர்ந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்காக தனக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.
அபூஜந்தல் நபிகளாரிடம், ‘இறைத்தூதரே! என்னை இறை மறுப்பாளர்களிடம் இருந்து விடுவித்து தங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்’ என்று வேண்டினார்.
இதைப் பார்த்த சுஹைல், ‘சமாதான ஒப்பந்தம் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். உடன்படிக்கையின்படி அபூஜந்தலை நீங்கள் உடன் அழைத்துச் செல்ல முடியாது’ என்றார்.
அப்போது அபூஜந்தல், ‘என் முஸ்லிம் சகோதரர்களே! நீங்கள் என்னை மீண்டும் அவர்களிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள்?’ என்று கதறினார்.
அப்போது நபிகளார், ‘அபூஜந்தலே! நீர் பொறுமையைக் கடைப்பிடியும். உனக்கும், உன்னுடன் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடுதலையையும், மகிழ்ச்சியையும் அல்லாஹ் தருவான். நாங்கள் இந்தக் கூட்டத்தாரிடம் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவது எங்கள் கடமை. அவர்களும் அல்லாஹ்வின் பெயர் கூறி இந்த உடன்படிக்கையைச் செய்திருக் கிறார்கள். எனவே நாங்கள் அவர்களிடம் ஒப்பந்தத்தை முறிக்கவோ அதற்கு எதிராகச் செயல்படவோ முடியாது’ என்று கூறினார்கள்.
அபூஜந்தல் எப்படி அங்கு வந்தாரோ அப்படியே விலங்கு களை அணிந்தபடி திரும்பிச் சென்று விட்டார்.
உடன்படிக்கை பத்திரம் எழுதி முடித்ததும், தம்முடன் வந்திருப்பவர்கள் ‘இங்கேயே ‘குர்பானி’ கொடுத்திட வேண்டும்’ என்று நபிகளார் உத்தரவிட்டார்கள். முதலில் அவர்களே ‘குர்பானி’ கொடுத்து முடியைக் களைந்தார்கள். பின்னர் நபித்தோழர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றினார்கள்.
சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு நபிகளார் மூன்று நாட்கள் வரை ஹுதைபிய்யாவிலேயே தங்கி இருந்தார்கள். அவர்கள் திரும்பிச் செல்லும்போது, திருக்குர்ஆனின் 48-வது அத்தியாயமான ‘அல் பத்ஹ்-வெற்றி’ என்ற அத்தியாயம் இறங்கியது. அதில் இந்த உடன்படிக்கை நிகழ்ச்சியை சுட்டிக் காட்டி, ‘இது மிகப்பெரிய, தெளிவானதொரு வெற்றி’ என்று இறைவன் கூறுகின்றான்.
சந்தர்ப்ப சூழ்நிலை தங்களுக்கு எதிராக இருப்பதை அறிந்த குரைஷிகள் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள சுஹைல் இப்னு அம்ர் என்பவரை நபிகளாரிடம் அனுப்பி வைத்தனர்.
சுஹைல் என்பதற்கு ‘இலகுவானது’ என்பது பொருள். சுஹைலைப் பார்த்ததும் நபிகளார், “உங்களது காரியம் உங்களுக்கு இலகுவாகி விட்டது. குரைஷிகள் இவரை அனுப்பியதில் இருந்து அவர்கள் சமாதானத்தை நாடி விட்டனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்கள்.
நபிகளாரிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். அதற்குப் பிறகு சமாதானத்திற்கான அம்சங்களை இருவரும் முடிவு செய்தனர்.
சமாதான உடன்படிக்கையின் ஷரத்துகள் வருமாறு:-
1. இந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுடன் திரும்பிச் செல்ல வேண்டும். மக்கா நகருக்குள் நுழையக் கூடாது.
2. அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் மக்கா வந்து ‘உம்ரா’ செய்யலாம். அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால் அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.
3. இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். (10 ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கக் கூடாது)
4. குரைஷிகளில் யாராவது மதீனா நகருக்கு வந்து விட்டால் அவரை மக்கா நகருக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால் முஸ்லிம்களில் எவராவது மக்கா நகருக்குச் சென்றால் அவரைத் திருப்பி அனுப்ப மாட்டோம்.
இவற்றை எழுதுவதற்காக நபிகளார் அலி (ரலி) அவர்களை அழைத்து வாசகங்களைக் கூறினார்கள். அலி (ரலி) அவர்கள், ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்ற வாசகத்தை எழுதினார்.
அப்போது சுஹைல் குறுக்கிட்டு, “எங்களுக்கு ரஹ்மானையும் தெரியாது; ரஹீமையும் தெரியாது. எங்களுக்கு தெரிந்த முறையில் எழுதுங்கள்” என்றார். அருகில் இருந்த நபிகளார், “அப்படியானால் எப்படி எழுத வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு சுஹைல், “இறைவன் பெயரால் எழுதுங்கள்” என்றார். அவ்வாறு அந்த வாசகம் திருத்தி எழுதப்பட்டது.
பின்பு, “இது அல்லாஹ்வின் தூதர் முகம்மது குரைஷிகளுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலியிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால் சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டால் இந்த ஒப்பந்தமே தேவையில்லையே. அதனால் அதற்குப் பதிலாக அப்துல்லாஹ்வின் மகன் முகம்மது என்று எழுதுங்கள்” என்றார்.
அதற்கு நபிகளார், “நீங்கள் என்னைப் பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறி விட்டு, ‘ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர்) என்ற சொல்லை அழித்து விட்டு ‘முகம்மது இப்னு அப்துல்லாஹ்’ (அப்துல்லாவின் மகன் முகம்மது) என்று எழுதுங்கள்’ என்று அலியிடம் கூறினார்கள். ஆனால் அலி (ரலி) அவர்கள் இந்தச் சொல்லை அழிப்பதற்கு மறுத்து விட்டார்கள். எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால் அந்த வரி எங்கிருக்கிறது என்று கேட்டு நபிகளாரே தம் கையால் அழித்தார்கள்.
இவ்வாறு ஒப்பந்தம் எழுதிக் கொண்டிருந்தபோது, குரைஷிகளின் பிரதிநிதி சுஹைலின் மகன் அபூஜந்தல் (ரலி) மக்காவில் இருந்து கை மற்றும் கால்களில் இருந்த விலங்குகளோடு தப்பியோடி எப்படியோ அங்கு வந்து சேர்ந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்காக தனக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.
அபூஜந்தல் நபிகளாரிடம், ‘இறைத்தூதரே! என்னை இறை மறுப்பாளர்களிடம் இருந்து விடுவித்து தங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்’ என்று வேண்டினார்.
இதைப் பார்த்த சுஹைல், ‘சமாதான ஒப்பந்தம் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். உடன்படிக்கையின்படி அபூஜந்தலை நீங்கள் உடன் அழைத்துச் செல்ல முடியாது’ என்றார்.
அப்போது அபூஜந்தல், ‘என் முஸ்லிம் சகோதரர்களே! நீங்கள் என்னை மீண்டும் அவர்களிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள்?’ என்று கதறினார்.
அப்போது நபிகளார், ‘அபூஜந்தலே! நீர் பொறுமையைக் கடைப்பிடியும். உனக்கும், உன்னுடன் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடுதலையையும், மகிழ்ச்சியையும் அல்லாஹ் தருவான். நாங்கள் இந்தக் கூட்டத்தாரிடம் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவது எங்கள் கடமை. அவர்களும் அல்லாஹ்வின் பெயர் கூறி இந்த உடன்படிக்கையைச் செய்திருக் கிறார்கள். எனவே நாங்கள் அவர்களிடம் ஒப்பந்தத்தை முறிக்கவோ அதற்கு எதிராகச் செயல்படவோ முடியாது’ என்று கூறினார்கள்.
அபூஜந்தல் எப்படி அங்கு வந்தாரோ அப்படியே விலங்கு களை அணிந்தபடி திரும்பிச் சென்று விட்டார்.
உடன்படிக்கை பத்திரம் எழுதி முடித்ததும், தம்முடன் வந்திருப்பவர்கள் ‘இங்கேயே ‘குர்பானி’ கொடுத்திட வேண்டும்’ என்று நபிகளார் உத்தரவிட்டார்கள். முதலில் அவர்களே ‘குர்பானி’ கொடுத்து முடியைக் களைந்தார்கள். பின்னர் நபித்தோழர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றினார்கள்.
சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு நபிகளார் மூன்று நாட்கள் வரை ஹுதைபிய்யாவிலேயே தங்கி இருந்தார்கள். அவர்கள் திரும்பிச் செல்லும்போது, திருக்குர்ஆனின் 48-வது அத்தியாயமான ‘அல் பத்ஹ்-வெற்றி’ என்ற அத்தியாயம் இறங்கியது. அதில் இந்த உடன்படிக்கை நிகழ்ச்சியை சுட்டிக் காட்டி, ‘இது மிகப்பெரிய, தெளிவானதொரு வெற்றி’ என்று இறைவன் கூறுகின்றான்.
மதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை.
மக்காவாசிகளுக்குப் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக முஸ்லிம்கள் பத்ர் பள்ளத்தாக்கிற்குப் புறப்பட்டனர். அதே சமயம் சிரியாவிலிருந்து திரும்பி மக்காவிற்குப் போகும் வழியில் நபி முஹம்மது (ஸல்) மற்றும் அவர்களது தோழர்கள் குறைஷிகளுக்குப் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துவார்கள் என்று புரிந்து கொண்டு மக்காவிலிருந்து ஆயுதம் ஏந்திய படையினர் 1000-க்கும் மேற்பட்டவர்கள் போருக்கு வெறியுடன் தயாராக வந்தனர்.
வியாபாரக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த அபூஸுஃப்யான், மதீனாவாசிகள் வந்த வழித்தடத்தைக் கண்டறிந்து, தனது சாமர்த்தியதால் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பி வேறு வழியாகத் தனது கூட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டு சென்றுவிட்டு, வியாபார பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் தகவலையும், அவர்கள் பத்ர் பள்ளத்தாக்கிற்கு வரவேண்டாமென்றும் குறைஷிப் படையினருக்கு செய்தி அனுப்பினார்.
குறைஷிகள் அனைவரும் திரும்பிவிடலாம் என்று எண்ணினர். ஆனால் மதீனாவாசிகள் குறைஷியின் படையைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காகவே பத்ருக்குச் செல்வதில் அபூஜஹ்ல் திட்டவட்டமாக இருந்தான். கிட்டத்தட்ட 1300 பேர் கொண்ட படையில் அக்னஸ் இப்னு ஷரீகின் ஆலோசனையின் பேரில் ஜுஹ்ரா கிளையினர் மட்டும் பத்ருக்குச் செல்லாமல் மக்காவிற்குத் திரும்பி விட்டனர்.
இதற்கிடையில் மதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை. முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பிவிட்டாலும் மக்காவாசிகள் மதீனாவை நோக்கிப் படையெடுத்து வரமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை என்பதாலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அந்தச் சூழல் குறித்துப் படை தளபதிகளுடனும், படையினருடனும் ஆலோசனை நடத்தினார்கள்.
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), ஸஅது இப்னு முஆது மற்றும் மிக்தாத் (ரலி) வீர உரையாற்றினர், படையின் தளபதிகளும் ஒரு சிலரையும் தவிர மொத்தப் படையினரும் மிகத்துணிவுடன் போருக்கு முன்னேற ஒப்புக் கொண்டனர். வழிப்போக்கர்களின் மூலம் குறைஷிகளின் படையிருக்கும் இடம் குறித்தும், அவர்களின் தயாரிப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.
முஸ்லிம்களில் ஒரு படை வீரரின் ஆலோசனைப்படி, குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று அங்குள்ள சின்ன நீர்நிலைகளை அழித்து, ஒரேயொரு நீர் தடாகத்தை மட்டும் ஏற்படுத்தி, அதை தண்ணீரால் நிரப்பிப் போர் நடக்கும் போது அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் நிலையைத் தயார்படுத்தினர். மேலும், ஸஅது(ரலி) அவர்களின் ஆலோசனையின்படி போர் மைதானத்தின் வடக்கிழக்கில் உயரமான ஒரு திட்டின் மீது பரண் வீட்டைக் கட்டினர். அதில் நபி முஹம்மது (ஸல்) இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தனர்.
மறுநாள் பத்ர் போர் நடக்குமென்று நபிகளார் உறுதியாக இருந்தார்கள். நபி (ஸல்) ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த மன அமைதியுடன் மறுதினம் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இரவைக் கழித்தார்கள்.
”நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்” என்ற திருக்குர்ஆனின் வசனம் அருளப்பட்டது.
அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 8:11
- ஜெஸிலா பானு.
வியாபாரக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த அபூஸுஃப்யான், மதீனாவாசிகள் வந்த வழித்தடத்தைக் கண்டறிந்து, தனது சாமர்த்தியதால் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பி வேறு வழியாகத் தனது கூட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டு சென்றுவிட்டு, வியாபார பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் தகவலையும், அவர்கள் பத்ர் பள்ளத்தாக்கிற்கு வரவேண்டாமென்றும் குறைஷிப் படையினருக்கு செய்தி அனுப்பினார்.
குறைஷிகள் அனைவரும் திரும்பிவிடலாம் என்று எண்ணினர். ஆனால் மதீனாவாசிகள் குறைஷியின் படையைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காகவே பத்ருக்குச் செல்வதில் அபூஜஹ்ல் திட்டவட்டமாக இருந்தான். கிட்டத்தட்ட 1300 பேர் கொண்ட படையில் அக்னஸ் இப்னு ஷரீகின் ஆலோசனையின் பேரில் ஜுஹ்ரா கிளையினர் மட்டும் பத்ருக்குச் செல்லாமல் மக்காவிற்குத் திரும்பி விட்டனர்.
இதற்கிடையில் மதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை. முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பிவிட்டாலும் மக்காவாசிகள் மதீனாவை நோக்கிப் படையெடுத்து வரமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை என்பதாலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அந்தச் சூழல் குறித்துப் படை தளபதிகளுடனும், படையினருடனும் ஆலோசனை நடத்தினார்கள்.
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), ஸஅது இப்னு முஆது மற்றும் மிக்தாத் (ரலி) வீர உரையாற்றினர், படையின் தளபதிகளும் ஒரு சிலரையும் தவிர மொத்தப் படையினரும் மிகத்துணிவுடன் போருக்கு முன்னேற ஒப்புக் கொண்டனர். வழிப்போக்கர்களின் மூலம் குறைஷிகளின் படையிருக்கும் இடம் குறித்தும், அவர்களின் தயாரிப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.
முஸ்லிம்களில் ஒரு படை வீரரின் ஆலோசனைப்படி, குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று அங்குள்ள சின்ன நீர்நிலைகளை அழித்து, ஒரேயொரு நீர் தடாகத்தை மட்டும் ஏற்படுத்தி, அதை தண்ணீரால் நிரப்பிப் போர் நடக்கும் போது அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் நிலையைத் தயார்படுத்தினர். மேலும், ஸஅது(ரலி) அவர்களின் ஆலோசனையின்படி போர் மைதானத்தின் வடக்கிழக்கில் உயரமான ஒரு திட்டின் மீது பரண் வீட்டைக் கட்டினர். அதில் நபி முஹம்மது (ஸல்) இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தனர்.
மறுநாள் பத்ர் போர் நடக்குமென்று நபிகளார் உறுதியாக இருந்தார்கள். நபி (ஸல்) ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த மன அமைதியுடன் மறுதினம் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இரவைக் கழித்தார்கள்.
”நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்” என்ற திருக்குர்ஆனின் வசனம் அருளப்பட்டது.
அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 8:11
- ஜெஸிலா பானு.
“(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!)” (திருக்குர்ஆன்-48:1) என்ற வசனம் அருளப்பட்டது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது எந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் பணிந்து போய் செய்து கொண்டார்கள் என்று விமர்சிக்கப்பட்டதோ, அந்த ஒப்பந்தத்தை ‘தெளிவானதொரு வெற்றி’ என்று வர்ணிப்பது, வியப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளும், உருவான சூழ்நிலைகளும் உண்மையிலேயே ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் பெரியதொரு வெற்றிக்கான முன்னோடியாகத் திகழ்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு முஸ்லிம்களுக்கும், குரைஷிகளுக்கும் இடையே போர்மயமான சூழலே நிலவி வந்தது. இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பமோ, வாய்ப்போ அறவே இல்லாத நிலை இருந்தது. இந்தச் சமாதான உடன்படிக்கை இத்தகைய சூழ்நிலைக்கு முடிவு கட்டி விட்டது.
இப்போது முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் ஒருவரையொருவர் சந்திக்கத் தொடங்கினார்கள். அவர் களுக்கு இடையே குடும்ப மற்றும் வர்த்தகத் தொடர்புகள் ஏற்படலாயின. முஸ்லிம் அல்லாதவர்கள் எந்தவித தயக்கமோ பயமோ இல்லாமல் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வந்தனர். பல நாட்கள்-பல மாதங்கள் அங்கு தங்கி முஸ்லிம்களுடன் பழகினார்கள்.
எந்த நல்லடியார்களுடன் நாம் போரை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தோமோ, அவர்களின் உள்ளங் களில் பகை உணர்வோ, வெறுப்போ இல்லை என்பதை உணர்ந்து கொண்டனர். இதனால் முஸ்லிம் அல்லாதவர்கள் தாமாகவே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். குரைஷித் தலைவர்கள் அவர்களின் உள்ளங்களில் விதைத்திருந்த தவறான எண்ணங்கள் தாமாகவே மறையத் தொடங்கின.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு முஸ்லிம்களின் எண்ணிக்கை மூவாயிரமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயர்ந்தது.
இதே காலகட்டத்தில்தான் குரைஷிகளின் புகழ் பெற்ற தலைவர்கள் சிலர் இஸ்லாத்தினால் கவரப்பட்டு, முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்து ஒதுங்கி, முஸ்லிம்களின் நண்பர்களாய், உற்ற துணைவர்களாய் மாறினார்கள். காலித் பின் வலித், அம்ரு பின் ஆஸ், உஸ்மான் இப்னு தல்ஹா ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, பத்தாண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். குரைஷிகளுடன் முஸ்லிம்கள் ஒருபோதும் முதலில் போரைத் தொடங்கியதில்லை. மாறாக எப்போதும் குரைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினார்கள். இந்த பத்தாண்டு போர் நிறுத்தம் என்பது அல்லாஹ்வின் பாதையில் இருந்து மக்களைத் தடுக்கும் குரைஷிகளின் கொடுமைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு அம்சம், முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும்; வரும் ஆண்டு மக்காவுக்கு வந்து மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம் என்பதாகும். இதன் மூலம் இறை இல்லமான கஅபாவுக்கு முஸ்லிம்களை குரைஷிகள் வரவிடாமல் இதுவரை தடுத்து வந்ததற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அந்த ஆண்டு மட்டும் முஸ்லிம்களை மக்காவுக்கு வரவிடாமல் தடுக்க முடிந்ததைத் தவிர வேறெந்த சாதகமும் குரைஷிகளுக்கு இல்லை.
இறுதி அம்சத்தில் இடம் பெற்ற, அதாவது ‘மக்காவில் இருந்து யாராவது தப்பித்து மதீனா வந்தால் அவர்களைத் திரும்ப மக்காவுக்கு அனுப்பி விட வேண்டும்; ஆனால் மதீனாவில் இருந்து தப்பித்து யாராவது மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம்’ என்பதையே குரைஷிகள் தங்களுக்குச் சாதகமாக நினைத்தனர். ஆனால் அதுவும் உண்மையில் அவர்களுக்குப் பாதகமானதே. ஏனெனில் எந்த ஓர் உண்மை முஸ்லிமும் அல்லாஹ்வை விட்டோ, அவனது தூதரை விட்டோ, மதீனாவை விட்டோ விலகிச் செல்ல மாட்டார். அப்படிச் சென்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. இதையே நபிகளார், “யாரொருவர் நம்மிடம் இருந்து விலகி அவர்களுடன் சென்று விடுவாரோ அல்லாஹ் அவரைத் தூரமாக்கி விடுவானாக” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டினார்கள். மதீனாவில் இருந்து யாராவது தப்பித்து மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்று குரைஷிகள் கூறியதை நபிகளார் ஏற்றுக் கொண்டதற்கு, தனது மார்க்கத்தின் மீதும், அதைப் பின்பற்றியவர்கள் மீதும் தான் வைத்திருந்த முழுமையான நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.
மேற்கூறப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டன.
இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் செய்தபோது வெளிப்படையான இரு காரணங்களால் அனைத்து முஸ்லிம்களின் உள்ளத்திலும் கவலை குடிகொண்டது. “இறை இல்லத்திற்குச் செல்வோம்; உம்ரா செய்வோம்” என்று கூறிய நபிகளார், மக்காவுக்குச் செல்லாமலேயே எப்படி நம்மைத் திருப்பி அழைத்துச் செல்லலாம் என்பது முதல் காரணம்.
முகம்மது நபி அல்லாஹ்வின் தூதர்; அப்படியிருக்க அவர்கள் ஏன் குரைஷிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிய வேண்டும்? சமாதான ஒப்பந்தத்தில் ஏன் தாழ்மையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பது இரண்டாவது காரணம். இதன் காரணமாக முஸ்லிம் களின் உணர்வுகள் காயமடைந்தன. ஏனைய மக்களைக் காட்டிலும் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவலை கொண்டார். ஒப்பந்தம் முடிந்ததும் நபிகளாரை சந்தித்து தனது மனக்குறையைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!)” (திருக்குர்ஆன்-48:1) என்ற வசனம் அருளப்பட்டது.
உடனே நபிகளார் ஒருவரை அனுப்பி அந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டும்படி கூறினார்கள். அதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த உமர், “அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார், ‘ஆம்’ என்றவுடன் உமர் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு முஸ்லிம்களுக்கும், குரைஷிகளுக்கும் இடையே போர்மயமான சூழலே நிலவி வந்தது. இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பமோ, வாய்ப்போ அறவே இல்லாத நிலை இருந்தது. இந்தச் சமாதான உடன்படிக்கை இத்தகைய சூழ்நிலைக்கு முடிவு கட்டி விட்டது.
இப்போது முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் ஒருவரையொருவர் சந்திக்கத் தொடங்கினார்கள். அவர் களுக்கு இடையே குடும்ப மற்றும் வர்த்தகத் தொடர்புகள் ஏற்படலாயின. முஸ்லிம் அல்லாதவர்கள் எந்தவித தயக்கமோ பயமோ இல்லாமல் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வந்தனர். பல நாட்கள்-பல மாதங்கள் அங்கு தங்கி முஸ்லிம்களுடன் பழகினார்கள்.
எந்த நல்லடியார்களுடன் நாம் போரை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தோமோ, அவர்களின் உள்ளங் களில் பகை உணர்வோ, வெறுப்போ இல்லை என்பதை உணர்ந்து கொண்டனர். இதனால் முஸ்லிம் அல்லாதவர்கள் தாமாகவே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். குரைஷித் தலைவர்கள் அவர்களின் உள்ளங்களில் விதைத்திருந்த தவறான எண்ணங்கள் தாமாகவே மறையத் தொடங்கின.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு முஸ்லிம்களின் எண்ணிக்கை மூவாயிரமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயர்ந்தது.
இதே காலகட்டத்தில்தான் குரைஷிகளின் புகழ் பெற்ற தலைவர்கள் சிலர் இஸ்லாத்தினால் கவரப்பட்டு, முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்து ஒதுங்கி, முஸ்லிம்களின் நண்பர்களாய், உற்ற துணைவர்களாய் மாறினார்கள். காலித் பின் வலித், அம்ரு பின் ஆஸ், உஸ்மான் இப்னு தல்ஹா ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, பத்தாண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். குரைஷிகளுடன் முஸ்லிம்கள் ஒருபோதும் முதலில் போரைத் தொடங்கியதில்லை. மாறாக எப்போதும் குரைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினார்கள். இந்த பத்தாண்டு போர் நிறுத்தம் என்பது அல்லாஹ்வின் பாதையில் இருந்து மக்களைத் தடுக்கும் குரைஷிகளின் கொடுமைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு அம்சம், முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும்; வரும் ஆண்டு மக்காவுக்கு வந்து மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம் என்பதாகும். இதன் மூலம் இறை இல்லமான கஅபாவுக்கு முஸ்லிம்களை குரைஷிகள் வரவிடாமல் இதுவரை தடுத்து வந்ததற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அந்த ஆண்டு மட்டும் முஸ்லிம்களை மக்காவுக்கு வரவிடாமல் தடுக்க முடிந்ததைத் தவிர வேறெந்த சாதகமும் குரைஷிகளுக்கு இல்லை.
இறுதி அம்சத்தில் இடம் பெற்ற, அதாவது ‘மக்காவில் இருந்து யாராவது தப்பித்து மதீனா வந்தால் அவர்களைத் திரும்ப மக்காவுக்கு அனுப்பி விட வேண்டும்; ஆனால் மதீனாவில் இருந்து தப்பித்து யாராவது மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம்’ என்பதையே குரைஷிகள் தங்களுக்குச் சாதகமாக நினைத்தனர். ஆனால் அதுவும் உண்மையில் அவர்களுக்குப் பாதகமானதே. ஏனெனில் எந்த ஓர் உண்மை முஸ்லிமும் அல்லாஹ்வை விட்டோ, அவனது தூதரை விட்டோ, மதீனாவை விட்டோ விலகிச் செல்ல மாட்டார். அப்படிச் சென்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. இதையே நபிகளார், “யாரொருவர் நம்மிடம் இருந்து விலகி அவர்களுடன் சென்று விடுவாரோ அல்லாஹ் அவரைத் தூரமாக்கி விடுவானாக” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டினார்கள். மதீனாவில் இருந்து யாராவது தப்பித்து மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்று குரைஷிகள் கூறியதை நபிகளார் ஏற்றுக் கொண்டதற்கு, தனது மார்க்கத்தின் மீதும், அதைப் பின்பற்றியவர்கள் மீதும் தான் வைத்திருந்த முழுமையான நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.
மேற்கூறப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டன.
இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் செய்தபோது வெளிப்படையான இரு காரணங்களால் அனைத்து முஸ்லிம்களின் உள்ளத்திலும் கவலை குடிகொண்டது. “இறை இல்லத்திற்குச் செல்வோம்; உம்ரா செய்வோம்” என்று கூறிய நபிகளார், மக்காவுக்குச் செல்லாமலேயே எப்படி நம்மைத் திருப்பி அழைத்துச் செல்லலாம் என்பது முதல் காரணம்.
முகம்மது நபி அல்லாஹ்வின் தூதர்; அப்படியிருக்க அவர்கள் ஏன் குரைஷிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிய வேண்டும்? சமாதான ஒப்பந்தத்தில் ஏன் தாழ்மையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பது இரண்டாவது காரணம். இதன் காரணமாக முஸ்லிம் களின் உணர்வுகள் காயமடைந்தன. ஏனைய மக்களைக் காட்டிலும் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவலை கொண்டார். ஒப்பந்தம் முடிந்ததும் நபிகளாரை சந்தித்து தனது மனக்குறையைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!)” (திருக்குர்ஆன்-48:1) என்ற வசனம் அருளப்பட்டது.
உடனே நபிகளார் ஒருவரை அனுப்பி அந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டும்படி கூறினார்கள். அதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த உமர், “அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார், ‘ஆம்’ என்றவுடன் உமர் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது என்றும் நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாத நன்மொழி என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது என்றைக்கும் நல்லது.
“உங்களில் நற்குணமுள்ளவர் தான் ‘ஈமான்’ எனும் இறைவிசுவாசத்தில் பூரணமானவர்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மனிதர்கள் அனைவரும் ஒரே ஆன்மாவில் இருந்து தான் படைக்கப்பட்டவர்கள். அவர்களிடையே பணம், பதவி போன்றவற்றில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். அதை அடிப்படையாக கொண்டு வலியவர்கள் மெலியவர்களை இளக்காரமாக நினைப்பதும், மெலியவர்கள் வலியவர்களை ஏளனமாக நினைப்பதும் கேலி, கிண்டல் செய்வதும் தவறாகும்.
இதையே பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன:
‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணில் இருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் முற்றும்) தெரிந்தவன்’ (49:13).
“முமின்களே! ஒரு சமூகத்தார் பிற சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மிகக்கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)
“எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன; அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. (16:34)
நபிகள் நாயகம் வருவதற்கு முன் இவ்வுலகிற்கு பல்வேறு இறைத்தூதர்கள் வந்தார்கள். அவர்கள் அனைவருமே ‘ஓரிறைவனைத்தான் வணங்க வேண்டும்; தவறினால் இறை வேதனை உங்கள் மீது இறங்கும்’ என எச்சரித்தார்கள்.
அப்போது அவர்கள் ‘அப்படி ஒன்றும் நடக்காது’ என்று இறைத்தூதர்களையும், இறை வேதனையையும் கேலி, கிண்டல் செய்தார்கள். அதனால் தான்அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று மேலே உள்ள வசனம் அழுத்தமாகச் சொல்லிக்காட்டுகிறது. அப்படியானால் கேலியும், கிண்டலும் எந்த அளவுக்கு மோசமானவை என்பதை நாம் நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.
சக மனிதனை கேலி செய்வது என்பது இறைவனின் படைப்பை கேலிசெய்வது போன்றதாகும். அதிலும் நம்மை விட மேம்பட்ட இறைத்தூதுவர்களை கேலி செய்வது என்பது மிகவும் தீய செயலன்றோ..? இதனால் தான் அவர் பேரழிவுகளுக்கு ஆளானார்கள் என்பதை என்றும் நாம் மறந்து விடக்கூடாது.
‘தமாஷ்’ என்பது வேறு, ‘கேலி’ என்பது வேறு. இரண்டையும் போட்டு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நமக்கு முன் உள்ள பிரச்சினையே இதுதான். நாம் விளையாட்டாக பேசும் ஒரு பேச்சு அல்லது ஒரு செயல் இறுதியில் அது வினையாய் முடிந்து விடுவது தான் ஆபத்து.
எனவே எப்போதும் நாம் நமது சொல், செயல் களில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பின்வரும் திருக்குர்ஆன் வசனம் இதையே மெய்ப்படுத்துகிறது:
‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்’ (33:70).
அதாவது சரியான, முறையான, கேலி இல்லாத, வஞ்சகமில்லாத சொல்லை சொல்லுங்கள் என்று இதன் பொருள் விரிந்து கொண்டே செல்லும்.
சக சகோதரனை நாம் ஏன் கேலி செய்ய வேண்டும்? நாம் என்றாவது ஒரு நாள் பிறரால் கேலி செய்யப்படமாட்டோமா என்ன?
‘ஆதாமின் பிள்ளைகளை நாம் கண்ணியப்படுத்தி வைத்துள்ளோம்’ என்று திருக்குர்ஆன் (17:70) குறிப்பிடுவதை நாம் மறக்கலாமா?
இங்கு ‘மனிதன்’ என்று பொதுத்தன்மையுடன் தானே இறைவசனம் குறிப்பிடுகிறது. இந்நிலையில் இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்ட மனிதனை கேலி, கிண்டல் செய்வது முறையா?
கேலி செய்வது என்பது நல்லோர்களின் நற்பண்பல்ல. ஒரு வேளை நாம் பிறரின் கேலிக்கு ஆளானால் கூட அடுத்தவர்களை ஒருபோதும் நாம் கேலிசெய்ய முற்படக்கூடாது. ஆண்டவனுக்காக அதை மன்னித்து, மறந்து விடவேண்டும்.
இன்றைக்கு நம்மில் பலர் பிறரின் குற்றங்களை மன்னிக் கிறார்கள். ஆனால் அவைகளை மறப்பதேயில்லை. நாம் பிறர் குறைகளை மன்னித்தால் மட்டும் போதாது அவற்றை முழுமனதுடன் மறந்தால் தான் அவை முழுமை பெறும்.
நபிகள் நாயகமும் அவரை பின்பற்றி வந்த நபித்தோழர்களும், இதர இறைநேசச் செல்வர்களும் இப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள்.
ஆனால் இன்றைக்கு நமது புனித இதயங்களில் எவ்வளவு கூர்முட்கள் மறக்கமுடியாத நிலையில் நம்மை தினம் தினம் குத்திக்கொண்டிருக்கின்றன..? அவை மறக்கமுடியாதவை என்பதல்ல... நாம் அவற்றை மறக்க முற்படுவதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது; வேதனைக்குரியது.
‘நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் நீங்கள் நடத்தப் படுவீர்கள்’ என்பது அரேபியப் பழமொழி.
நாம் பிறரை மதித்து நடந்தால் நாம் பிறரால் நிச்சயம் மதிக்கப்படுவோம். நாம் பிறரை கேலி செய்தால் நிச்சயம் நாமும் பிறரால் கேலி செய்யப்படுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாம் எப்போதும் மதிக்கப்படவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களை நாம் அறவே மதிப்பதில்லை. பிறகு எப்படி நமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்?. குறைந்த பட்சம் நாம் அடுத்தவர்களை மதிக்காவிட்டாலும் கூட அடுத்தவர்களை கேலி, கிண்டல் செய்யாமல் இருக்கலாமே. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது என்றும் நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாத நன்மொழி என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது என்றைக்கும் நல்லது.
வாருங்கள், அனைத்தையும் மறப்போம், அனைவரையும் மதிப்போம். நற்குணங்களுடன் வாழ்ந்து நலமான, வளமான வாழ்க்கையைப் பெறுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
மனிதர்கள் அனைவரும் ஒரே ஆன்மாவில் இருந்து தான் படைக்கப்பட்டவர்கள். அவர்களிடையே பணம், பதவி போன்றவற்றில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். அதை அடிப்படையாக கொண்டு வலியவர்கள் மெலியவர்களை இளக்காரமாக நினைப்பதும், மெலியவர்கள் வலியவர்களை ஏளனமாக நினைப்பதும் கேலி, கிண்டல் செய்வதும் தவறாகும்.
இதையே பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன:
‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணில் இருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் முற்றும்) தெரிந்தவன்’ (49:13).
“முமின்களே! ஒரு சமூகத்தார் பிற சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மிகக்கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)
“எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன; அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. (16:34)
நபிகள் நாயகம் வருவதற்கு முன் இவ்வுலகிற்கு பல்வேறு இறைத்தூதர்கள் வந்தார்கள். அவர்கள் அனைவருமே ‘ஓரிறைவனைத்தான் வணங்க வேண்டும்; தவறினால் இறை வேதனை உங்கள் மீது இறங்கும்’ என எச்சரித்தார்கள்.
அப்போது அவர்கள் ‘அப்படி ஒன்றும் நடக்காது’ என்று இறைத்தூதர்களையும், இறை வேதனையையும் கேலி, கிண்டல் செய்தார்கள். அதனால் தான்அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று மேலே உள்ள வசனம் அழுத்தமாகச் சொல்லிக்காட்டுகிறது. அப்படியானால் கேலியும், கிண்டலும் எந்த அளவுக்கு மோசமானவை என்பதை நாம் நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.
சக மனிதனை கேலி செய்வது என்பது இறைவனின் படைப்பை கேலிசெய்வது போன்றதாகும். அதிலும் நம்மை விட மேம்பட்ட இறைத்தூதுவர்களை கேலி செய்வது என்பது மிகவும் தீய செயலன்றோ..? இதனால் தான் அவர் பேரழிவுகளுக்கு ஆளானார்கள் என்பதை என்றும் நாம் மறந்து விடக்கூடாது.
‘தமாஷ்’ என்பது வேறு, ‘கேலி’ என்பது வேறு. இரண்டையும் போட்டு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நமக்கு முன் உள்ள பிரச்சினையே இதுதான். நாம் விளையாட்டாக பேசும் ஒரு பேச்சு அல்லது ஒரு செயல் இறுதியில் அது வினையாய் முடிந்து விடுவது தான் ஆபத்து.
எனவே எப்போதும் நாம் நமது சொல், செயல் களில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பின்வரும் திருக்குர்ஆன் வசனம் இதையே மெய்ப்படுத்துகிறது:
‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்’ (33:70).
அதாவது சரியான, முறையான, கேலி இல்லாத, வஞ்சகமில்லாத சொல்லை சொல்லுங்கள் என்று இதன் பொருள் விரிந்து கொண்டே செல்லும்.
சக சகோதரனை நாம் ஏன் கேலி செய்ய வேண்டும்? நாம் என்றாவது ஒரு நாள் பிறரால் கேலி செய்யப்படமாட்டோமா என்ன?
‘ஆதாமின் பிள்ளைகளை நாம் கண்ணியப்படுத்தி வைத்துள்ளோம்’ என்று திருக்குர்ஆன் (17:70) குறிப்பிடுவதை நாம் மறக்கலாமா?
இங்கு ‘மனிதன்’ என்று பொதுத்தன்மையுடன் தானே இறைவசனம் குறிப்பிடுகிறது. இந்நிலையில் இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்ட மனிதனை கேலி, கிண்டல் செய்வது முறையா?
கேலி செய்வது என்பது நல்லோர்களின் நற்பண்பல்ல. ஒரு வேளை நாம் பிறரின் கேலிக்கு ஆளானால் கூட அடுத்தவர்களை ஒருபோதும் நாம் கேலிசெய்ய முற்படக்கூடாது. ஆண்டவனுக்காக அதை மன்னித்து, மறந்து விடவேண்டும்.
இன்றைக்கு நம்மில் பலர் பிறரின் குற்றங்களை மன்னிக் கிறார்கள். ஆனால் அவைகளை மறப்பதேயில்லை. நாம் பிறர் குறைகளை மன்னித்தால் மட்டும் போதாது அவற்றை முழுமனதுடன் மறந்தால் தான் அவை முழுமை பெறும்.
நபிகள் நாயகமும் அவரை பின்பற்றி வந்த நபித்தோழர்களும், இதர இறைநேசச் செல்வர்களும் இப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள்.
ஆனால் இன்றைக்கு நமது புனித இதயங்களில் எவ்வளவு கூர்முட்கள் மறக்கமுடியாத நிலையில் நம்மை தினம் தினம் குத்திக்கொண்டிருக்கின்றன..? அவை மறக்கமுடியாதவை என்பதல்ல... நாம் அவற்றை மறக்க முற்படுவதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது; வேதனைக்குரியது.
‘நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் நீங்கள் நடத்தப் படுவீர்கள்’ என்பது அரேபியப் பழமொழி.
நாம் பிறரை மதித்து நடந்தால் நாம் பிறரால் நிச்சயம் மதிக்கப்படுவோம். நாம் பிறரை கேலி செய்தால் நிச்சயம் நாமும் பிறரால் கேலி செய்யப்படுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாம் எப்போதும் மதிக்கப்படவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களை நாம் அறவே மதிப்பதில்லை. பிறகு எப்படி நமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்?. குறைந்த பட்சம் நாம் அடுத்தவர்களை மதிக்காவிட்டாலும் கூட அடுத்தவர்களை கேலி, கிண்டல் செய்யாமல் இருக்கலாமே. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது என்றும் நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாத நன்மொழி என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது என்றைக்கும் நல்லது.
வாருங்கள், அனைத்தையும் மறப்போம், அனைவரையும் மதிப்போம். நற்குணங்களுடன் வாழ்ந்து நலமான, வளமான வாழ்க்கையைப் பெறுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
மக்காவாசிகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்திவிட்டால் அத்தோடு குறைஷிகள் முஸ்லிம்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்பினர்.
மக்காவாசிகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்திவிட்டால் அத்தோடு குறைஷிகள் முஸ்லிம்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்பினர்.
ஷாமிலிருந்து மக்காவிற்குத் திரும்பும் வியாபாரக் கூட்டத்தைப் பிடிக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் புறப்பட்டனர். கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கம் இருந்ததே தவிர அவர்கள் அதனைப் பெரும் போராகக் கருதவில்லை, அதனால் நபி முஹம்மது (ஸல்) எவரையும் அதில் கலந்து கொள்ளக் கட்டாயப்படுத்தவில்லை.
மிகப் பெரிய வியாபாரக் கூட்டத்தைக் கைப்பற்ற பெரிய தயாரிப்புகளெல்லாம் இல்லாமல் வெறும் 300 அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமானோர் மட்டுமே, எந்தச் சலனமும் இல்லாமல் மதீனாவிலிருந்து வெளியேறினர். ஆனால் அந்தச் சிறிய கூட்டத்திற்கும் நபிகளார் தளபதியாக இருந்து, இரண்டு அணியாகப் பிரித்து அதற்குத் தலைமைப் பொறுப்பைத் தகுந்தவர்களுக்குத் தந்து, படையின் கொடியைப் பறக்கவிட்டு, அவர்களிடமிருந்த இரண்டு குதிரைகள், எழுபது ஒட்டகங்களில் மாறிமாறி பயணம் செய்து பத்ர் பள்ளத்தாக்கை அடைவதை திட்டமாகக் கொண்டிருந்தனர். அந்த இடத்தை முஸ்லிம் படையினர் நெருங்கும் முன்பு வியாபாரக் கூட்டத்தின் நிலவரத்தை ரகசியமாகத் தெரிந்து செய்தி அனுப்ப இருவரை இவர்களுக்கு முன்பே அங்கு அனுப்பி வைத்தனர்.
அதே போல வியாபாரக் கூட்டத்தின் பொறுப்பாளர் அபூஸுஃப்யானும், மக்காவிற்குச் செல்லும் பாதையில் தடங்கலிருக்கும் என்று மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாவலர்களுடன் சென்றாலும், அவரும் உளவு பார்க்க ஆட்களை அனுப்பியிருந்தார். அப்போது அபூஸுஃப்யானுக்கு, முஸ்லிம் படையினருடன் முஹம்மது (ஸல்) வியாபாரக் கூட்டத்தைக்கைப்பற்ற வருகிறார் என்ற செய்தி எட்டியது. உடனே அவர் மக்காவிற்கு ஓர் ஆளை அனுப்பி, குறைஷிகளிடம் தங்களின் வியாபாரக் கூட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு பணித்தார். ஆனால் அபூஸுஃப்யான் அனுப்பியவர் தமது சட்டையைக் கிழித்துக் கொண்டு, ஒட்டகத்தின் மீது ஏறி நின்று “முஹம்மது நமது செல்வங்களைச் சூறையாடப் பார்க்கிறார், திரண்டு வந்து காப்பாற்றுங்கள்” என்று பீதியைக் கிளப்பிவிட்டார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த குறைஷிகள் திரளாகக் கிளம்பினர். கிட்டத்தட்ட 1300 வீரர்கள், எண்ணில் அடங்காத அளவிற்கு ஒட்டகங்கள், 100-க்கும் மேற்பட்ட குதிரைகள், கவச ஆடைகளுடன் வீரர்கள், படையின் பொதுத் தலைவராக அபூஜஹ்லை ஏற்று மாபெரும் போருக்கு புறப்படுவதுபோல் தயாரிப்புகளுடன் மக்காவின் வடப்புற வழியாகப் பயணித்தனர்.
“பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முஸ்லிம்களுக்கு எதிராக ‘பத்ர்’ போருக்குப் புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர். அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்” என்ற இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.
அர்ரஹீக் அல்மக்தூம், அல்குர்ஆன் 8:47
- ஜெஸிலா பானு.
ஷாமிலிருந்து மக்காவிற்குத் திரும்பும் வியாபாரக் கூட்டத்தைப் பிடிக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் புறப்பட்டனர். கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கம் இருந்ததே தவிர அவர்கள் அதனைப் பெரும் போராகக் கருதவில்லை, அதனால் நபி முஹம்மது (ஸல்) எவரையும் அதில் கலந்து கொள்ளக் கட்டாயப்படுத்தவில்லை.
மிகப் பெரிய வியாபாரக் கூட்டத்தைக் கைப்பற்ற பெரிய தயாரிப்புகளெல்லாம் இல்லாமல் வெறும் 300 அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமானோர் மட்டுமே, எந்தச் சலனமும் இல்லாமல் மதீனாவிலிருந்து வெளியேறினர். ஆனால் அந்தச் சிறிய கூட்டத்திற்கும் நபிகளார் தளபதியாக இருந்து, இரண்டு அணியாகப் பிரித்து அதற்குத் தலைமைப் பொறுப்பைத் தகுந்தவர்களுக்குத் தந்து, படையின் கொடியைப் பறக்கவிட்டு, அவர்களிடமிருந்த இரண்டு குதிரைகள், எழுபது ஒட்டகங்களில் மாறிமாறி பயணம் செய்து பத்ர் பள்ளத்தாக்கை அடைவதை திட்டமாகக் கொண்டிருந்தனர். அந்த இடத்தை முஸ்லிம் படையினர் நெருங்கும் முன்பு வியாபாரக் கூட்டத்தின் நிலவரத்தை ரகசியமாகத் தெரிந்து செய்தி அனுப்ப இருவரை இவர்களுக்கு முன்பே அங்கு அனுப்பி வைத்தனர்.
அதே போல வியாபாரக் கூட்டத்தின் பொறுப்பாளர் அபூஸுஃப்யானும், மக்காவிற்குச் செல்லும் பாதையில் தடங்கலிருக்கும் என்று மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாவலர்களுடன் சென்றாலும், அவரும் உளவு பார்க்க ஆட்களை அனுப்பியிருந்தார். அப்போது அபூஸுஃப்யானுக்கு, முஸ்லிம் படையினருடன் முஹம்மது (ஸல்) வியாபாரக் கூட்டத்தைக்கைப்பற்ற வருகிறார் என்ற செய்தி எட்டியது. உடனே அவர் மக்காவிற்கு ஓர் ஆளை அனுப்பி, குறைஷிகளிடம் தங்களின் வியாபாரக் கூட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு பணித்தார். ஆனால் அபூஸுஃப்யான் அனுப்பியவர் தமது சட்டையைக் கிழித்துக் கொண்டு, ஒட்டகத்தின் மீது ஏறி நின்று “முஹம்மது நமது செல்வங்களைச் சூறையாடப் பார்க்கிறார், திரண்டு வந்து காப்பாற்றுங்கள்” என்று பீதியைக் கிளப்பிவிட்டார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த குறைஷிகள் திரளாகக் கிளம்பினர். கிட்டத்தட்ட 1300 வீரர்கள், எண்ணில் அடங்காத அளவிற்கு ஒட்டகங்கள், 100-க்கும் மேற்பட்ட குதிரைகள், கவச ஆடைகளுடன் வீரர்கள், படையின் பொதுத் தலைவராக அபூஜஹ்லை ஏற்று மாபெரும் போருக்கு புறப்படுவதுபோல் தயாரிப்புகளுடன் மக்காவின் வடப்புற வழியாகப் பயணித்தனர்.
“பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முஸ்லிம்களுக்கு எதிராக ‘பத்ர்’ போருக்குப் புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர். அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்” என்ற இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.
அர்ரஹீக் அல்மக்தூம், அல்குர்ஆன் 8:47
- ஜெஸிலா பானு.
சூரியன் தன் அச்சின் மீது சுழல்கிறது என்ற அறிவியல் உண்மையை விஞ்ஞான உலகம் உரைப்பதற்கு முன்பே அதை திருக்குர்ஆன் இந்த உலகிற்கு எடுத்துரைத்தது.
சூரியன் நமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு விண்மீன் என்பதால் பிற விண்மீன்கள் போலன்றி அது பெரிதாகத் தோன்றுவதுடன் பிரகாசமாகவும் வெப்பம்மிக்கதாகவும் இருக்கின்றது. பூமியில் உள்ள உயிரினங்களுக்குத் தேவையான ஒளியையும் வெப்பத்தையும் இடைவிடாது தந்து காத்து வருவது சூரியனே. தாயைச் சுற்றி வரும் குழந்தைகளைப்போல, பூமியும் பிற கோள்களும் சூரியனை வெவ்வேறு சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன.
ஆனால் ஆரம்ப காலத்தில் சூரியன் உள்பட அனைத்துக் கோள்களும் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன என்று விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.
இதைத் தொடர்ந்து 1512-ம் ஆண்டு நிகோலஸ் கோபர்நிகஸ் என்ற அறிவியல் அறிஞர், “கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன. ஆனால் சூரியன் ஒரே இடத்தில் நகராமல் நிலை பெற்றிருக்கிறது” என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.
திருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்டபோது, இன்றுள்ள வானியல் அறிவோ, நவீன தொழில் நுட்பமோ, சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளோ நிச்சயமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆன், “அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (வானில் தத்தமக்குரிய) வட்டவறைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன” (21:33) என்ற கருத்தை வெளியிட்டது.
மேற்கண்ட வசனத்தில் உள்ள ‘நீந்துகின்றன’ என்ற சொல், விண்ணில் சூரியனின் நகர்வை விளக்குகிறது. மேலும் இந்தக் கோளங்கள் அனைத்தும் எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் விண்வெளியில் சுற்றி வருவதைக் கற்பனை செய்து பார்த்தால் அவை நீந்துவது போன்றே தோன்றுகிறது.
சூரியன் தன் அச்சின் மீது சுழல்கிறது என்ற அறிவியல் உண்மையை விஞ்ஞான உலகம் உரைப்பதற்கு முன்பே அதை திருக்குர்ஆன் இந்த உலகிற்கு எடுத்துரைத்தது.
சூரியனின் முகத்தோற்றத்தில் சூரியக்கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. சூரியன் தன்னைத் தானே சுற்றி வரும்போது இந்தக் கரும்புள்ளிகளும் சுற்றுகின்றன. அவை 25 நாட்களுக்கு ஒருமுறை வட்டப்பாதையில் சுழன்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சூரியன் ஒரு வினாடிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சூரியன் ஒரு குறிப்பிட்ட பாதையில் நிலையாக இல்லாமல் அது குறிப்பிட்ட பாதையில் செல்கிறது என்பதை, “சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் ஏற்பாடாகும்” (36:38) என்கிறது இறைமறை.
சூரியன் தன் கோளக் குடும்பத்தைச் சுமந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த இடத்தை விண்ணியல் ஆய்வாளர்கள் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கு ‘சோலார் அபெக்ஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்தக் குறிப்பிட்ட பிரதேசம் தமிழில், ‘சூரிய முகடு’ என்று அழைக்கப்படுகிறது.
“அல்லாஹ் சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன” (திருக்குர்ஆன்-13:2) என்றும்,
“சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்” (39:5) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த இதர கோள் களையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது என்ற விஞ்ஞானிகளின் கூற்றை, இந்த இறை வசனம் மெய்ப்பிப்பதாக இருக்கிறது.
சூரியன் சுழன்று கொண்டே இருக்கிறது என்பது மட்டுமல்ல; ஓடிக்கொண்டும் இருக்கிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்று சொல்ல வேண்டுமானால், அது நிச்சயமாக இறைக்கூற்றாகவே இருக்க முடியும். இந்த உண்மையை 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகச் சொல்லி இருக்க முடியாது.
மேலும், “பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக” (51:7), “வானத்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி” (25:61), என்பன போன்ற திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் ஒவ்வொரு கோளங் களுக்கும் தனித்தனி பாதைகள் உள்ளன என்பதையும், அவை அந்தப் பாதைகளிலேயே சுற்றிக்கொண்டிருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.
நாம் வசிக்கும் இந்தப் பூமியை சந்திரன் அதனுடைய பாதையில் சுற்றி வருகிறது. பூமி உள்ளிட்ட ஒன்பது கோள்களும் தத்தமது பாதைகளில் சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
“தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்” (14:33) என்றும், “சூரியன் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவறைக்குள் நீந்திச் செல்கின்றன” (36:40) என்றும் இறைவன் கூறுகின்றான்.
இந்த வசனத்தில் மனிதனுக்கு நன்றாகத் தெரிந்த சூரியன், சந்திரனைச் சான்றாகக் கொண்டு கிரகங்கள் எவ்வாறு தத்தமது பாதைகளில் சுற்றுகின்றன என்பதை இறைவன் விளக்குகின்றான்.
“பூமியை மையமாகக் கொண்டே எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன”-
“சூரியனை மையமாக வைத்தே கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன, ஆனால் சூரியன் அசையாமல் ஒரே இடத்தில் நிலை பெற்றுள்ளது”-
இப்படி அறிவியலாளர்களைத் தவறான முடிவுக்கு அழைத்துச் சென்ற விஷயங்களில்கூட ‘மிகச்சரியான அறிவியல் உண்மைகளைத் தந்தது, திருக்குர்ஆன்’ என்பதை உறுதியாகக் கூறலாம்.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதாலும் அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென விருப்பப்பட்டார்கள்.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதாலும் அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென விருப்பப்பட்டார்கள். அப்போது 'நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்' என்ற இறை வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள். தொழும் திசை கஅபா நோக்கியதான பின் நபிகளார் தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. தொழுகையில் தம் முகத்தை நபி(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பிக் கொள்ள ஆரம்பித்ததும் யூதர்களும் மற்றவர்களும் அதை வெறுக்க ஆரம்பித்தார்கள். யூதர்களில் சில அறிவீனர்கள் நேரடியாகவே, “முன்னர் நோக்கியிருந்த கிப்லாவைவிட்டு உங்களைத் திருப்பிவிட்டது எது?” என்று நபிகளாரிடம் கேட்டனர். அதற்கு, “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்துவான்” என்ற இறைவசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) எடுத்துரைத்தார்கள்.
இவர்கள் முஸ்லிம்களின் அணியில் இருந்து கொண்டே நயவஞ்சகம் செய்ய இருந்தவர்கள், இந்தத் தொழும் திசையின் மாற்றத்தினால் தங்களது சுயத்தை வெளிப்படுத்தி, பழைய கொள்கைக்கே திரும்பிச் சென்றனர். முஸ்லிம்களின் அணியைத் தூய்மைப்படுத்துவதற்காகவே இறைவன் செய்த ஏற்பாடாக இது அமைந்தது.
“பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்துவிட்டனர், நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது?” என்று சிலர் சந்தேகத்தை எழுப்பினர். அப்போது, 'உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்!
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் படையின் மூலம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்த மக்காவைச் சேர்ந்த இறைமறுப்பாளர்கள் பயந்து நடுங்கியதோடு, அதன் தொடர்ச்சியாகப் போர் பற்றிய வசனங்களும் தொழும் திசையின் மாற்றமும் குறைஷிகளைப் பீதியடையச் செய்தது. அவர்கள் போருக்குத் தயாராக நின்றனர். முஸ்லிம்களும் அடுத்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து (சிரியா) மக்காவிற்குத் திரும்பும் நாளை எதிர்பார்த்து மக்காவாசிகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்த காத்திருந்தனர்.
ஸஹீஹ் புகாரி 1:8:399, 1:2:40, திருக்குர்ஆன் 02:142-144
- ஜெஸிலா பானு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. தொழுகையில் தம் முகத்தை நபி(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பிக் கொள்ள ஆரம்பித்ததும் யூதர்களும் மற்றவர்களும் அதை வெறுக்க ஆரம்பித்தார்கள். யூதர்களில் சில அறிவீனர்கள் நேரடியாகவே, “முன்னர் நோக்கியிருந்த கிப்லாவைவிட்டு உங்களைத் திருப்பிவிட்டது எது?” என்று நபிகளாரிடம் கேட்டனர். அதற்கு, “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்துவான்” என்ற இறைவசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) எடுத்துரைத்தார்கள்.
இவர்கள் முஸ்லிம்களின் அணியில் இருந்து கொண்டே நயவஞ்சகம் செய்ய இருந்தவர்கள், இந்தத் தொழும் திசையின் மாற்றத்தினால் தங்களது சுயத்தை வெளிப்படுத்தி, பழைய கொள்கைக்கே திரும்பிச் சென்றனர். முஸ்லிம்களின் அணியைத் தூய்மைப்படுத்துவதற்காகவே இறைவன் செய்த ஏற்பாடாக இது அமைந்தது.
“பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்துவிட்டனர், நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது?” என்று சிலர் சந்தேகத்தை எழுப்பினர். அப்போது, 'உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்!
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் படையின் மூலம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்த மக்காவைச் சேர்ந்த இறைமறுப்பாளர்கள் பயந்து நடுங்கியதோடு, அதன் தொடர்ச்சியாகப் போர் பற்றிய வசனங்களும் தொழும் திசையின் மாற்றமும் குறைஷிகளைப் பீதியடையச் செய்தது. அவர்கள் போருக்குத் தயாராக நின்றனர். முஸ்லிம்களும் அடுத்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து (சிரியா) மக்காவிற்குத் திரும்பும் நாளை எதிர்பார்த்து மக்காவாசிகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்த காத்திருந்தனர்.
ஸஹீஹ் புகாரி 1:8:399, 1:2:40, திருக்குர்ஆன் 02:142-144
- ஜெஸிலா பானு.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்பேரில் சரியான சட்டத்திட்டத்தைப் பேணியே போர் புரிய வேண்டும், இறைநிராகரிப்பவர்கள் நேர்வழியில் செல்ல வேண்டுமென்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.
‘நக்லா’வில் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிந்த மக்காவைச் சேர்ந்த இறைமறுப்பாளர்கள் பயந்தனர். நக்லாவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காகச் செல்லும் வழி ஆபத்தானது என்று உணர்ந்தனர். இருப்பினும் அவர்கள் முஸ்லிம்களுடன் சமாதானமாகச் செல்லாமல், மக்காவிற்குள் இருக்கும் முஸ்லிம்களையெல்லாம் கொல்வோம் என்று பகைமை கொண்டனர்.
அப்போது அல்லாஹ் இறைவசனங்களை அருளினான் “உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் அத்து மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. உங்களை வெட்டிய அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்.
ஏனெனில் குழப்பமும், கலகமும் உண்டாக்குதல் கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் அங்கும் அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
எனினும், அவர்கள் அவ்வாறு செய்வதில் நின்றும் ஒதுங்கி விடுவார்களாயின், நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். குழப்பமும், கலகமும் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர வேறு எவருடனும் பகை கொண்டு போர் செய்தல் கூடாது.”
போருக்கான இறைவசனங்கள் அருளப்பட்டதும் அதற்கான தயாரிப்புகளை மக்கள் செய்து கொண்டனர். இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போராகவும், இன பெருமைக்கு மிகப் பெரிய அடியாகவும் இருந்தது. போர் சம்பந்தப்பட்ட இன்னும் பல இறைவசனங்கள் அருளப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் கைதிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதுவரை விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.
அவ்வசனங்களை மக்கள் வாசிக்கும்போது போர் சமீபத்தில் நிகழப் போகிறதென்றும், அதன் முடிவில் அல்லாஹ்வின் பாதையில் தமது வீரத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டுமென்றும், இறுதியில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைக்கும் என்பதும் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தாலும். முஸ்லிம்கள் போருக்காகத் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக் கொண்டனர்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்பேரில் சரியான சட்டத்திட்டத்தைப் பேணியே போர் புரிய வேண்டும், இறைநிராகரிப்பவர்கள் நேர்வழியில் செல்ல வேண்டுமென்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.
திருக்குர்ஆன் 2:190-193
- ஜெஸிலா பானு.
அப்போது அல்லாஹ் இறைவசனங்களை அருளினான் “உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் அத்து மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. உங்களை வெட்டிய அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்.
ஏனெனில் குழப்பமும், கலகமும் உண்டாக்குதல் கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் அங்கும் அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
எனினும், அவர்கள் அவ்வாறு செய்வதில் நின்றும் ஒதுங்கி விடுவார்களாயின், நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். குழப்பமும், கலகமும் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர வேறு எவருடனும் பகை கொண்டு போர் செய்தல் கூடாது.”
போருக்கான இறைவசனங்கள் அருளப்பட்டதும் அதற்கான தயாரிப்புகளை மக்கள் செய்து கொண்டனர். இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போராகவும், இன பெருமைக்கு மிகப் பெரிய அடியாகவும் இருந்தது. போர் சம்பந்தப்பட்ட இன்னும் பல இறைவசனங்கள் அருளப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் கைதிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதுவரை விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.
அவ்வசனங்களை மக்கள் வாசிக்கும்போது போர் சமீபத்தில் நிகழப் போகிறதென்றும், அதன் முடிவில் அல்லாஹ்வின் பாதையில் தமது வீரத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டுமென்றும், இறுதியில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைக்கும் என்பதும் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தாலும். முஸ்லிம்கள் போருக்காகத் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக் கொண்டனர்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்பேரில் சரியான சட்டத்திட்டத்தைப் பேணியே போர் புரிய வேண்டும், இறைநிராகரிப்பவர்கள் நேர்வழியில் செல்ல வேண்டுமென்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.
திருக்குர்ஆன் 2:190-193
- ஜெஸிலா பானு.
பெண்களுக்கு இஸ்லாம் எந்தெந்த உரிமைகளை வழங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நபிகளார் பிறப்பதற்கு முன்புள்ள அரேபியாவின் அறியாமைக் காலத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்வது அவசியம்.
பெண்மையை-தாய்மையைப் போற்றுகின்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது.
“பெற்றோரின் உரிமைகளைப் பேணி நடக்குமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்துள்ளோம். அவனுடைய தாயோ பலவீனத்தின் மீது பலவீனத்தைச் சுமந்தவளாக அவனை வயிற்றில் சுமந்தாள். பால்குடி மறப்பதற்கோ இரண்டு வருடங்கள் ஆகிப்போனது. (இதன் காரணமாகவே) எனக்கு நன்றி செலுத்துமாறும், பெற்றோர்களுக்கு நன்றி செலுத்து மாறும் (அவனுக்கு உபதேசித்தோம்.) என்னிடமே (ஒருநாள்) நீ மீண்டு வர வேண்டியிருக்கும்”. (திருக்குர்ஆன்-31:14)
“பெற்றோரிடம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைக் கஷ்டப்பட்டு அவனைக் கருவில் சுமந்திருந்தாள்; கஷ்டப்பட்டு அவனைப் பிரசவித்தாள். கருவில் சுமந்த காலமும் பால்குடி காலமும் முப்பது மாதங்களாகும்”. (திருக்குர்ஆன்-46:15)
‘பிரசவ வேதனை பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை’ என்ற பிரகடனத்தை குர்ஆனின் மேற்கண்ட வசனம் தவறு என்று சுட்டிக்காட்டுகிறது.
மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு கிடைத்த பெரும்பேறு என்பதும், பிரசவ வேதனை பெண்ணுக்கு பெருமிதம் தரும் பெருமை என்பதும், அதனால்தான் பெற்றோருடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
கடமைகளிலோ, அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளிலோ பெண்களுக்கு இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் வைக்கவில்லை. தொழுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும் ஆண்கள் மீது கடமையாக உள்ளதைப்போல பெண்கள் மீதும் கடமையாக உள்ளது.
“உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன். (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்” (திருக்குர்ஆன்-3:195)
“ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல் களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச்செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்” (திருக்குர்ஆன்-16:97)
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே எந்தவித வேறுபாட்டையும் இஸ்லாம் விதைக்கவில்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
பெண்களுக்கு இஸ்லாம் எந்தெந்த உரிமைகளை வழங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நபிகளார் பிறப்பதற்கு முன்புள்ள அரேபியாவின் அறியாமைக் காலத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்வது அவசியம்.
இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை ‘அறியாமைக் காலம்’ என்றே சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அங்கு பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம்; ஒரு பெண்ணைப் பல ஆண்கள் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
பெண் குழந்தை பிறந்தால் வறுமை வரும்; கவுரவம் குறையும் என்று கருதினார்கள். அதனால் பெண் குழந்தை பிறந்ததும் அதை உயிரோடு குழி தோண்டிப் புதைத்தனர். இத்தகைய பழக்கங்கள் நபிகளாரின் வருகைக்குப் பிறகு குழி தோண்டி புதைக்கப்பட்டன.
அரேபியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான மூடப்பழக்கங்கள் இருந்தன. கணவன் இறந்தால், அவன் சடலம் எரியும் ‘சிதை’ யில் அவனுடன் ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கம் இருந்தது. இதற்கு ‘சதி’ என்று பெயர். இது பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய சதியாகும். விதவைகள் அபசகுனமாகப் பார்க்கப்பட்டனர். மாதவிலக்கின்போது அவர்களை வீட்டை விட்டே விலக்கி வைத்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் ‘கள்ளிப்பால்’ கொடுத்து கொல்லும் பழக்கம் இருந்தது.
இன்றும் பெண் குழந்தை பிறந்தால் கவலை கொள்ளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளைப் பெற்று அவர்கள் மீது அன்பும் பாசமும் காட்டி வளர்த்து ஆளாக்குபவர்களுக்கு இறைவனிடத்தில் பெரும் பரிசு காத்திருக்கிறது.
“எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து தேவைகளை நிறைவேற்றி கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விட்டது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், “இரு பெண் மக்கள் இருந்தாலுமா?” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்” என்று பதில் அளித்தார்கள்.
மேலும், ‘ஒருவர் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் இறைவன் அங்கு வானவர்களை அனுப்பி வைக்கின்றான். அவர்கள் அந்த வீட்டை அடைந்து கூறுகின்றனர்: ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று! பிறகு அந்த பெண் குழந்தையைச் சிறகால் மூடுகிறார்கள். அதன் தலையைத் தம் கைகளால் தடவியவாறு கூறுகிறார்கள்: ‘இது பலவீனமான உயிர்; எனவே இந்தப் பெண் குழந்தையை எவர் கண்காணித்து வளர்க்கின்றாரோ, அவருக்கு மறுமை நாளில் இறைவனின் உதவி கிடைக்கும்’.
குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த பிறகோ அதைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.
“எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையாலும் மூடத்தனத்தாலும் கொன்று விட்டார்களோ; மேலும் அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி, அவர்களுக்கு வழங்கி இருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்து கொண்டார்களோ அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகி விட்டார்கள்” என்று திருக்குர்ஆன் (6:140) கூறுகிறது.
“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்” (17:31) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மேற்கண்ட நபிமொழிகளும், இறை மறை வசனங்களும், பெண் குழந்தை பிறந்தால் அஞ்சத் தேவை இல்லை என்பதைச் சொல்லும் அருஞ்சொற்கள்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்ற நபிகளாரின் முத்தான சொல், பெண்ணின் பெருமையைப் பறை சாற்றுவதாக உள்ளது.
“பெற்றோரின் உரிமைகளைப் பேணி நடக்குமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்துள்ளோம். அவனுடைய தாயோ பலவீனத்தின் மீது பலவீனத்தைச் சுமந்தவளாக அவனை வயிற்றில் சுமந்தாள். பால்குடி மறப்பதற்கோ இரண்டு வருடங்கள் ஆகிப்போனது. (இதன் காரணமாகவே) எனக்கு நன்றி செலுத்துமாறும், பெற்றோர்களுக்கு நன்றி செலுத்து மாறும் (அவனுக்கு உபதேசித்தோம்.) என்னிடமே (ஒருநாள்) நீ மீண்டு வர வேண்டியிருக்கும்”. (திருக்குர்ஆன்-31:14)
“பெற்றோரிடம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைக் கஷ்டப்பட்டு அவனைக் கருவில் சுமந்திருந்தாள்; கஷ்டப்பட்டு அவனைப் பிரசவித்தாள். கருவில் சுமந்த காலமும் பால்குடி காலமும் முப்பது மாதங்களாகும்”. (திருக்குர்ஆன்-46:15)
‘பிரசவ வேதனை பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை’ என்ற பிரகடனத்தை குர்ஆனின் மேற்கண்ட வசனம் தவறு என்று சுட்டிக்காட்டுகிறது.
மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு கிடைத்த பெரும்பேறு என்பதும், பிரசவ வேதனை பெண்ணுக்கு பெருமிதம் தரும் பெருமை என்பதும், அதனால்தான் பெற்றோருடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
கடமைகளிலோ, அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளிலோ பெண்களுக்கு இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் வைக்கவில்லை. தொழுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும் ஆண்கள் மீது கடமையாக உள்ளதைப்போல பெண்கள் மீதும் கடமையாக உள்ளது.
“உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன். (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்” (திருக்குர்ஆன்-3:195)
“ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல் களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச்செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்” (திருக்குர்ஆன்-16:97)
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே எந்தவித வேறுபாட்டையும் இஸ்லாம் விதைக்கவில்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
பெண்களுக்கு இஸ்லாம் எந்தெந்த உரிமைகளை வழங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நபிகளார் பிறப்பதற்கு முன்புள்ள அரேபியாவின் அறியாமைக் காலத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்வது அவசியம்.
இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை ‘அறியாமைக் காலம்’ என்றே சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அங்கு பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம்; ஒரு பெண்ணைப் பல ஆண்கள் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
பெண் குழந்தை பிறந்தால் வறுமை வரும்; கவுரவம் குறையும் என்று கருதினார்கள். அதனால் பெண் குழந்தை பிறந்ததும் அதை உயிரோடு குழி தோண்டிப் புதைத்தனர். இத்தகைய பழக்கங்கள் நபிகளாரின் வருகைக்குப் பிறகு குழி தோண்டி புதைக்கப்பட்டன.
அரேபியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான மூடப்பழக்கங்கள் இருந்தன. கணவன் இறந்தால், அவன் சடலம் எரியும் ‘சிதை’ யில் அவனுடன் ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கம் இருந்தது. இதற்கு ‘சதி’ என்று பெயர். இது பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய சதியாகும். விதவைகள் அபசகுனமாகப் பார்க்கப்பட்டனர். மாதவிலக்கின்போது அவர்களை வீட்டை விட்டே விலக்கி வைத்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் ‘கள்ளிப்பால்’ கொடுத்து கொல்லும் பழக்கம் இருந்தது.
இன்றும் பெண் குழந்தை பிறந்தால் கவலை கொள்ளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளைப் பெற்று அவர்கள் மீது அன்பும் பாசமும் காட்டி வளர்த்து ஆளாக்குபவர்களுக்கு இறைவனிடத்தில் பெரும் பரிசு காத்திருக்கிறது.
“எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து தேவைகளை நிறைவேற்றி கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விட்டது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், “இரு பெண் மக்கள் இருந்தாலுமா?” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்” என்று பதில் அளித்தார்கள்.
மேலும், ‘ஒருவர் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் இறைவன் அங்கு வானவர்களை அனுப்பி வைக்கின்றான். அவர்கள் அந்த வீட்டை அடைந்து கூறுகின்றனர்: ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று! பிறகு அந்த பெண் குழந்தையைச் சிறகால் மூடுகிறார்கள். அதன் தலையைத் தம் கைகளால் தடவியவாறு கூறுகிறார்கள்: ‘இது பலவீனமான உயிர்; எனவே இந்தப் பெண் குழந்தையை எவர் கண்காணித்து வளர்க்கின்றாரோ, அவருக்கு மறுமை நாளில் இறைவனின் உதவி கிடைக்கும்’.
குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த பிறகோ அதைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.
“எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையாலும் மூடத்தனத்தாலும் கொன்று விட்டார்களோ; மேலும் அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி, அவர்களுக்கு வழங்கி இருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்து கொண்டார்களோ அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகி விட்டார்கள்” என்று திருக்குர்ஆன் (6:140) கூறுகிறது.
“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்” (17:31) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மேற்கண்ட நபிமொழிகளும், இறை மறை வசனங்களும், பெண் குழந்தை பிறந்தால் அஞ்சத் தேவை இல்லை என்பதைச் சொல்லும் அருஞ்சொற்கள்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்ற நபிகளாரின் முத்தான சொல், பெண்ணின் பெருமையைப் பறை சாற்றுவதாக உள்ளது.






