search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைரவர்
    X
    பைரவர்

    நல்ல வேலை கிடைக்க பைரவருக்கு பரிகாரம்

    கர்ம வினையால் நம் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருக்கும். இதனால் வேலை கிடைப்பதில் பிரச்சனை இருக்கும். வேலை கிடைக்க பைரவருக்கு பரிகாரம் செய்தால் வழிபிறக்கும்.
    கர்ம வினையால் நம் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருக்கும். வேலை கிடைப்பதில் பிரச்சனை இருக்கும். தாமதம் ஆகும். கிடைத்தாலும் எதிர்பார்த்த வேலை இருக்காது. பிடித்த வேலை அமையாது. இவ்வாறாக வேலை சார்ந்த விஷயத்தில் தடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதை சரி செய்ய சனி பகவானின் குருவான பைரவரை விரதம் இருந்து வழிபட வேண்டும். பைரவரை கவனித்தால் போதும். சனி பகவான் மகிழ்வார். கெடு பலன்கள் குறையும். தோஷம் நீங்கும். மனதிற்கு பிடித்த வேலை நிச்சயம் அமையும்.

    பரிகாரம்: சனிக்கிழமை அன்று காலை நீராடி விட்டு சுத்தமான ஆடை அணிந்து கொண்டு 7 மணிக்குள் பைரவர் சன்னதிக்கு சென்று அங்கு சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்சித்து, சிவப்பு நிற பழங்கள் நிவேதனம் செய்து விட்டு ஒரு புதிய அகல் விளக்கு ஒன்றை வங்கி வைத்து கொள்ளுங்கள். அதற்கு மூன்று முகங்களில் சந்தனம், குங்குமம் இட்டு கொள்ளுங்கள். ஒரு கருப்பு நிற சுத்தமான நூல் துணி ஒன்றை சிறிய அளவில் சதுரமாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்.

    அதில் 27 என்ற எண்ணிக்கையில் மிளகுகளை ஒவ்வொன்றாக போட்டு கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மூட்டை போன்று நன்கு இறுக்கமாக நூல் கொண்டு கட்டி விடுங்கள். மிளகுகள் வெளிய வந்து விடக்கூடாது. பின்னர் அகல் விளக்கில் வைத்து விடுங்கள். இழுப்பை எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். இழுப்பை எண்ணெய் இல்லை என்றால் நல்லெண்ணெய் ஊற்றலாம். மிளகு மூட்டையின் திரியிலும் படும்படி ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் தீபம் ஏற்றி பைரவர் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
    Next Story
    ×