என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பித்ரு தோஷம் நீங்குவதற்கான எளிய பரிகாரங்கள்
Byமாலை மலர்23 July 2019 6:26 AM GMT (Updated: 23 July 2019 6:26 AM GMT)
பித்ரு தோஷம் தீர்ந்து நற்பலன்கள் ஏற்படுவதற்கான சிறந்த பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண், பெண் இருவரும் தங்களின் முற்பிறவியில் தந்தைக்கான ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்களாகவும், கார்த்திகை மாதத்தில் பிறந்த ஆண், பெண் இருவரும் முற்பிறவியில் தங்களின் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்களாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய காரணங்களால் ஏற்படும் பித்ரு தோஷத்தை போக்க கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.
ஒரு அமாவாசை தினத்தில் 100 கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு அந்த சந்தனத்தை உரசி எடுத்து, அந்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும். சிவனுக்கு செய்யப்படும் அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் நீங்கும்.
சிவன் கோவிலில் மேற்கூறிய பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, ஒரு அகத்திக்கீரை கட்டு, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தில் ஒரு பசு மாட்டிற்கு உண்ணக் கொடுக்க உங்களின் பித்ரு தோஷம் நீங்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 அமாவாசை தினத்தில் செய்வதால் பித்ரு தோஷங்கள், சாபங்கள் முழுமையாக நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.
ஒரு அமாவாசை தினத்தில் 100 கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு அந்த சந்தனத்தை உரசி எடுத்து, அந்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும். சிவனுக்கு செய்யப்படும் அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் நீங்கும்.
சிவன் கோவிலில் மேற்கூறிய பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, ஒரு அகத்திக்கீரை கட்டு, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தில் ஒரு பசு மாட்டிற்கு உண்ணக் கொடுக்க உங்களின் பித்ரு தோஷம் நீங்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 அமாவாசை தினத்தில் செய்வதால் பித்ரு தோஷங்கள், சாபங்கள் முழுமையாக நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X