search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X
    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரத்தில் பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்படும்.
    தஞ்சை மாவட்டத்தில் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன் மற்றும்உதவி பங்குத்தந்தையர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரத்தில் பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்படும். பூண்டி மாதா பேராலய திருவிழா நாளான வருகிற 14-ந்தேதி நடைபெறும் பெரிய தேர்பவனியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தொடங்கி வைக்கிறார்.

    15-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்று மாலை கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறும். விழாவையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×