search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சதாசிவ நாதர்
    X
    சதாசிவ நாதர்

    திருமணம் தடை நீக்கும் சதாசிவ நாதர் திருக்கோவில்

    அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவிலில் அபிஷேகம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
    சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, மணமை கிராமம். இங்கு அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது.

    இந்தக் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சங்காபிஷேகம், நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, ஆருத்ரா தரி சனம் போன்ற சிறப்பு வழிபாடுகளும், திருமுறை ஓதுதல் போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் சன்னிதியில் மூன்று பவுர்ணமி தினங்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருத்தலமாக இது விளங்குகிறது.

    திருக்கழுக்குன்றம் வட்டத்தில், மணமை மதுரா லிங்கமேடு கிராமம் என இவ்வூர் குறிக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் மணமை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.
    Next Story
    ×