என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
X
உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்...பரிகாரமும்...
Byமாலை மலர்17 May 2022 7:54 AM GMT (Updated: 17 May 2022 7:54 AM GMT)
பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.
மனதை மகிழ்விக்கும் பிற செல்வங்கள் நிலையற்றது. கஷ்டகாலம் வந்துவிட்டால் வீடு, வாசல், சொத்து, சொந்த பந்தம் எல்லாம் பறந்துவிடும். ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, ஒருவர் கற்ற கல்வி மட்டுமே. ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம் அல்ல என்பது இதன் பொருளாகும்.
இன்றைய சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சற்று மிகைப்படுத்தலாகவே உள்ளது. படிக்காத மேதைகள் அதிகம் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. கல்வியால் மட்டுமே ஒரு மனிதன் சமுதாயத்தில் தன்னை நிலை நிறுத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. கல்வியால் தாழ்ந்தவர்கள் எவருமில்லை. கல்வியால் உயர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறும் அளவிற்கு சமுதாயம் மாற்றம் அடைந்துள்ளது. அடிப்படை கல்வி அறிவு போதுமானது என்று வாழ்ந்த நிலையில் கல்லூரிக்கு சென்று ஒரு பட்டமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது என்பதால் பல பட்டதாரிகள் உருவாகியுள்ளார்கள்.
பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.
உயர் கல்வி தடையும் பரிகாரமும்
சனி, சந்திரன் இணைவு இருப்பவர்கள் சுய தொழிலுக்காக, குடும்ப தொழில் சார்ந்த கல்வி அல்லது குடும்ப தொழிலை கவனிப்பதற்காக படிப்பார்கள். சுய தொழில் பளு காரணமாக உயர் கல்வியை தொடர்வதில் தடை இருக்கும்.
சனி, சந்திரனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருக்கும் போது பொருளாதார நெருக்கடி, உடல் நலக் குறைவால், தகாத நட்பால் சந்தர்ப்பத்தை தவற விடுவார்கள்.
புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் அதிகமாக அரியர்ஸ் மற்றும் ஞாபக சக்திக் குறைவால் படிப்பை தொடர முடிவதில்லை.
ஜனன கால ஜாதகத்தில் 9,11-ம் அதிபதி 6,8,ல் மறைந்தாலும், 9-ம் இடத்தில் சனி ராகு/ கேது நின்றாலும் உயர் கல்வியில் தடை நிலவும்.
கல்விக்கான காரக கிரகம் புதனின் பயணப்பாதையில் அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் நின்றால் கல்வியில்தடையை கொடுக்கும்.
கல்வியில் தடை, தாமதம், தோல்விகள் ஏற்படுவதற்கு தசா புக்திகள், கோட்ச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச கிரக தசாபுக்திகளும்,6, 8, 12 மிட கிரக தசை புக்திகளும்,ராகு-கேது தசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். புதன்நீசமாகி தசை நடத்தினால்மறதி, படிப்பில் நாட்டக் குறைவு தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் போன்றவற்றால்கல்வியில் தடை ஏற்படும்.
4,8-ம் அதிபதிக்கு சனி,செவ்வாய் சேர்க்கை இருந்தால் உயர்கல்வியில் திடீர் தடைகள் ஏற்படலாம். லக்னம், 5, 7, 8-ம் இடங்களில் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் தசாபுக்திகளில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும். சுக ஸ்தானாதிபதி 6, 8,12-ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று தசாபுக்தி நடந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வி தடை ஏற்படலாம். கோட்சார ராகு,கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன்ற ஸ்தானங்களில் வருவது, மற்றும் அர்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி, ஏழரை சனி, அஷ்டமச்சனி காலங்களில்கல்வியில் தடை ஏற்படும்.
பரிகாரம்
ஜனன கால ஜாதகத்தில் 9-ம் இடம் வலிமை குறைந்தவர்கள் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் முன்னோர்களைஆத்மார்த்தமாக சரணாகதி அடைந்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும்.
ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள் புதன் கிழமைபச்சைப் பயிரை சாப்பிட வேண்டும். புதன் கிழமை ஹயக்கிரீவருக்கு நெய் தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்தால் நன்மைகள் தேடிவரும். மேலும் புதன் கிழமை பிரதோசம் வரும் நாட்களில் சிவன் மற்றும் நந்திக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு கைகூடும்.
உயர் கல்விக்கு பொருளாதார தடைஇருப்பவர்கள் தமிழ் நாட்டின்கல்வித் தந்தை காமராஜர்அவர்களை மானசீகமாகவழிபட்டால் கல்வி உதவி நிச்சயம்கிடைக்கும்.
கல்வியினைப் பெறுவது அனைவரது உரிமையாகும்.பிறப்பிலும் இறப்பிலும் கூடவே வரும் கல்விச் செல்வத்தை அடைந்து வாழ்வில் வளம் பெறுவோம்.
இன்றைய சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சற்று மிகைப்படுத்தலாகவே உள்ளது. படிக்காத மேதைகள் அதிகம் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. கல்வியால் மட்டுமே ஒரு மனிதன் சமுதாயத்தில் தன்னை நிலை நிறுத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. கல்வியால் தாழ்ந்தவர்கள் எவருமில்லை. கல்வியால் உயர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறும் அளவிற்கு சமுதாயம் மாற்றம் அடைந்துள்ளது. அடிப்படை கல்வி அறிவு போதுமானது என்று வாழ்ந்த நிலையில் கல்லூரிக்கு சென்று ஒரு பட்டமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது என்பதால் பல பட்டதாரிகள் உருவாகியுள்ளார்கள்.
பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.
உயர் கல்வி தடையும் பரிகாரமும்
சனி, சந்திரன் இணைவு இருப்பவர்கள் சுய தொழிலுக்காக, குடும்ப தொழில் சார்ந்த கல்வி அல்லது குடும்ப தொழிலை கவனிப்பதற்காக படிப்பார்கள். சுய தொழில் பளு காரணமாக உயர் கல்வியை தொடர்வதில் தடை இருக்கும்.
சனி, சந்திரனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருக்கும் போது பொருளாதார நெருக்கடி, உடல் நலக் குறைவால், தகாத நட்பால் சந்தர்ப்பத்தை தவற விடுவார்கள்.
புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் அதிகமாக அரியர்ஸ் மற்றும் ஞாபக சக்திக் குறைவால் படிப்பை தொடர முடிவதில்லை.
ஜனன கால ஜாதகத்தில் 9,11-ம் அதிபதி 6,8,ல் மறைந்தாலும், 9-ம் இடத்தில் சனி ராகு/ கேது நின்றாலும் உயர் கல்வியில் தடை நிலவும்.
கல்விக்கான காரக கிரகம் புதனின் பயணப்பாதையில் அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் நின்றால் கல்வியில்தடையை கொடுக்கும்.
கல்வியில் தடை, தாமதம், தோல்விகள் ஏற்படுவதற்கு தசா புக்திகள், கோட்ச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச கிரக தசாபுக்திகளும்,6, 8, 12 மிட கிரக தசை புக்திகளும்,ராகு-கேது தசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். புதன்நீசமாகி தசை நடத்தினால்மறதி, படிப்பில் நாட்டக் குறைவு தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் போன்றவற்றால்கல்வியில் தடை ஏற்படும்.
4,8-ம் அதிபதிக்கு சனி,செவ்வாய் சேர்க்கை இருந்தால் உயர்கல்வியில் திடீர் தடைகள் ஏற்படலாம். லக்னம், 5, 7, 8-ம் இடங்களில் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் தசாபுக்திகளில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும். சுக ஸ்தானாதிபதி 6, 8,12-ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று தசாபுக்தி நடந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வி தடை ஏற்படலாம். கோட்சார ராகு,கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன்ற ஸ்தானங்களில் வருவது, மற்றும் அர்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி, ஏழரை சனி, அஷ்டமச்சனி காலங்களில்கல்வியில் தடை ஏற்படும்.
பரிகாரம்
ஜனன கால ஜாதகத்தில் 9-ம் இடம் வலிமை குறைந்தவர்கள் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் முன்னோர்களைஆத்மார்த்தமாக சரணாகதி அடைந்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும்.
ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள் புதன் கிழமைபச்சைப் பயிரை சாப்பிட வேண்டும். புதன் கிழமை ஹயக்கிரீவருக்கு நெய் தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்தால் நன்மைகள் தேடிவரும். மேலும் புதன் கிழமை பிரதோசம் வரும் நாட்களில் சிவன் மற்றும் நந்திக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு கைகூடும்.
உயர் கல்விக்கு பொருளாதார தடைஇருப்பவர்கள் தமிழ் நாட்டின்கல்வித் தந்தை காமராஜர்அவர்களை மானசீகமாகவழிபட்டால் கல்வி உதவி நிச்சயம்கிடைக்கும்.
கல்வியினைப் பெறுவது அனைவரது உரிமையாகும்.பிறப்பிலும் இறப்பிலும் கூடவே வரும் கல்விச் செல்வத்தை அடைந்து வாழ்வில் வளம் பெறுவோம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X