என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகர ராசியினருக்கான பரிகாரங்கள்
Byமாலை மலர்19 July 2019 7:30 AM GMT (Updated: 19 July 2019 7:30 AM GMT)
மகர ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த செல்வமும், அதிர்ஷ்டமும் யோகங்களையும் பெறுவாதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
மகர ராசியினர் தங்கள் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டத்தையும், யோகங்களையும் பெறுவதற்கு வருடத்திற்கு ஒருமுறையாவது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வெங்கடாசலபதியை வழிபாடு செய்ய வேண்டும்.
அதே போன்று ஒரு மாதத்திற்கொரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்கருகில் இருக்கும் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் தீபமேற்றும் எண்ணையை தானமாக கொடுத்து வருவதால், உங்களின் கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று, அனுமனுக்கு தீபமேற்றி வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். நவக்கிரக சன்னிதியில் சனிபகவானுக்கு சங்கு பூக்களை சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி காயத்ரி மந்திரங்கள் துதித்து சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.
வசதி குறைந்த மக்களுக்கு இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அல்லது இன்ன பிற இரும்பு பொருட்களையும் வழங்குவது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு சனிக்கிழமை தினத்தில் புத்தாடை தானம் செய்வது உங்களுக்கு சனி பகவானின் அருட்கடாட்சத்தை முழுமையாக பெற்றுத் தரும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
அதே போன்று ஒரு மாதத்திற்கொரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்கருகில் இருக்கும் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் தீபமேற்றும் எண்ணையை தானமாக கொடுத்து வருவதால், உங்களின் கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று, அனுமனுக்கு தீபமேற்றி வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். நவக்கிரக சன்னிதியில் சனிபகவானுக்கு சங்கு பூக்களை சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி காயத்ரி மந்திரங்கள் துதித்து சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.
வசதி குறைந்த மக்களுக்கு இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அல்லது இன்ன பிற இரும்பு பொருட்களையும் வழங்குவது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு சனிக்கிழமை தினத்தில் புத்தாடை தானம் செய்வது உங்களுக்கு சனி பகவானின் அருட்கடாட்சத்தை முழுமையாக பெற்றுத் தரும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X