search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    தீராத துன்பங்களை தீர்க்கும் குலதெய்வ மண்...
    X

    தீராத துன்பங்களை தீர்க்கும் குலதெய்வ மண்...

    • குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும்.
    • குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை.

    குலதெய்வம் குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். உங்கள் குடும்பத்திற்கு தீராத துன்பங்களோ துயரங்களோ ஒருபோதும் வராது.

    இது தவிர ஒரு சின்ன பரிகாரம். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வ வழிபாடு செய்து முடித்துவிட்டு, குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப தலைவனின் கையால் ஒரு கைப்பிடி மண், குடும்பத் தலைவியின் கையால் ஒரு கைப்பிடி மண், இரண்டையும் எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள்.

    இதை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். சுத்தபத்தமாக பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதில் சிறிதளவு மஞ்சள் தூளை மட்டும் கலந்து கொள்ளுங்கள் போதும். ஒரு செம்புத்தகட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி அந்த சின்ன செம்பு தகடை இந்த மண்ணோடு வைத்து மஞ்சள் துணையிலேயே முடிச்சு போட்டு, கட்டி வீட்டில் பத்திரமான ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

    யார் கைக்கும் படாமல் இந்த மண் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். கொஞ்சம் உயரமாக வீட்டிற்கு உள் பக்கத்தில் ஆணி அடித்து அதில் இதை மாட்டி வைத்தால் கூட போதும். தினம் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கும் காண்பித்து விடுங்கள். அவ்வளவுதான். வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது புதிய மண்ணை எடுத்து வரலாம். பழைய மண்ணை உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயே ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள்.

    இப்படி குலதெய்வ கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் குலதெய்வமே குடியிருக்கும். உங்களுடைய முன்னோர்கள் காலடித்தடம் பட்ட மண் அது. இனி உங்களுடைய அடுத்த அடுத்த சந்ததியர்கள் செல்லக்கூடிய இடம்தான் அது. அப்படிப்பட்ட பொக்கிஷமான அந்த ஒரு கைப்பிடி மண் உங்கள் வீட்டில் இருப்பது அந்த குலதெய்வமே உங்கள் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.

    விதியின் கட்டாயத்தில் நம் குடும்பத்திற்கு வரக்கூடிய துன்பத்திலிருந்து துயரத்திலிருந்து காப்பாற்றுவது நம்முடைய குலதெய்வம் தான். அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி 'நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்'. என்று குலதெய்வத்தை தினம் தினம் நினைவுகூர்ந்தாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காக்கும். குலதெய்வத்தின் பெயரை ஒரு நாளும் உச்சரிக்காமல் இருக்காதீங்க.

    பெண்கள் மட்டும் தான் இப்படி குலதெய்வத்தை நினைவு கூற வேண்டும் என்று அவசியம் கிடையாது. அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் தினமும் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு, அவரவர் வேலையை தொடங்கினால், அந்த நாள் நல்லபடியாக செல்லும்.

    Next Story
    ×