search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    லூர்து மாதா
    X
    லூர்து மாதா

    லூர்து மாதா ஆலய ஆண்டு பெருவிழா நாளை தொடங்குகிறது

    வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு திருவிழா நாளை( 23-ந் தேதி) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வில்லியனூரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்து அன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி 145-வது ஆண்டு திருவிழா நாளை (ஏப்ரல் 23-ந் தேதி )(சனிக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்திருக்கும்  ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் திருத்தல  முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி ஆண்டு திருவிழாவினை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக ஆலயத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடி யேற்றப்படுகிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள் மற்றும் தேர் பவனி நடைபெறுகிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.

    மே 1-ந் தேதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
     
    காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு புதுவை&கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்  தலைமையில் திருவிழா, மாலை திருப்பலி, இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.

    மே 2-ந் தேதி காலை 6.30 மணி திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்தந்தையர்கள் பிச்சைமுத்து, ஜோசப் சகாயராஜ், அருட்சகோதரர் ஜீவா,  அருட்சகோதரிகள் மற்றும் வில்லியனூர் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×