search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைத்தமாநிதி பெருமாள்
    X
    வைத்தமாநிதி பெருமாள்

    குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் வைத்தமாநிதி பெருமாள்

    திருக்கோளூர் ஸ்தலத்து வைத்தமாநிதி பெருமாளை நேரிடையாக சந்தித்து மனமுருகி பிரார்த்தனை செய்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பலன் உண்டாகும்.
    திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் வருவது திருக்கோளூர். இங்குதான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வைத்தமாநிதி பெருமாள்.

    இக்கோவில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. குபேரன் பார்வதியை கடை கண்ணால் பார்த்ததால் சாபத்திற்குள்ளாகி, பின்பு சிவனால் பரிகாரம் பெற்று வைத்தமாநிதியை வழிபட்டார் என்று வரலாறு உண்டு. ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

    அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும்.

    இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மதுரகவி யாழ்வாரின் அவதார தலமிது. தர்மம் நித்தியவாசம் செய்யும் புனித பூமி இது. நம்மாழ்வாரின் பாசுரங்கள், இதன் மகிமையை பறைசாற்றுகின்றன.
    ஒரு தடவை குபேரன் பார்வதி தேவியிடம் மரியாதை இல்லாமல் நடக்க, பார்வதி தேவி குபேரனை சபித்துவிட்டார். இதனால் குபேரனை சுற்றி சூழ்ந்து கொண்டிருந்த எல்லாவகை செல்வங்களும் அவனை விட்டு விலகிவிட்டன. உடனே குபேரன் இந்த கோளூருக்கு வந்து திருமாலின் கருணைக்காக நீண்ட நாட்களாக தவம் புரிந்தான்.

    பகவானும் பார்வதி தேவியின் சாபத்தை போக்கி நவநிதிகளை மீண்டும் குபேரனுடன் இணைய வைத்தார். தர்மதேவதை இங்கு தங்கி தினமும் திருமாலை வழிபட்டு கொண்டிருந்தாள். இதனை கெடுப்பதற்காகவே அதர்மம் இங்கு வந்து வலிய சண்டை போட்டது. இதில் அதர்மம் தோல்வியடைந்து ஓடிவிட்டதால் இந்த தலத்திற்கு அதர்ம பிசுனம் என்று ஒரு பெயரும் உண்டு. இங்கு பொருளை இழந்தவர்கள் வேண்டினால் மீண்டும் அப்பொருளை பெறும் வகையில் அருளியதால் இது ஒரு பிரார்த்தனை தலமாக உள்ளது. இது அங்காரக கிரக தலமாக போற்றப்படுகிறது.

    நல்லவர்களின் கோபத்திற்கு ஆளாகி மனக்கஷ்டம் படுபவர்களும் இந்த தலத்து வைத்தமாநிதி பெருமாளை நேரிடையாக சந்தித்து மனமுருகி பிரார்த்தனை செய்தால் வறுமை இருக்காது. காரியத்தடைகள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பலன் உண்டாகும். 
    Next Story
    ×