என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எண்ணூர் கத்திவாக்கம் புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று மாலை தேர் திருவிழா
Byமாலை மலர்7 May 2022 5:48 AM GMT (Updated: 7 May 2022 5:48 AM GMT)
சென்னை எண்ணூர் கத்தி வாக்கத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) ஆண்டு பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது.
சென்னை எண்ணூர் கத்தி வாக்கத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஏப்ரல், மே மாதங்களில் ஆண்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பெருவிழா கொண்டாட்டங்கள் கடந்த மாதம் 28ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக கொண்டாடப்பட்டு சிறப்பு ஜெபம் மற்றும் திருப்பலிகள் நடத்தப்பட்டன.
கடந்த மாதம் 29ந்தேதி ஆசிரியர் தினம், 30ந்தேதி தம்பதியர் தினம் கொண்டாடப்பட்டது. மே 1ந்தேதி உழைப்பாளர் தினமாக விழா நடத்தப் பட்டது. 2ந்தேதி உபகாரிகள் தினமாக கொண்டாடப்பட்டது. 3ந்தேதி நலம் நாடுவோர் தினம், 4ந்தேதி இளையோர் தினமாக விழாக்கள் நடத்தப்பட்டன.
நேற்று மாலை தேவ அழைத்தல் தினம் கொண்டாடப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நற்கருணை தினம் கொண்டாடப்படுகிறது. பங்கு தந்தை ஜேக்கப் மாசிலாமணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.
இன்று (சனிக்கிழமை) ஆண்டு பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு திருவொற்றியூர் பங்கு தந்தை ராக் சின்னப்பா தலைமை தாங்குகிறார்.
8ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் திருவள்ளூர் பங்கு தந்தை கிளமெண்ட் பாலா பங்கேற்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஜேக்கப் ஆல்பர்ட் செய்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பெருவிழா கொண்டாட்டங்கள் கடந்த மாதம் 28ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக கொண்டாடப்பட்டு சிறப்பு ஜெபம் மற்றும் திருப்பலிகள் நடத்தப்பட்டன.
கடந்த மாதம் 29ந்தேதி ஆசிரியர் தினம், 30ந்தேதி தம்பதியர் தினம் கொண்டாடப்பட்டது. மே 1ந்தேதி உழைப்பாளர் தினமாக விழா நடத்தப் பட்டது. 2ந்தேதி உபகாரிகள் தினமாக கொண்டாடப்பட்டது. 3ந்தேதி நலம் நாடுவோர் தினம், 4ந்தேதி இளையோர் தினமாக விழாக்கள் நடத்தப்பட்டன.
நேற்று மாலை தேவ அழைத்தல் தினம் கொண்டாடப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நற்கருணை தினம் கொண்டாடப்படுகிறது. பங்கு தந்தை ஜேக்கப் மாசிலாமணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.
இன்று (சனிக்கிழமை) ஆண்டு பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு திருவொற்றியூர் பங்கு தந்தை ராக் சின்னப்பா தலைமை தாங்குகிறார்.
8ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் திருவள்ளூர் பங்கு தந்தை கிளமெண்ட் பாலா பங்கேற்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஜேக்கப் ஆல்பர்ட் செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X