search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரமலான் நோன்பு பிறை
    X
    ரமலான் நோன்பு பிறை

    ரமலான் நோன்பு பிறை பார்க்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது

    ரமலான் நோன்பு தொடங்கும் நாள்பற்றி அறிவிக்க ஒருங்கிணைந்த முப்பெரும் ஜமாத்களின் ரமலான் பிறை காணும் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கரும்புக்கடைபவுசுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் வளாகத்தில் நடைபெறுகிறது.
    கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் எம்.ஐ. முகமது அலி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-ரமலான் நோன்பு தொடங்கும்

    நாள்பற்றி அறிவிக்க ஒருங்கிணைந்த முப்பெரும் ஜமாத்களின் ரமலான் பிறை காணும் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கரும்புக்கடைபவுசுல்

    இஸ்லாம் சுன்னத் ஜமாத் வளாகத்தில் நடைபெறுகிறது. பிறை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவை ஹிலால் கமிட்டி தலைவர் அப்துர்ரஹீம் இம்தாதி, செயலாளர் நாசர் தீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரமலான் பிறை பார்க்கும்

    கூட்டம் ஹிலால் கமிட்டி சார்பில் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் அருகே உள்ள இர்ஷத்துல் முஸ்லிமின் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில்

    இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. பிறை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விவரம் அளிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
    Next Story
    ×