search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நீண்ட காலமாக வட்டி கட்டுவதற்கு வீட்டின் வாஸ்து காரணமா?
    X
    நீண்ட காலமாக வட்டி கட்டுவதற்கு வீட்டின் வாஸ்து காரணமா?

    நீண்ட காலமாக வட்டி கட்டுவதற்கு வீட்டின் வாஸ்து காரணமா?

    ஒருவரது வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அவருக்கு கடன், சொத்து பிரச்சனை, திருமண தடை, பணப்பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
    ஒருவரது வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அவருக்கு கடன், சொத்து பிரச்சனை, திருமண தடை, பணப்பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

     * நீங்கள் வசிக்கும் வீடானது சரியாக வடக்கு திசை அல்லது சரியான கிழக்கு திசையாக இல்லாமல் இருப்பது.

    * புதன் வாசல், சுக்கிரன் வாசல் என்று நினைத்துக் கொண்டு நீச்ச பகுதியில் வாசல் அமைப்பது.

    * வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தூண்களுடன் கூடிய அமைப்பில் போர்டிகோ அமைத்திருப்பது.

    * வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் பூஜையறையை வைத்து வழிபடுவது.

    * வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள பூஜையறையில் எல்லா நேரமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து கொண்டே இருப்பது.

    * வடக்கு மற்றும் கிழக்கு பொது சுவர்கள் இருப்பது,

    * வடக்கு பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள ஜன்னலைத் திறந்தால் வானம் தெரியாதபடி அமைப்பில் இருப்பது,

    * வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னலை திறந்து வைக்காமல் திரைசீலை கொண்டு மூடி இருப்பது,

    * மணிபிளான்ட் போன்ற  கொடி தாவரங்களை வளர்ப்பது

    * தென்மேற்கு பகுதியை மாஸ்டர் பெட்ரூம் ஆக உபயோகப் படுத்தாமல் இருப்பது,

    * தவறான தெருகுத்து, தெருப்பார்வை இருப்பது.

    * தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதியில் ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற ஊருக்குப் பொதுவான நீர்நிலைகள் இருப்பது.

    * ஆறாம் பாவகம்  6, 8, 12 உடன் தொடர்பு இருந்தால் நீண்ட காலம் வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருப்பார்கள்

    * ஆறாம் பாவகம்  6, 8 தொடர்பு இருந்தால் பணத்தால் அசிங்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

    * சுக்கிரனின் தொடர்பு 6, 8, 12 ஆக இருந்தால் வாழ்நாள் முழுவதும் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சுக்கிரனின் தொடர்பு 6, 8  மட்டும் இருந்தால் பணத்தால் அசிங்க பட வேண்டிய சூழல் ஏற்படும்.

    * ஒருவருடைய ஜாதகத்தில்1, 3, 5, 7, 9, 11 இதுபோல ஒற்றைப்படை தொடர்புகள் அதிகமாக இருக்கும் போதும் பணத்தால் நீண்டகாலத்திற்கு கஷ்டம் என்பது இருந்து கொண்டே இருக்கும்.
    Next Story
    ×