என் மலர்
ஆன்மிகம்

திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி
திருமண வயது வந்தும் திருமணம் தாமதப்படுபவர்கள், கும்பகோணம் அருகில் உள்ள திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபட்டு வரலாம்.
திருமண வயது வந்தும் திருமணம் தாமதப்படுபவர்கள், கும்பகோணம் அருகில் உள்ள திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபட்டு வரலாம்.
கோயிலில், சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து, மாலை மற்றும் எலுமிச்சைப்பழம் தருவார்கள். வீட்டுக்கு வந்ததும் மாலையையும் எலுமிச்சைப் பழத்தையும் பூஜையறையில் வைத்துவிட்டு, ஸ்நானம் செய்த பிறகு பூஜையறையில் வைத்த மாலையை அணிந்துகொண்டு, எலுமிச்சைப்பழச் சாறை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடித்துவிட்டு, இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும்.
திருமணம் ஆனவுடன், வாழ்க்கைத் துணையுடன் திருமணஞ்சேரி சென்று மீண்டும் அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும். அப்படிச் செல்லும்போது திருமணத்துக்கு முன்பு நமக்குக் கொடுத்த மாலையை எடுத்துச்சென்று கோயிலில் அதற்கு உரிய இடத்தில் சேர்க்க வேண்டும்.
கோயிலில், சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து, மாலை மற்றும் எலுமிச்சைப்பழம் தருவார்கள். வீட்டுக்கு வந்ததும் மாலையையும் எலுமிச்சைப் பழத்தையும் பூஜையறையில் வைத்துவிட்டு, ஸ்நானம் செய்த பிறகு பூஜையறையில் வைத்த மாலையை அணிந்துகொண்டு, எலுமிச்சைப்பழச் சாறை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடித்துவிட்டு, இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும்.
திருமணம் ஆனவுடன், வாழ்க்கைத் துணையுடன் திருமணஞ்சேரி சென்று மீண்டும் அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும். அப்படிச் செல்லும்போது திருமணத்துக்கு முன்பு நமக்குக் கொடுத்த மாலையை எடுத்துச்சென்று கோயிலில் அதற்கு உரிய இடத்தில் சேர்க்க வேண்டும்.
Next Story






