search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகர்கோவில் நாகராஜா ஆலயம்
    X
    நாகர்கோவில் நாகராஜா ஆலயம்

    குழந்தை பாக்கியம் வேண்டுமா? இந்த கோவிலில் பரிகாரம் செய்யுங்க

    குழந்தை பாக்கியம் இல்லாததற்கும், ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உரிய பூஜைகள் செய்ததால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    கடந்த சில ஆண்டுகளில் குழந்தை பேறு இல்லாதவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு அறிவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லாததற்கும், ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உரிய பூஜைகள் செய்ததால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    இந்த பாக்கியத்தை தரும் ஆன்மிக தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா ஆலயம் திகழ்கிறது. குறிப்பிட்ட நாளில் இந்த ஆலயத்துக்கு வந்து வெள்ளி அல்லது கல் நாகர் சிலைகளை சமர்ப்பித்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடுவதை காணலாம். வெள்ளி நாகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய ரூ. 500 வரை செலவாகும்.

    அந்த வெள்ளி நாகரை பூஜை செய்த பிறகு தலையை சுற்றி உண்டியலுக்குள் செலுத்திவிட வேண்டும். கல்லால் செய்யப்பட்ட நாகரை வைத்து பூஜை செய்ய வேண்டுமானால் ரூ. 13 ஆயிரம் வரை செலவாகும். ஜாதகத்தில் மிகமிக கடுமையான தோஷங்கள் இருப்பவர்கள் கல் நாகர் வைத்து பரிகார பூஜை செய்வது அவசியமாகும். ஆலயத்தின் கன்னி மூலை பகுதியில் இதற்கான பூஜைகள் நடத்துவார்கள். இந்த பூஜை மூலம் எவ்வளவு பெரிய கால சர்ப்ப தோஷமும் விலகி சென்றுவிடும்.
    Next Story
    ×