search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

    செல்வ வளம் தரும், திருமண தடை நீக்கும் ரெங்கநாதர்

    ஸ்ரீரங்கம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிரதோஷம் விலகி உடனே திருமணம் கைகூடும். வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும்.
    ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் 236அடி உயரம் கொண்டது. சுக்கிரன் பூஜித்த இத்தலம் ஏழு மதில்களையும் பிராகாரங்களையும் கொண்ட மிகப்பெரிய பிரமாண்டமான கோவிலாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் பகல் பத்து இராப்பத்து திருவிழா மிகவும் சிறப்படையது.

    ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளைப் பிராட்டியாக ஏற்றுக் கொண்ட தலம். கம்பர் தாம்பாடிய ராமாயண காவியத்தை அரங்கேற்றியது இத்திருத்தலமேயாம். வைணவத்தை வளர்த்த ராமானுஜர் வைகுந்த பதவியை அடைந்ததும் இத் தலமேயாகும். இங்கு அழகிய சிங்கப்பெருமாள் சந்நிதி, வாசு தேவப் பெருமாள் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி, பிள்ளை லோகச்சாரியர் சந்நிதி, பார்த்தசாரதி சந்நிதி, உடையவர் சந்நிதி, திருப்பாணாழ்வார் சந்நிதி, கண்ணபிரான் சந்நிதி, தொண்டரடிப் பொடியாழ்வார் சந்நிதி, கூரத்தாழ்வார் சந்நிதி, வேணுகானன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, மதுரகவியாழ்வார் சந்நிதி, திருமங்கை யாழ்வார் சந்நிதி, பட்டாபிராமர் சந்நிதி, முதலணீழ்வார்கள் மூவர் சந்நிதி, தன்வந்தரிப் பெருமாள் சந்நிதி, கோபாலகிருஷ்ணன் சந்நிதி, வியாச மகரிஷி சந்நிதி, வராகப்பெருமாள் சந்நிதி, வரதராஜப் பெருமாள் சந்நிதி, ஸ்ரீநிவாசர் சந்நிதி, போஜராமர் சந்நிதி, திருமழிசையாழ்வார் சந்நிதி, திருக்கச்சி நம்பி சந்நிதி, ஆளவந்தார் சந்நிதி, கருடாழ்வான் சந்நிதி, சேனை முதலியார் சந்நிதி, துலக்கநாச்சியார் சந்நிதி, யோக நரசிம்மன் சந்நிதி, துர்க்காதேவி சந்நிதி ஆகியன உள்ளன. இதுவே பிரதான வைணவக் கோவில். சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்களும், ஆழ்வார்களும் இங்கு திருப்பணிகள் செய்து உள்ளனர்.

    தர்மவர்மன் மகளான உறையூர் நாச்சியாரும் குலசேகர மன்னன் மகளான கோகுல வல்லியும், டில்லி பாதுஷாவின் மகளான சுல்தானி என்னும் துலக்க நாச்சியாரும் இத்தலத்தில் ரங்கன்பால் ஐக்கியம் பெற்று இரண்டறக் கலந்தவர்கள்.

    சொந்த தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள், வேலை தேடுபவர்கள், ஸ்ரீரங்கம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிரதோஷம் விலகி உடனே திருமணம் கைகூடும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும்.
    Next Story
    ×