search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மஹத்தி தோஷமும், பரிகாரமும்
    X
    பிரம்மஹத்தி தோஷமும், பரிகாரமும்

    ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

    ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி? என்றும் இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதற்கு செய்யவேண்டிய பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
    ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர், பார்த்து இருந்தாலோ 99 % அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக அர்த்தம். நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும், இது பொருந்தும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்.

    * பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து, திருமணம் செய்யாமல் இருத்தல்
    * பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
    * குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
    * குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது
    * வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
    * சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
    * உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும், அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
    பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
    * வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
    * தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
    * மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
    * தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
    * திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
    * குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

    பரிகாரம்:

    தமிழ்நாடு, கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல். இதுவே மிகவும் சிறந்த பரிகாரமாகும். இதனை செய்தால் 6 மாதத்திற்குள் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    Next Story
    ×