என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமணப்பேறு, புத்திரப்பேறு அருளும் ஆலங்குடி
Byமாலை மலர்8 Sep 2020 8:38 AM GMT (Updated: 8 Sep 2020 8:38 AM GMT)
இத்தல இறைவனை வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும். நல்ல திருமணப்பேறு, புத்திரப்பேறு கிடைக்கும். நவகிரக தலங்களில் இவ்விடம் குரு பகவானுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலங்குடி கும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆபத்சகாயேசுவரர் கோவில்.
இங்கு இறைவனார் ஆபத்சகாயேசுவரர், அம்மை ஏலவார் குழலி என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர். இத்தலம் சாயாரட்சை எனப்படும் மாலை (மாலை 5.30 முதல் 6.00 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இவ்விடம் பூளைவனம் ஆகும். பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்தி உலக உயிர்களை காத்த இடம் ஆதலால் இவ்விடம் ஆலங்குடி. இறைவன் ஆபத்சகாயேசுவரர் ஆவார்.
முசுகுந்த சக்கரவர்த்தி தன் மந்திரியும், சிவபக்தருமான அமுதோகர் என்பவரது சிவபுண்ணியத்தில் பாதியளவை கேட்டு மந்திரி சம்மதிக்காததால் அவரின் தலையைக் கொய்ய உத்தரவிட்டான். மந்திரியின் தலையைக் கொய்தவுடன் அமுதோகர் என்ற சப்தம் இத்தலம் முழுவதும் கேட்டதும் அரசன் தன் தவறுக்கு வருந்தி இத்தல இறைவனை வணங்கி சாப விமேசனம் பெற்றான்.
அம்மை இவ்விடத்தில் இறைவனை திருமணம் செய்ய தவம் இயற்றி இறைவனை கணவனாகப் பெற்றார். நவகிரக தலங்களில் இவ்விடம் குரு பகவானுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தல இறைவனை வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும். நல்ல திருமணப்பேறு, புத்திரப்பேறு கிடைக்கும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 98-வது தலமாகும்.
திருகொள்ளம்புதூர் – வில்வ வனம் – அர்த்தசாம வழிபாடு
இங்கு இறைவனார் ஆபத்சகாயேசுவரர், அம்மை ஏலவார் குழலி என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர். இத்தலம் சாயாரட்சை எனப்படும் மாலை (மாலை 5.30 முதல் 6.00 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இவ்விடம் பூளைவனம் ஆகும். பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்தி உலக உயிர்களை காத்த இடம் ஆதலால் இவ்விடம் ஆலங்குடி. இறைவன் ஆபத்சகாயேசுவரர் ஆவார்.
முசுகுந்த சக்கரவர்த்தி தன் மந்திரியும், சிவபக்தருமான அமுதோகர் என்பவரது சிவபுண்ணியத்தில் பாதியளவை கேட்டு மந்திரி சம்மதிக்காததால் அவரின் தலையைக் கொய்ய உத்தரவிட்டான். மந்திரியின் தலையைக் கொய்தவுடன் அமுதோகர் என்ற சப்தம் இத்தலம் முழுவதும் கேட்டதும் அரசன் தன் தவறுக்கு வருந்தி இத்தல இறைவனை வணங்கி சாப விமேசனம் பெற்றான்.
அம்மை இவ்விடத்தில் இறைவனை திருமணம் செய்ய தவம் இயற்றி இறைவனை கணவனாகப் பெற்றார். நவகிரக தலங்களில் இவ்விடம் குரு பகவானுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தல இறைவனை வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும். நல்ல திருமணப்பேறு, புத்திரப்பேறு கிடைக்கும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 98-வது தலமாகும்.
திருகொள்ளம்புதூர் – வில்வ வனம் – அர்த்தசாம வழிபாடு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X