என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
X
1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி
Byமாலை மலர்3 Dec 2021 5:51 AM GMT (Updated: 3 Dec 2021 5:51 AM GMT)
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில் பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. காவிரி, பவானி அமுதநதி சங்கமிக்கும் இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து புனிதநீராடி செல்வார்கள்.
மேலும் இறந்த முன்னோர் களுக்கு பரிகாரம் செய்ய, அமாவாசை நாட்களில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில் பவானி கூடுதுறை களை கட்டும். மேலும் ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் புனிதநீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீர்நிலைகள் மற்றும் கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் கூடுதுறையிலும் பரிகாரம் செய்ய, புனித நீராட தடை விதிக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பவானி கூடுதுறை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பரிகாரம் செய்யவும், ஆற்றில் புனித நீராடவும் தொடர்நது தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். அவர்கள் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில் பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பரிகாரம் செய்ய 3 பேருக்கும், ஈமக்கிரியை செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பக்தர்கள் மற்றும் புரோகிதர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 ஆண்டுகளுக்கு பின்பு பவானி கூடுதுறையில் இன்று முதல் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த அளவிலான பக்தர்களே பரிகாரம் செய்ய வந்து இருந்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா? என்று கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்தனர்.
மேலும் இறந்த முன்னோர் களுக்கு பரிகாரம் செய்ய, அமாவாசை நாட்களில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில் பவானி கூடுதுறை களை கட்டும். மேலும் ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் புனிதநீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீர்நிலைகள் மற்றும் கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் கூடுதுறையிலும் பரிகாரம் செய்ய, புனித நீராட தடை விதிக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பவானி கூடுதுறை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பரிகாரம் செய்யவும், ஆற்றில் புனித நீராடவும் தொடர்நது தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். அவர்கள் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில் பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பரிகாரம் செய்ய 3 பேருக்கும், ஈமக்கிரியை செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பக்தர்கள் மற்றும் புரோகிதர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 ஆண்டுகளுக்கு பின்பு பவானி கூடுதுறையில் இன்று முதல் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த அளவிலான பக்தர்களே பரிகாரம் செய்ய வந்து இருந்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா? என்று கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X