என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி
Byமாலை மலர்1 Oct 2021 3:59 AM GMT (Updated: 1 Oct 2021 3:59 AM GMT)
தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதா் ஆலய பெருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது.
தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதா் ஆலய பெருவிழா, கடந்த 20-ந் தேதி சிறுமலர் குருமடம் சகாயஜோசப் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா அன்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.
10-ம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா் செல்வம் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலயத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது. நிகழ்ச்சியில் பாதிரியார்கள் மரியஅரசு, தோமாஸ், ஞானப்பிரகாசம், சூசைராஜா, பனிமயம், சர்ச்சில், மார்ட்டின், தினேஷ் மற்றும் திரளான பங்கு மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை மாா்ட்டின் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
10-ம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா் செல்வம் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலயத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது. நிகழ்ச்சியில் பாதிரியார்கள் மரியஅரசு, தோமாஸ், ஞானப்பிரகாசம், சூசைராஜா, பனிமயம், சர்ச்சில், மார்ட்டின், தினேஷ் மற்றும் திரளான பங்கு மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை மாா்ட்டின் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X