என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
வியாபார சிக்கல்கள், உடல் உபாதைகளை தீர்க்கும் கரூர் மாரித்தாய்
- மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் இந்த கரூர் மாரித்தாய்.
- அம்மனை வழிபட்டால் தீராத நோய்களை தீர்த்து வைப்பாள் என்றே கூறுவார்கள்.
மருத்துவம் மற்றும் அதிநவீன சிகிச்சை முறைகள் இன்று சிகரம் தொட்ட சாதனைகள் பலவற்றை படைத்தாலும் அன்றைய கால கட்டத்தில் ஆன்மீக நம்பிக்கைதான் அருமருந்தாக இருந்ததை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இன்றைய கொரோனாவைப்போல், அன்றைய காலரா, அம்மை நோய்கள் மக்களை பாடாய்படுத்தியது.
எப்படி வாழ்க்கையை வாழ போகிறோம் என்ற அச்ச உணர்வை அன்றைக்கே காண்பித்துவிட்டு சென்றது. ஆனாலும் அயராத பக்தி, தீராத நம்பிக்கை போன்றவையே எப்பேற்பட்ட உயிர்க்கொல்லி நோய்களையும் விரட்டி அடித்தது. அம்மனை வழிபட்டால் தீராத நோய் உள்ளிட்ட வினைகளையும் தீர்த்து வைப்பாள் என்றே கூறுவார்கள்.
அதுபோல அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற்போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு கரூரில் வீற்றிருக்கும் மாரியம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த கரூர் மாரித்தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஏழை, எளியோரும் கண்ணீருடன் கரூர் மாரியம்மனை மனதுருகி வேண்டினால் மனமிறங்காமல் இந்த மாரித்தாய் இருக்க மாட்டாள் என்பது பக்தர்களின் மனதில் கல்வெட்டாய் பதிந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்