search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை பரிகாரம்
    X
    திருமண தடை பரிகாரம்

    திருமண தடை நீங்க இந்த பரிகாரங்கள் பலன் தரும்

    சிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது. இந்த திருமண தோஷத்திற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.

    கும்பகோணத்திற்கு அருகே இருக்கும் “திருமணஞ்சேரி” என்ற கோவிலுக்கு சென்று அக்கோவிலின் இறைவனான சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வணங்கி, அக்கோயிலை 9 முறை வலம் வந்து வேண்டுதலை முடிக்க, 90 நாட்களுக்குள் திருமணம் தோஷம் கொண்ட ஆண்களுக்கும், பெண்களும் அத்தோஷங்கள் நீங்கி சிறப்பான திருமண சம்பந்தம் அமையும்.
    Next Story
    ×