search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இயேசு
    X
    இயேசு

    தவக்கால சிந்தனை: முன்னேற்றத்துக்கு தடையாகும் சாலை விபத்துகள்

    நாம் சாலை விபத்துகளில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் சாலை விதிகளை முறையாக நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    கடவுளது அன்பில் நிலைத்திருங்கள், என்றுமுள்ள நிலை வாழ்வை பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்(யூதா1:21)

    ஒரு நாட்டின் சாலை போக்குவரத்து எந்த அளவுக்கு மேம்பட்டு இருக்கிறதோ அந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரமும் முன்னேறி இருக்கிறது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமே சாலைப்போக்குவரத்து பிரமாதமாக இருக்கும். நமது நாட்டில் இப்போது சாலை போக்குவரத்து வசதிகள் விரிவடைந்து வருகிறது. சாலை  போக்குவரத்து சரியாக இல்லாத நாடுகளில் அதிக அளவில் விபத்துகள் நடக்கும். நமது நாட்டிலும் விபத்துகள் தற்போது அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி பேருக்கு மேல் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைகிறார்கள். 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறந்து விடுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது சாலைகளே. நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் 1 முதல் 2 சதவீத இறப்பை சாலை விபத்துகள் ஏற்படுகிறது. நமது நாட்டில் சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 75 ஆயிரம். ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வருகிறார்கள். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் 1.5 சதவீத விபத்துகள் நடக்கிறது. இவற்றுக்கு 2 விதமான காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. ஒன்று சாலைகள் சரியில்லை என்பது, 2 சாலை விதிகளை மதிக்கின்ற தன்மை குறைந்து கொண்டிருப்பது.

    மேற்கத்திய நாடுகளில் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொண்டுப்படும் முக்கிய பண்புகளில் சாலை விதிகளை மதிப்பதும் ஒன்று. ஆனால் நமது பகுதியில் இந்த அறிவு குறைந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்று தான் ஆகவேண்டும். எனவே நாம் சாலை விபத்துகளில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் சாலை விதிகளை முறையாக நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த விபத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×