search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில்
    X
    திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில்

    வாஸ்து தோஷம், முன்னோர்களின் சாபம் நீக்கும் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில்

    திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில் வாஸ்து தோஷம், முன்னோர்களின் சாபம், வீடு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தலமாக உள்ளது.
    திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 74ஆவது சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை.

    இந்த கோவில் மூலவர் “வீரட்டானேஸ்வரர்.” அம்மன் “பரிமளநாயகி.” பிருந்தை என்னும் சொல்லுக்கு “துளசி” என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம்.

    வீடு கட்டும் முன் ஏதும் பிரச்சனை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.
    Next Story
    ×