search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பரிசுத்த திருக்குடும்பம்
    X
    பரிசுத்த திருக்குடும்பம்

    நாகர்கோவில் மேலராமன் புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 14-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
    நாகர்கோவில் மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருவிழா திருப்பலி நடக்கிறது.

    திருக்குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் துரைசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா திருப்பலியும், திருக்குடும்பம் ஒரு பொறுப்பு என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் ஸ்டான்லி மறையுரையாற்றுகிறார்.

    13-ந் தேதி அன்று காலை 6 மணி திருப்பலிக்கு கார்மல் பள்ளி அருட்தந்தையர்கள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகின்றனர். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனையும், திருக்குடும்பம் ஒரு திருஅவை சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜாய் தலைமை தாங்க அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.

    14-ந்தேதி அன்று காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்தும், திருக்குடும்பம் ஒரு கோவில் சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு தேர் திருப்பலி நடக்கிறது. பிறகு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள், ஊர்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×