search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பர்தா பெண்களின் உயிர் கவசம்
    X

    பர்தா பெண்களின் உயிர் கவசம்

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்- பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் வெளியேறி விட்டால் ஷைத்தான் அவளை தலையை நிமிர்த்தி பார்க்க வைக்கிறான் (திர்மிதி: 1173)
    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்- பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் வெளியேறி விட்டால் ஷைத்தான் அவளை தலையை நிமிர்த்தி பார்க்க வைக்கிறான் (திர்மிதி: 1173)

    அதாவது ஒரு பெண் தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறி பலருக்கு முன்னால் வந்து விட்டாலே, பார்ப்போருக்கு அவளை ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுவான். பார்ப்போரின் உள்ளத்தில் சபலத்தை உருவாக்குவான். இதையடுத்து தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு, மனித ஷைத்தான்கள் அவளிடம் வரம்பு மீறி நடக்க முனைவார்கள்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்- ஒரு பெண் மணமுடிக்கக் கூடாத நெருங்கிய உறவினருடன் இருக்கும் போதே தவிர வேறு எந்த (அன்னிய) ஆணும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கலாகாது என்று கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, இறைத்தூதர் அவர்களே. என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டு விட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(போருக்குச் செல்வதிலிருந்து பெயரை) திரும்பப் பெற்றுக் கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக என்று கூறினார்கள் (புகாரி: 5233)
    அந்நியப் பெண்ணுடன் ஓர் ஆண் தனிமையில் இருக்கும்போது அங்கே மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி 1171)

    தனிமையில் இருக்கும் வாலிப பெண்ணுக்கு ஓர் ஆண் சலாம் சொல்லக் கூடாது. அப்படி ஒருவன் சலாம் சொன்னால் அந்தப் பெண் பதில் சலாம் சொல்லக் கூடாது என்று இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (கிதாபுல் அஸ்கார்: 368). இதன் மூலம், ஒரு அந்நியப் பெண்ணுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எந்தவிதமான தகவல் பரிமாற்றமும் செய்யக் கூடாது என்பதை அறியலாம்.
    ஆண்கள் இருக்கும் பகுதிக்கு அறவே செல்லக் கூடாது

    மூசா (அலை) அவர்கள் மத்யன் நகரத்தின் நீர்நிலைக்கு வந்தபோது, அங்கு மக்கள் தம் கால்நடைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தார். ஆனால் ஷுஐப் (அலை) அவர்களின் இரு மகள்கள் மட்டும் தம் கால்நடைகளுக்கு நீர் புகட்டாமல் ஒதுங்கி நின்றிருந்ததைக் கண்ட மூசா (அலை) அவர்கள், இவர்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் நீர் புகட்டாமல் நிற்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணிகள் சொன்ன பதில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்து விட்ட காரணத்தால், அதைக்  சூர்ஆனில் இடம் பெறச் செய்தான். அவர்கள் கூறிய பதில்: இந்த ஆண் இடையர்கள் விலகிச் செல்லும் வரை நாங்கள் நீர் புகட்ட மாட்டோம். எங்கள் தந்தை மிகவும் முதியவர். (அல்குர்ஆன் 28:23)

    இதில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் நீர் புகட்டவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது எங்கள் தந்தை மிகவும் முதியவர். அதாவது எங்கள் தந்தையால் ஆடு மேய்க்க முடியவில்லை. எனவே நிர்பந்தமாக நாங்கள் வெளியில் வந்தோம். அப்படி வெளியில் நிர்பந்தமாக  வந்தாலும் ஆண்கள் இருக்கும் இடத்திற்கு அறவே செல்ல மாட்டோம் என்றனர். இங்கு பர்தாவின் இலக்கணத்தை கற்பித்து விட்டனர்.

    சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாத பெண்கள்

    நபி (ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள்: ஆடையணிந்தும் நிர்வாணிகளாக இருக்கக் கூடிய, ஆண்களை தன் பால் சாய்க்கக் கூடிய, தாங்களும் ஆண்களின்பால் சாயக்கூடிய சில பெண்கள் தோன்றுவார்கள்.... இவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். ஏன் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். (முஸ்லிம்: 5582-4316)

    உலக அழிவின் அடையாளம்:

    நபி (ஸல்) அவர்களிடம், ஜிப்ரீல் (அலை) அவர்கள் உலக அழிவின் அடையாளம் பற்றி கேட்டபோது, ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியாகப் போகிறவளைப் பெற்றெடுத்தல் என்று பதிலளித்தார்கள். அதாவது, ஆண் பிள்ளைகள் தாய் பேச்சை கேட்க மாட்டார்கள் என்ற காலமெல்லாம் சென்று பெண் பிள்ளைகளே தாய் பேச்சை மட்டுமல்ல தாயையே மதிக்காமல் தாயை அடக்கி ஆள்பவளாக மகள் மாறி விடுவான். இது உலக அழிவின் ஓர் அடையாளமாகும்.

    -சலாவூதின்
    Next Story
    ×