என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
தவக்கால சிந்தனை: தற்கொலை தவறானது
Byமாலை மலர்17 March 2022 5:34 AM GMT (Updated: 17 March 2022 5:34 AM GMT)
தன்னைத்தானே அழித்து கொள்வது என்பது ஒரு சமூகத்தை மீண்டும் கீழான நிலைக்கு தான் தள்ளுகின்ற சூழ்நிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நான் உன்னோடு இருக்கின்றேன், உன்னை மீட்பதற்காக உள்ளேன் என்கிறார் ஆண்டவர் (எரேமியா 30:11)
இந்தியாவில் 5 நிமிடங்களுக்கு ஒரு நபரும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரும் தற்கொலை செய்வதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தற்கொலை என்ற எண்ணத்தோடு மனிதர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் முடிவுகள் வெளியாகின்ற போது பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற செய்திகள் தொடர்ந்து வருவது வேதனைக்குரிய செயலாகத்தான் இருக்கிறது.
தினமும் ஆசிரியர் அடித்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு மாணவர்கள் அலைவது, திரிவது இயற்கையான ஒன்று, அதற்கு காரணமாக இன்று கருதப்படுவது இன்றைய கல்வி திட்டம். ஓடியாடி விளையாடி பட்டாம் பூச்சியான் திரிந்து ஆரோக்கியமாய் கல்வி கற்று வளர வேண்டிய குழந்தைகள் இன்று அறைகளுக்குள் அடைக்கப்பட்டு கல்வி என்ற பெயரில் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த சூழல்கள் தான் தற்கொலை உணர்வுக்கு காரணம் என்று உளவியலாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இன்றைய கல்வி திட்டம் மாறுகிறதா என்றால்? இல்லை மீண்டும் மீண்டும் மாணவர்களை அடிமைப்படுத்தும் ஒரு அமைப்பாகத்தான் மாறி கொண்டிருக்கிறது. இந்த இளம் வயது கற்றல் என்பது சமுதாய வளர்ச்சியில் ஒரு நல்ல அறிகுறி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தன்னைத்தானே அழித்து கொள்வது என்பது ஒரு சமூகத்தை மீண்டும் கீழான நிலைக்கு தான் தள்ளுகின்ற சூழ்நிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுடைய மென்மையான உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமான சூழல்களில் நாம் வளர்க்கும் போது நிச்சயமாக இந்த உணர்வில் இருந்து பாதுகாக்க முடியும். முடிந்த அளவுக்கு இந்த சூழல் மறைய தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற மனநிலையோடு தொடர்ந்து பயணிப்போம்.
- அருட்பணியாளர் குருசு கார்மர், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
இந்தியாவில் 5 நிமிடங்களுக்கு ஒரு நபரும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரும் தற்கொலை செய்வதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தற்கொலை என்ற எண்ணத்தோடு மனிதர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் முடிவுகள் வெளியாகின்ற போது பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற செய்திகள் தொடர்ந்து வருவது வேதனைக்குரிய செயலாகத்தான் இருக்கிறது.
தினமும் ஆசிரியர் அடித்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு மாணவர்கள் அலைவது, திரிவது இயற்கையான ஒன்று, அதற்கு காரணமாக இன்று கருதப்படுவது இன்றைய கல்வி திட்டம். ஓடியாடி விளையாடி பட்டாம் பூச்சியான் திரிந்து ஆரோக்கியமாய் கல்வி கற்று வளர வேண்டிய குழந்தைகள் இன்று அறைகளுக்குள் அடைக்கப்பட்டு கல்வி என்ற பெயரில் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த சூழல்கள் தான் தற்கொலை உணர்வுக்கு காரணம் என்று உளவியலாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இன்றைய கல்வி திட்டம் மாறுகிறதா என்றால்? இல்லை மீண்டும் மீண்டும் மாணவர்களை அடிமைப்படுத்தும் ஒரு அமைப்பாகத்தான் மாறி கொண்டிருக்கிறது. இந்த இளம் வயது கற்றல் என்பது சமுதாய வளர்ச்சியில் ஒரு நல்ல அறிகுறி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தன்னைத்தானே அழித்து கொள்வது என்பது ஒரு சமூகத்தை மீண்டும் கீழான நிலைக்கு தான் தள்ளுகின்ற சூழ்நிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுடைய மென்மையான உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமான சூழல்களில் நாம் வளர்க்கும் போது நிச்சயமாக இந்த உணர்வில் இருந்து பாதுகாக்க முடியும். முடிந்த அளவுக்கு இந்த சூழல் மறைய தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற மனநிலையோடு தொடர்ந்து பயணிப்போம்.
- அருட்பணியாளர் குருசு கார்மர், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X