search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புட்லூர் அங்காள பரமேஸ்வரி
    X
    புட்லூர் அங்காள பரமேஸ்வரி

    சுகப்பிரசவமும், குழந்தை வரமும் அருளும் அம்மன்

    குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கும், சுகப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகள், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் பலர் குவியக்கூடிய ஆலயமாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் விளங்குகிறது.
    குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில். பெரும்பாலான கோவிலில் அம்மன் நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார்.

    குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்களும், குடும்ப பிரச்னை தீர வேண்டும் என வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளிக்கக்கூடிய அம்மனாக திகழ்கிறாள்.
    கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டி அவர்களது பெற்றோரோ, கணவரோ, உறவினர் என இங்கு வந்து வேண்டி செல்கின்றனர்.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்த கோவிலில் கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.

    இந்த அம்மனின் திருவடியில் எலுமிச்சையை வைக்கும் பெண்கள் அருகில் அவர்களின் முந்தானையை விரித்தபடி பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வைக்கும் எலுமிச்சை உருண்டோடி அவர்களின் முந்தானையில் விழுந்தால் பிள்ளை பாக்கியம், திருமண பாக்கியம் என தாங்கள் வேண்டும் வரத்தை அம்மன் அருள்வார் என்பது ஐதீகம்.

    மேலும் குடும்பத்தில் எப்போதும் பிரச்சினைகள் என்று சிக்கித்தவிப்பவர்கள், நிம்மதியில்லாமல் கலங்குபவர்கள் விரைவில் குடும்பத்தில் குதூகலத்தை அடைவார்கள். நிம்மதியும் சந்தோஷமுமாக இருப்பார்கள் என்கிறார்கள் பெண்கள்.

    அதே போல் பிள்ளை வரம் வேண்டுபவர்கள் கோவிலில் வெளியே இருக்கும் புற்றுக்கு அருகே இருக்கும் வேப்ப மரத்தில் சேலையின் முந்தானையை சிறிது கிழித்து கட்டி விடுகிறார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனை தரிசித்து பூஜை செய்து செல்கின்றனர்.
    Next Story
    ×