search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம்
    X
    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம்

    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரத்தை எப்போது செய்வது?

    குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.
    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் முழு பலனையும் பெற முடியும். சுபமான பரிகாரங்களை வளர்பிறை நாட்களிலும் துயரம், துக்கம் நீக்கும் பரிகாரங்களை தேய்பிறை நாட்களிலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

    செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமையை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்துக்கு 4,8,12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது.

    பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4,8,12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக்கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்த குழந்தையின் 4,8,12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக்கூடாது.

    Next Story
    ×