என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
தவக்கால சிந்தனை: இயற்கை உணவை உண்போம்
Byமாலை மலர்23 March 2022 7:49 AM GMT (Updated: 23 March 2022 7:49 AM GMT)
ஒளியின் மக்களை விட இவ்வுலகில் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்கிறார்கள்(லூக்16:8)
ஒளியின் மக்களை விட இவ்வுலகில் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்கிறார்கள்(லூக்16:8)
இயற்கை உணவு உடலுக்கும், மனதுக்கும் மிக ஏற்ற உணவுகளாகும். இதமான மென்மையான உணவுகள் பெரும்பாலும் இயற்கை உணவுகளாக அமைகிறது. முரண்பாடான உணவுகளை சாப்பிடுதல், சீரணத்திற்கு எதிரான உணவுகளை சாப்பிடுதல், பொரித்த உணவை சாப்பிடுதல் இவையெல்லம் ஆரோக்கியத்துககு எதிரானதாகும். ஆரோக்கிமாக இருக்க விரும்புகிறவர்கள் தினமும் தங்கள் வாழ்வை தண்ணீரில் தான் தொடங்குகிறார்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். இது உடலுக்கும், மனதிற்கும் ஏற்றதாகும். சமையலில் கடுகு தாளிப்பது வழக்கமான ஒன்று. கூட்டு குழம்பு இவைகளில் சுவைக்காக கடுகு தாளிக்கப்படுகிறது.. கடுகு தாளிக்கப்படுவது நிறுத்திவிட்டால் எண்ணெய் தேவைப்படாது.
ஒரு தடவை உணவு உண்டு சீரணமாவதற்கு முன் அடுத்த உணவு உண்ணக்கூடாது. இந்த உணவுகளுக்கு இடையே இடைவெளி குறையும் போது அது உடலுக்கு தேவையற்ற கேடுகளை உண்டாக்கும். மதிய உணவுக்கு பிறகும் இடைவேளையில் இனிப்புகள், மிக்சர் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாரத்துக்கு ஒருமுறை வெளியே சென்று ஓட்டல்களில் சாப்பிடும் காலசாரம் இன்று அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதனை தவிர்ப்பது நல்லது. இதனால் தான் அல்சர்போன்ற நோய்கள் உருவாகிறது.
இயற்கை உணவை விரும்புகிறவர்கள் காலை உணவாக பழங்கள் சாப்பிடலாம். வீட்டில் இருந்து கிடைக்கும் எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே. அந்த பொருட்களை உண்பது நல்லது. மதிய உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்து கொள்வது நல்லது. மாலையில் தேனீருக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது நல்லது. இரவு உணவு சாப்பிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. 7 மணியில் இருந்து 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகளை இரவில் உணவாக உண்பது நல்லது. இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் கற்றுக்கொள்கின்ற பொழுது நமது உடல் நலம் வளர்ச்சி அடைவதோடு நாமும் ஆரோக்கியமான நிலையில் வாழ்வோம். எனவே இந்த பண்பை இன்றைய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம்.
- அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
இயற்கை உணவு உடலுக்கும், மனதுக்கும் மிக ஏற்ற உணவுகளாகும். இதமான மென்மையான உணவுகள் பெரும்பாலும் இயற்கை உணவுகளாக அமைகிறது. முரண்பாடான உணவுகளை சாப்பிடுதல், சீரணத்திற்கு எதிரான உணவுகளை சாப்பிடுதல், பொரித்த உணவை சாப்பிடுதல் இவையெல்லம் ஆரோக்கியத்துககு எதிரானதாகும். ஆரோக்கிமாக இருக்க விரும்புகிறவர்கள் தினமும் தங்கள் வாழ்வை தண்ணீரில் தான் தொடங்குகிறார்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். இது உடலுக்கும், மனதிற்கும் ஏற்றதாகும். சமையலில் கடுகு தாளிப்பது வழக்கமான ஒன்று. கூட்டு குழம்பு இவைகளில் சுவைக்காக கடுகு தாளிக்கப்படுகிறது.. கடுகு தாளிக்கப்படுவது நிறுத்திவிட்டால் எண்ணெய் தேவைப்படாது.
ஒரு தடவை உணவு உண்டு சீரணமாவதற்கு முன் அடுத்த உணவு உண்ணக்கூடாது. இந்த உணவுகளுக்கு இடையே இடைவெளி குறையும் போது அது உடலுக்கு தேவையற்ற கேடுகளை உண்டாக்கும். மதிய உணவுக்கு பிறகும் இடைவேளையில் இனிப்புகள், மிக்சர் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாரத்துக்கு ஒருமுறை வெளியே சென்று ஓட்டல்களில் சாப்பிடும் காலசாரம் இன்று அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதனை தவிர்ப்பது நல்லது. இதனால் தான் அல்சர்போன்ற நோய்கள் உருவாகிறது.
இயற்கை உணவை விரும்புகிறவர்கள் காலை உணவாக பழங்கள் சாப்பிடலாம். வீட்டில் இருந்து கிடைக்கும் எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே. அந்த பொருட்களை உண்பது நல்லது. மதிய உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்து கொள்வது நல்லது. மாலையில் தேனீருக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது நல்லது. இரவு உணவு சாப்பிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. 7 மணியில் இருந்து 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகளை இரவில் உணவாக உண்பது நல்லது. இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் கற்றுக்கொள்கின்ற பொழுது நமது உடல் நலம் வளர்ச்சி அடைவதோடு நாமும் ஆரோக்கியமான நிலையில் வாழ்வோம். எனவே இந்த பண்பை இன்றைய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம்.
- அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X