search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டுவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டுவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

    ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    18 ஆயிரம் பாடல்களை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு உயர்த்தியவர் ஞான மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா. இவரது ஆண்டு விழா ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக குமரி மாவட்டம் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியே‌‌ஷன் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் இரவு மார்க்க பேருரைகள், மவுலிது ஓதுதல், ஞானமுற்றம் நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மார்க்க பேருரைகள் நடக்கின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப்புகழ்ச்சி பாடுதல் 9-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார் கள்.

    தொடர்ந்து அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல், 12-ந்தேதி இரவு 7.30 மணிக்கு 3-ம் சியாரத் நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
    Next Story
    ×