search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜம்புகேஸ்வரர்
    X
    ஜம்புகேஸ்வரர்

    தோஷங்களை நீக்கும் ஜம்புகேஸ்வரர்

    ஜம்புகேஸ்வரரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாக, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும்.
    திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கருவறை எதிரில் வாசல்கள் கிடையாது. அதற்குப் பதிலாக ஒன்பது துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்களே காணப்படுகின்றன. இதனை ‘திருச்சாலகம்’ என்கிறார்கள். பக்தர்கள் இந்த ஒன்பது துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

    ஜம்புகேஸ்வரரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாக, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். இங்குள்ள மூலவர் சன்னிதி, சிறிது சிறிதாக கீழே இறங்கி, தரைமட்டத்துக்கும் கீழே அமைந்துள்ளது. இங்கு கருவறைக்குள் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது. ஆம்! இத்தல சிவலிங்கமே, காவிரி நீரால் உருவாக்கப்பட்டதுதான் என்கிறது தலபுராணம்.

    இங்கு ஈசன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் இருந்து அருள்பாலிக்கின்றனர். இத்தல ஜம்புகேஸ்வரரை 11 முறை வலம்வந்து வழிபடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது. வல்வினைகள் எனும் பாதகங்கள், கிரக தோஷ கெடு பலன்கள், உடல் நோய்கள், வறுமை, பாவங்கள் விலகிச் செல்ல ஜம்புகேஸ்வரரை வலம்வந்து வழிபட வேண்டும்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில், திருவரங்கம் அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவானைக்காவல் திருத்தலம் அமைந்துள்ளது.


    Next Story
    ×