search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறுங்காலீஸ்வரர்
    X
    குறுங்காலீஸ்வரர்

    பித்ரு தோஷம் நீக்கும் குறுங்காலீஸ்வரர்

    இங்கு பிரதோஷம் மிக விசேஷம். இங்குள்ளது போல வடக்கு பார்த்த சிவனையும், மூக்கணாங்கயிறு போட்ட நந்தியையும் வேறு எங்கும் பார்க்க முடியாது.
    சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பழமையான ஒன்றாகும். ராம-ராவண யுத்தத்திற்குப் பின், சீதை, ராமனை பிரித்துக் காட்டுச்சென்றாள். அங்கு அவளுக்கு லவ, குசன், பிறந்தனர். அவர்கள் பெரியவர்கள் ஆகி, வால்மீகி, முனிவரோடு, தென்னாடு வந்த போது, கோயம்பேடு வந்தனர்.

    இது கோசலபுரி, கோனசநகர், கோயம்பீடு எனப்பட்டது. கோ-பசு, அயம், இரும்பு, பீடு வலிமை, பசுக்களை இரும்பு கவசம் போல் வலிமையுடன் காக்கும் இடம் இது என்பதால் இப்பெயர் அமைந்தது. இங்கு இருந்த ஆதரவற்ற பசுக்களை லவ, குசர்கள், வால்மீகி உத்தரவுப்படி காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. இங்கு பல ரிஷிகள் முக்தி அடைந்துள்ளனர்.

    ஒரு சமயம் நந்தியின் கர்வமும், இங்கு தான் அடக்கப்பட்டது. இவரது அனுமதி பெற்றுத்தான் சிவனை தரிசிக்க வேண்டும். லவ, குசர்கள் தம் தந்தை, ராமருடன் போரிட்டதால் பித்ரு சாபம் பெற்றனர். இதனால் அவர்கள் இருவரும் இங்கு வந்து தங்கி 12 வருட காலம் பிரதோஷ பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

    இவர்கள் ஆரம்பித்தது தான் முதல் பிரதோஷ பூஜை. இங்கு ஒரு பிரதோஷம் பார்த்தால் 1000 பிரதோஷம் பார்த்த பலன் உண்டு. இங்கு பிரதோஷம் மிக விசேஷம். இங்குள்ளது போல வடக்கு பார்த்த சிவனையும், மூக்கணாங்கயிறு போட்ட நந்தியையும் வேறு எங்கும் பார்க்க முடியாது. இங்குள்ள அம்பாள் தர்மசம் வர்த்தினி தனது இடது பாதத்தை முன் வைத்து அனைவரையும் வரவேற்பது போல் காட்சி தருகிறாள். சிவன் கோவிலின் முன்புள்ள 16 கால மண்டபத்தில் ஒரு தூணில் சரபேஸ்வரர் உள்ளார். இவருக்கு ராகு காலத்தில் பூஜை உண்டு.

    இவர் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது அவரை அடக்கினர். சிவனின் 64-வடிவங்களில் ஒன்று இது. இவரை வணங்கினால் ஆபத்தில் இருந்து காப்பார். ஞாயிறு அன்று ஆயிரணக்கணக்கானவர்கள் இவரை வழிபட்டு பலன் பெறுகிறார்கள். இவரை வழிபட்டால் பல குறைகள் நீங்கும்.
    Next Story
    ×