என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்28 Sep 2021 4:13 AM GMT (Updated: 28 Sep 2021 4:13 AM GMT)
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை செட்டிச்சார் விளை புனித குழந்தைஏசு தெரசாள் ஆலய பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். திருத்தல அதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் தாமஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.
3-ம் நாள் திருவிழா திருப்பலி நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல் ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார். தொடர்ந்து தேர் பவனி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும், வட்டார முதல்வருமான மரிய ராஜேந்திரன், அருட்பணியாளர் மரியதாசன், பங்கு பேரவை உதவித் தலைவர் புரோடி மில்லர், செயலாளர் ஜெகதா, பொருளாளர் ஜான் பென்னட், துணைச் செயலாளர் கண்ணதாசன், வின்சன்ட் ராஜா மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர். திருவிழா 3 தினங்களிலும் அரசு வழிகாட்டுதல் முறைப்படி, சமூக இடைவெளியுடன், மறைமாவட்ட விதிமுறைப்படி நடைபெறுமென பங்கு திருத்தல அதிபரும், பங்கு பேரவை நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் தாமஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.
3-ம் நாள் திருவிழா திருப்பலி நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல் ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார். தொடர்ந்து தேர் பவனி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும், வட்டார முதல்வருமான மரிய ராஜேந்திரன், அருட்பணியாளர் மரியதாசன், பங்கு பேரவை உதவித் தலைவர் புரோடி மில்லர், செயலாளர் ஜெகதா, பொருளாளர் ஜான் பென்னட், துணைச் செயலாளர் கண்ணதாசன், வின்சன்ட் ராஜா மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர். திருவிழா 3 தினங்களிலும் அரசு வழிகாட்டுதல் முறைப்படி, சமூக இடைவெளியுடன், மறைமாவட்ட விதிமுறைப்படி நடைபெறுமென பங்கு திருத்தல அதிபரும், பங்கு பேரவை நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X