என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கணவன் மனைவி சண்டைக்கு நிரந்தர தீர்வு தரும் பரிகாரம்
Byமாலை மலர்10 Aug 2020 7:12 AM GMT (Updated: 10 Aug 2020 7:12 AM GMT)
எப்படிப்பட்ட ஈகோ பிடித்த கணவன் மனைவி சண்டைக்கும், நிரந்தர தீர்வு தரும் பரிகாரம் ஒன்று உள்ளது. இந்த பரிகாரத்தை செய்தால் கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எப்பேர்ப்பட்ட பிரச்சினை உள்ள கணவன் மனைவி சண்டையையும் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது, நம்மால் தீர்த்துவிட முடியும். ஆனால், நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று சண்டை போட்டுக் கொள்ளும் கணவன் மனைவியை சேர்ப்பது என்பது மிகவும் கஷ்டம். இன்றைய காலகட்டத்தில் ஈகோ பிரச்சனையால் பிரியும் கணவன் மனைவி தம்பதியர்கள் அதிகம் என்று சொல்லிவிடலாம். தம்பதியர்களுக்கு பிரச்சனை வந்தால், குழந்தைகளுடைய வாழ்க்கையையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் மட்டும், ஒரு நிமிடம் சிந்திப்பவராக இருந்தால், எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். எப்படிப்பட்ட ஈகோ பிடித்த கணவன் மனைவி சண்டைக்கும், நிரந்தர தீர்வு தரும் பரிகாரம் ஒன்று உள்ளது. அதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்த பரிகாரத்திற்கு தேவை 2 வெற்றிகளும், கொஞ்சமாக சுத்தமான பசு நெய் கிடைத்தால் மிகவும் நல்லது. அப்படி கிடைக்கவில்லை என்றால், சாதாரணமாக உங்கள் வீட்டில் இருக்கும் நெய்யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு வெற்றிலையில் கணவரின் பெயரை எழுதி விடுங்கள். மற்றொரு வெற்றிலையில், மனைவியின் பெயரை எழுதி விடுங்கள். ஒரு பேனாவினால் எழுதுங்கள். அதன்பின், நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நெய்யை உங்கள் விரலில் தொட்டு, அந்த வெற்றிலை முழுவதிலும் தேய்த்து விடுங்கள். பெயர் கொஞ்சமாக அழிந்தாலும் பரவாயில்லை.
இப்போது ஒரு வெற்றிலையின் மேல் மற்றொரு வெற்றிலையை வைத்து சுருட்டி விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும், ஒரு வெற்றிலையின் மேல் சாஸ்திரப்படி, மற்றொரு வெற்றிலையை கவிழ்த்து வைக்க கூடாது. எப்போதும் சாமி கும்பிடும்போது வைப்போம் அல்லவா? ஒரு வெற்றிலைக்கு மேலே மற்றொரு வெற்றிலை, அப்படி வைத்து சுருட்டி, ஒரு கயிறால் அந்த வெற்றியை கட்டி விட வேண்டும். வெற்றிலை பிரியாத அளவிற்கு கட்டிவிடுங்கள்.
இப்போது, இதை காற்று புகாத டப்பாவில் போட்டு, அப்படியே மூடி வைத்துவிடுங்கள். 21 நாட்கள் அப்படியே இருக்கட்டும். 21 நாட்களுக்குள் இடையே டப்பாவை திருக்க வேண்டாம். கட்டாயம் விரிசல் விழுந்த கணவன் மனைவி மனதிற்குள், நிச்சயம் மாற்றம் ஏற்படும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தாலே பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஒருமுறை செய்தும் பலன் இல்லையா? பழைய வெற்றிலையை, கால் படாமல் தூர போட்டுவிட்டு, மீண்டும் புதிதாக வெற்றிலையை எடுத்து, இதேபோல் பரிகாரத்தை செய்து டப்பாவில் போட்டு மூடி வையுங்கள். அதிகபட்சம் 3 முறை இந்த பரிகாரத்தை செய்தால், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.
இந்த பரிகாரத்திற்கு தேவை 2 வெற்றிகளும், கொஞ்சமாக சுத்தமான பசு நெய் கிடைத்தால் மிகவும் நல்லது. அப்படி கிடைக்கவில்லை என்றால், சாதாரணமாக உங்கள் வீட்டில் இருக்கும் நெய்யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு வெற்றிலையில் கணவரின் பெயரை எழுதி விடுங்கள். மற்றொரு வெற்றிலையில், மனைவியின் பெயரை எழுதி விடுங்கள். ஒரு பேனாவினால் எழுதுங்கள். அதன்பின், நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நெய்யை உங்கள் விரலில் தொட்டு, அந்த வெற்றிலை முழுவதிலும் தேய்த்து விடுங்கள். பெயர் கொஞ்சமாக அழிந்தாலும் பரவாயில்லை.
இப்போது ஒரு வெற்றிலையின் மேல் மற்றொரு வெற்றிலையை வைத்து சுருட்டி விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும், ஒரு வெற்றிலையின் மேல் சாஸ்திரப்படி, மற்றொரு வெற்றிலையை கவிழ்த்து வைக்க கூடாது. எப்போதும் சாமி கும்பிடும்போது வைப்போம் அல்லவா? ஒரு வெற்றிலைக்கு மேலே மற்றொரு வெற்றிலை, அப்படி வைத்து சுருட்டி, ஒரு கயிறால் அந்த வெற்றியை கட்டி விட வேண்டும். வெற்றிலை பிரியாத அளவிற்கு கட்டிவிடுங்கள்.
இப்போது, இதை காற்று புகாத டப்பாவில் போட்டு, அப்படியே மூடி வைத்துவிடுங்கள். 21 நாட்கள் அப்படியே இருக்கட்டும். 21 நாட்களுக்குள் இடையே டப்பாவை திருக்க வேண்டாம். கட்டாயம் விரிசல் விழுந்த கணவன் மனைவி மனதிற்குள், நிச்சயம் மாற்றம் ஏற்படும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தாலே பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஒருமுறை செய்தும் பலன் இல்லையா? பழைய வெற்றிலையை, கால் படாமல் தூர போட்டுவிட்டு, மீண்டும் புதிதாக வெற்றிலையை எடுத்து, இதேபோல் பரிகாரத்தை செய்து டப்பாவில் போட்டு மூடி வையுங்கள். அதிகபட்சம் 3 முறை இந்த பரிகாரத்தை செய்தால், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X