என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீட்டில் சண்டை, சச்சரவுகளை தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த பரிகாரம் செய்து பாருங்க...
Byமாலை மலர்21 Jun 2021 8:46 AM GMT
இந்த பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள்.
என்னதான் சம்பாதித்தாலும் சில வீடுகளில் தொடர்ந்து உடல்நலக் குறைபாடு, கணவன் மனைவிக்குள் எப்போதும் கருத்து வேறுபாடுகள் , சண்டை , சச்சரவுகள் நீடித்துக்கொண்டே இருக்கும். அப்படி இருந்தால் இதனை ஒரு எளிய பரிகாரம் மூலம் சரி செய்து விட முடியும். இதனை நம்பிக்கையுடன் செய்து வர சிறப்பான பலன்களை பெறலாம். வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் இருக்கும் பொழுது சிறிதளவு வெண்கடுகை கையில் எடுத்து வீட்டின் அனைத்து மூலைகளிலும், திசைகளிலும் தூவி விடலாம்.
24 மணி நேரம் கழிந்ததும் வீட்டை சுத்தமாக பெருக்கி ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து முச்சந்தியில் போட்டு விடலாம். இதனைச் செய்வதால் வீட்டில் அமைதி நிலவுவதை அனுபவத்தில் உணரலாம். இதே போல் வாரம் 1 அல்லது 2 முறைகள் , விசேஷ தினங்கள் சாம்பிராணி புகை போடலாம். அதிலும் வெண்கடுகு தூபம் போடலாம். விசேஷ தினங்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுது வீடு முழுவதும் வெண்கடுகு, சாம்பிராணி, குங்குலியம், ஏலக்காய் சேர்த்து தூபம் போட்டால் வீடு முழுவதும் கமகமவென்று தெய்வீக மணம் கமழுவதை உணர முடியும்.
இதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள் .அதே போல் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்தாலும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வரலாம்.
24 மணி நேரம் கழிந்ததும் வீட்டை சுத்தமாக பெருக்கி ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து முச்சந்தியில் போட்டு விடலாம். இதனைச் செய்வதால் வீட்டில் அமைதி நிலவுவதை அனுபவத்தில் உணரலாம். இதே போல் வாரம் 1 அல்லது 2 முறைகள் , விசேஷ தினங்கள் சாம்பிராணி புகை போடலாம். அதிலும் வெண்கடுகு தூபம் போடலாம். விசேஷ தினங்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுது வீடு முழுவதும் வெண்கடுகு, சாம்பிராணி, குங்குலியம், ஏலக்காய் சேர்த்து தூபம் போட்டால் வீடு முழுவதும் கமகமவென்று தெய்வீக மணம் கமழுவதை உணர முடியும்.
இதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள் .அதே போல் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்தாலும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வரலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X