search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    அற்புதங்கள் தரும் ஆடிமாத வழிபாடுகள், பரிகாரங்கள்
    X

    அற்புதங்கள் தரும் ஆடிமாத வழிபாடுகள், பரிகாரங்கள்

    • ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.
    • தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது.

    பஞ்ச பூத இயற்கை சக்திகளின் பணிகளும், அவைகளால் சகல உயிாினமும் அடையக் கூடிய பலா பலன்களும் அளப்பரியது. கண்களால் காணமுடியாதபஞ்சபூத சக்தி மனிதர்களின் உடல், உணர்வோடு ஒன்றி மனிதர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வதால் தான் பூமியில் மனிதர்களால் வாழ முடிகிறது.

    பிரபஞ்ச சக்திக்கு கட்டுப்பட்டு மாபெரும் நல்ல பலன்களை வாாி வழங்கும் பஞ்சபூதங்கள் சில நேரங்களில் தனித்தனியே சீற்றம் அடைகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் அதை உடனடியாக கட்டுப் படுத்த முடிவதில்லைஅல்லது அவைகளின் சீற்றத்தைதடுத்து நிறுத்தவும் முடிவதில்லை.

    ஆனால் மனிதர்கள் இதை பற்றியெல்லாம் சிந்திக்காமல்இயற்கைக்கு மாறாக, இடையூறாக, செயல் படுவதால் தான் அவ்வப்போது பேரழிவும் கொடூர நோய்களும் தாக்குகிறதுஎன்பது மறுக்க முடியாத உண்மை.

    உலகில் மிகப்பொிய வல்லரசாக இருந்தாலும் இயற்கைக்கு மிஞ்சியது எதுவும் இல்லை.அப்படி இருக்கும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்.எதையும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்வதால் மேலும் மேலும் விபரீதங்களும் பேரழிவுகளும் அகால மரணங்களும் பொருள் சேதங்களும் சம்பவிக்கின்றன.

    மேலும் எந்த ஒரு விஞ்ஞான வளா்ச்சியை பயன்படுத்தி வருகிறோமோ அவை அனைத்தும் சில நேரங்களில் நோ் எதிா்மறை விளைவுகளை உருவாக்கி மனிதனை அடக்கி ஒடுக்கி விடும். இப்பொழுது நாம் சென்று கொண்டு இருப்பது வளா்ச்சி பாதை என நினைத்தாலும் இயற்கை சீற்றங்களால் பல பின்னடைவுகளை சந்திக்க நோிடும்.

    இதனால் தனிமனிதபாதிப்புடன்உலகின் ஒட்டு மொத்த பாதிப்பால் பல முன்னேற்றங்களும்தடைபடுகிறது.அதனால் நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களின் சீற்றத்தை கட்டுப்படுத்த ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்தை வழிபட்டு பல்வேறுஇயற்கை சீற்றத்தை தணித்தார்கள்.

    காவல் தெய்வம் என்பது ஒரு ஊரை காத்து வருகின்ற ஒரு சிறியதெய்வம்.காவல் தெய்வங்கள் குடி கொண்டுள்ளஆலயங்கள் எல்லாம் சிறியதாகவே இருக்கும்.ஆனால் திருவிழாக்காலங்களில் அந்தப் பகுதியே களை கட்டும்.அந்த தெய்வங்களுக்கு விதவிதமான படையல்கள், ஆடைகள், அபிஷேக ஆராதனைகள் என்று எல்லாமே சிறப்பாக இருக்கும்.

    தமிழ்நாட்டில் தற்போது வழிபாட்டில் இருந்து வருகின்ற காவல் தெய்வங்களில்மாரியம்மன், திரவுபதி அம்மன், சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து,மாடன், வீரன் இப்படிப் பல காவல் தெய்வங்கள் உண்டு.

    பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தாய்க்குச் சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்.மாரியம்மன் கோவில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது.ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும்மாரியம்மன் தான் மக்களை காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்.

    ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும். ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.

    தமிழ் மாதங்களை உத்ராயணம், தட்சணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தட்சணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.

    தட்சணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.

    சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி,அம்மன் வழிபாட்டைமேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது.அம்மனுக்கு வேப்பிலை சாற்றிவழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும்ஆடி மாதத்தின் சிறப்பாகும். ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசிக்குள் புனர்பூசம் 4-ம் பாதத்தில் நுழைவார்.கடகம்சந்திரன் வீடு பெண் ராசி.

    பெண் வீட்டில் ஆண் கிரகமானசூரியன் நிற்பதால்ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்பதால்நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆடி மாதத்தில் புதிதாக துளிர் விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்சக்தியும் உண்டு. மேலும் எளிதாக ஜீரணிக்கக் கூடியஉணவான கூழ் சாப்பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    ஆடி மாதம்என்றாலே அம்மன் வழிபாட்டிற்குபெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதம் பல்வேறு வழிபாட்டிற்குரிய விசேஷ தினங்களை கொண்ட மாதம் என்பதால் வீடுகளில் சுப நிகழ்வுகளை குறைத்து அம்மன் வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    Next Story
    ×