என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் பவனியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் தேர்பவனி: திரளானோர் பங்கேற்பு
மயிலாடுதுறையில் ஆண்டு திருவிழாவையொட்டி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன் அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார். கூறைநாடு பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார், ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், திருத்தொண்டர் பீட்டர் துரைராஜ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணன் “நாளைக்காக கவலைப்படாதீர்கள்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு ஆஸ்பத்திரி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன் அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார். கூறைநாடு பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார், ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், திருத்தொண்டர் பீட்டர் துரைராஜ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணன் “நாளைக்காக கவலைப்படாதீர்கள்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு ஆஸ்பத்திரி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
Next Story






