என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாபம் நீக்கும் தங்க-வெள்ளி பல்லிகள்
Byமாலை மலர்27 Jan 2020 6:34 AM GMT (Updated: 27 Jan 2020 6:34 AM GMT)
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லிகளின் உருவங்களை தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.
பல்லி விழும் தோஷத்தால் சில சங்கடங்கள் அன்றாட வாழ்வில் ஏற்படலாம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றால் அமைந்த இரு பல்லிகளின் உருவங்கள் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.
ஒரு முறை வரதராஜப் பெருமாளை தரிசிக்க ஒரு பக்தர் தனது மனைவியுடன் வந்திருந்தார். அப்போது கோவில் நடை சாத்தப்படும் நேரமாகிவிட்டது. அதனால் அவசர அவசரமாக அந்த பக்தர்கள் வரதராஜரின் சன்னிதிக்கு முன்புள்ள பாதையை “வரதா” என்று சொல்லி கடந்தார். அப்போது வலது காலில் ஒரு பல்லியும், இடது காலில் இன்னொரு பல்லியும் மிதிபட்டு நசுங்கின.
அந்த இரு பல்லிகளும் உடல் நசுங்கி இறக்கும் தருவாயில், வரதராஜப் பெருமாள் அந்த பல்லிகளுக்கு காட்சியளித்து, “எனது பக்தனின் பாதங்களை தாங்கிய நிலையில் இறந்த காரணத்தால் உங்களுக்கு நித்ய முக்தி அளிக்கிறேன். நீங்கள் என்னுடனேயே எப்போதும் தங்கப் பல்லியாகவும், வெள்ளிப் பல்லியாகவும் இருப்பீர்கள். உங்களை தொட்டு, எனது பெயரைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு ஏற்பட்ட பல்லி தோஷம் அகன்று, சாபத்தில் இருந்து விடுபடுவார்கள்” என்று அருள்புரிந்ததாக ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை வரதராஜப் பெருமாளை தரிசிக்க ஒரு பக்தர் தனது மனைவியுடன் வந்திருந்தார். அப்போது கோவில் நடை சாத்தப்படும் நேரமாகிவிட்டது. அதனால் அவசர அவசரமாக அந்த பக்தர்கள் வரதராஜரின் சன்னிதிக்கு முன்புள்ள பாதையை “வரதா” என்று சொல்லி கடந்தார். அப்போது வலது காலில் ஒரு பல்லியும், இடது காலில் இன்னொரு பல்லியும் மிதிபட்டு நசுங்கின.
அந்த இரு பல்லிகளும் உடல் நசுங்கி இறக்கும் தருவாயில், வரதராஜப் பெருமாள் அந்த பல்லிகளுக்கு காட்சியளித்து, “எனது பக்தனின் பாதங்களை தாங்கிய நிலையில் இறந்த காரணத்தால் உங்களுக்கு நித்ய முக்தி அளிக்கிறேன். நீங்கள் என்னுடனேயே எப்போதும் தங்கப் பல்லியாகவும், வெள்ளிப் பல்லியாகவும் இருப்பீர்கள். உங்களை தொட்டு, எனது பெயரைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு ஏற்பட்ட பல்லி தோஷம் அகன்று, சாபத்தில் இருந்து விடுபடுவார்கள்” என்று அருள்புரிந்ததாக ஒரு கதை கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X